Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: பெரிய திருவந்தாதி, நம்மாழ்வார் (87 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2585பெரிய திருவந்தாதி || 1
முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய
நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்
பூவீன்ற வண்ணன் புகழ்
முயற்சி சுமந்து, Muyarchi Sumandhu - எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே உத்ஸாஹம் பூண்டு (- (இதுவே நீயும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம்.))
எழுந்து, Ezhunthu - கிளம்பி
முந்துற்ற நெஞ்சே, Mundru Nenjhe - (அவ்விஷயத்தில் என்னைவிட) முற்பட்டிருக்கிற மனமே!
நீ எம் எம்மொடு கூடி, Nee Em Emmodu Koodi - நீ (தனிப்பட்டுப் போகாமல்) என்னோடு சேர்ந்து
இயற்றுவாய், Iyattruvai - காரியத்தை நடத்த வேணும்; (நாம் இருவருஞ் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம் என்னவென்றால்)
நல் பூவைப்பூ ஈன்ற வண்ணான், Nal Poovai Poo Eendra Vannaan - (அழகிய காயாம் பூவிலுண்டான நிறம் போன்ற நிறத்தையுடையனான எம்பெருமானுடைய
புகழ், Pugazh - திருக்கல்யாணகுணங்களை
நயப்பு உடைய, Nayappu Udaya - அன்பு பொதுந்திய
நா ஈன், Na Een - நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற
தொடை கிளவியுள், Thodai Kilaviyul - சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே
பொதிவோம், Podivom - அடக்குவோமாக.
2586பெரிய திருவந்தாதி || 2
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம்
மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இவை.
எம் கண், Em Kan - எங்களிடத்தில் (- (ஆக இப்படிப்பட்ட உண்மையை நாங்கள் நன்கு அறிந்திருந்தும் உன்னைப் புகழாமலாவது மதியாமலாவது இருக்கப் போகிறதில்லை; புகழ்வதும், மதிப்பதும் செய்யத்தான் போகிறோம்.))
மால், Maal - வ்யாமோஹகத்தையுடைய
செம் கண் மால், Sem Kan Maal - புண்டரீகாக்ஷனான பெருமானே,
புகழ்வோம், Pugazhvom - (ஒருவராலும் புகழ்ந்து முடிக்கவொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில்
பழிப்போம், Pazhippom - (அயோக்யர் புகழ்வது புகழ்ச்சியன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய்விடுவோம்;
புகழோம், Pugazhom - (இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு) புகழாதிருந்தோமாகில்
பழியோம், Pazhiyom - உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம்;
மதிப்போம், Mathippom - உன்னைச் சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோமாகிலும்
இகழ்வோம், Ikazhvom - உன்னை அகௌரவப்படுத்தினவர்களாக ஆய்விடுவோம்;
மதியோம், Madhiyom - அப்படி நெஞ்சால் நினையாதிருந்தோமாகில்
இகழோம், Ikazhom - அகௌரவப்படுத்தாதவர்களாக ஆவோம்;
நீ சீறல், Nee Seeral - நீ கோபங்கொள்ளலாகாது;
இவை, Ivai - புகழ நினைப்பதும் (பிறகு) புகழலாகாதென்று பின் வாங்குவதுமாகிற இவை
தீ வினையோம் எங்கள் மால் கண்டாய், Thee Vinaiyom Engal Maal Kandaai - மஹாபாவிகளான எங்களுடைய ப்ரமமேயாம்.
2587பெரிய திருவந்தாதி || 3
இவையன்றே நல்ல இவையன்றே தீய,
இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம்
என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,
என்னால் செயற்பால தென்?
இறையவனே, Iraiyavane - எம்பெருமானே!
இவை அன்றே நல்ல, Ivai Anrae Nalla - உன்னைப் புகழாமையும் சிந்தியாமையுமாகிற இவையன்றோ நல்லது;
இவை அன்றே தீய, Ivai Anrae Theeya - உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதுமாகிற இவையன்றோ கெட்டது;
இவை இவை என்ற அறவனேனும், Ivai Ivai Endra Aravaneenum - (ஆகவே) ‘இன்னது இப்படிப்பட்டது’ என்று நான் உண்மையில் தெரிந்து கொண்டிருக்கிறேனாகிலும்
இவை எல்லாம், Ivai Ellam - புகழாமையும் மதியாமையும், புகழ்தலும் மதித்தலுமாகிய இவையெல்லாம்
என்னால், Ennal - என்னாலே
அடைப்பு நீக்கு ஒண்ணாது, Adaippu Neekku Onnaadhu - பற்றவும் முடியாது, விடவும் முடியாது;
என்னால் செயற்பாவது என், Ennal Seyarpaavathu En - (சபலனான) என்னாலே செய்யக்கூடியது என்ன இருக்கிறது?
2588பெரிய திருவந்தாதி || 4
என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்
றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்
பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று.
என்ன, Enna - என்னுடையவனான
நரும் சோதி கண்ணன், Narum Sothi Kannan - கறுத்த நிறத்தையுடைய ஸ்ரீக்ருஷ்ணனும்
கடல்  புரையும் சீலன், Kadal Puraiyum Seelan - கடல் போன்ற (கம்பீர) ஸ்வபாவ முடையவனும்
பெரும் சேயதிக்கு, Perum Seyathikku - மிகப் பெரிய சோதிவடிவமானவனுமான எம்பெருமானுக்கு
என் நெஞ்சு ஆள் பெற்று, En Nenju Aal Petru - என்னுடைய நெஞ்சானது அடிமைப்பட்டதனால்
என்னில், Ennil - என்னைவிட
மிகு புகழார் யாவரே, Migu Pugazhaar Yaavare - மிக்க புகழுடையவர் யார் கொல்?
மற்று பிள்ளையம் எண்ணில், Mattru Pillaiyam Ennil - இன்னமும் ஆராய்ந்து பார்க்குமளவில்
மிரு புகழோன் யான் அல்லால், Miru Pugazhon Yaan Allaal - மிக்க புகழுடையவன் தவிர வேறு யாருமில்லை.
2589பெரிய திருவந்தாதி || 5
பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையா ராவாரும் நீபேசில்,- எற்றேயோ!
மாய! மா மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா! காட்டும் நெறி.
மாய, Maaya - மாயவனே!
அம்மா, Amma - ஸ்வாமியே!
பேசில், Pesil - உன்னால் நான் பெய்ய உபகாரங்களைப் பேசப் புகுந்தால்
பெற்ற தாய் நீயே, Petra Thaai Neeye - பெற்றதாய் போலே ப்ரியமானதையே செய்பவனும் நீயே;
பிறப்பித்த தந்தை நீ, Pirappiththa Thandhai Nee - உண்டாக்கின பிதாவைப் போல ஹிதமானதையே செய்பவனும் நீயே;
மற்றையர் ஆவாரும் நீ, Mattraiyar Aavaarum Nee - மற்றும் ஆசாரியரும் நீயே;
மா மாயவளை மாய, Maa Maayavalai Maaya - மஹத்தான வஞ்சனையையுடைனான பூதனையை முடிப்பதற்காக
முலை, Mulai - (அவளது விஷந்தடவின) முலையை
வாய் வைத்த நீ, Vaai Vaiththa Nee - அமுது செய்த நீ
காட்டும் நெறி, Kaattum Nerii - எனக்குக் காட்டின வழிகள்
எற்றே ஓ, Ettre O - என்ன ஆசாரியமானவை ( என்று உருகுகிறார்.)
2590பெரிய திருவந்தாதி || 6
நெறிகாட்டி நீக்குதியோ? நின்பால் கருமா
முறிமேனி காட்டுதியோ? மேனாள்-அறியோமை
எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே! ஈதுரையாய்
எஞ்செய்தா லென்படோம் யாம்?
கண்ணனே, Kannane - எம்பெருமானே!
நெறி காட்டி நின்பால் நீக்குதியோ, Nerii Kaatti Ninpaal Neekuthiyo - கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களைக் காட்டி (இவற்றை அநுஷ்டித்துப் பலன் பெறுவாய் என்று சொல்லி என்னை) கைவிட்டு விடப் பார்க்கிறாயோ? (அல்லது)
கரு மா முறி மேனி காட்டுதியோ, Karum Maa Muri Meeni Kaattuthiyo - கறுத்த மாமரத்தின் தளிர் போன்ற (உனது) திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து அநுப்ரஹிக்க நினைக்கிறாயோ?
மேல் நாள், Mel Naal - அநாதி காலமாக
அறியோமை, Ariyomai - அறியாதவர்களான எங்களை
என் செய்வான் எண்ணினாய், En Seivaan Enninai - என்ன செய்வதாக திருவுள்ளம் பற்றியிருக்கிறது?
ஈது உரையாய், Eethu Uraiyaai - தேவரீருடைய திருவுள்ள மின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்;
என் செய்தால், En Seithal - நீ எமக்கு என்ன நன்மையைச் செய்தாலும்
யாம் என் படோம், Yaam En Padom - யாம் என்ன அநர்த்தத்தைத்தான் அநுபவிக்க மாட்டோம்.
2591பெரிய திருவந்தாதி || 7
யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார்
தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த
அம்மா!நின் பாதத் தருகு.
பூ மேய, Poo Meyya - தாமரைப்பூவில் பொருந்தியிருக்கிற
செம் மாதை, Sem Maathai - *ஹிரண்ய வர்ணையான பிராட்டியை
நின் மார்வில் சேர்வித்து, Nin Maarvil Serivithu - உனது திருமார்விலே சேர்த்துக் கொண்டானாயும்
பார் இடந்த, Paar Idantha - (பிரளயத்திலழுந்திக் கிடந்த) பூமியைக் குத்தியெடுத்தவனாயுமிருக்கிற
அம்மா, Amma - ஸ்வாமீ!
நின் பாதத்து அருகு, Nin Paadaththu Arugu - தேவரீருடைய திருவடிகளின் சமீபத்திலே
என் நெஞ்சினார் தாமே, En Nenjinnaar Thaame - என்னுடைய நெஞ்சதானே
அணுக்கர் ஆய் சார்ந்தொழிந்தார், Anukkara Aayi Sarnthozhindhaar - அந்தரங்கமாகச் சென்று சேர்ந்துவிட்டது;
அரு வினையோம், Aru Vinaiyom - போக்க முடியாத பாவத்தைப் பண்ணியுள்ள
யாமே, Yaame - நாங்கள் மாத்திரம்
சேயோம்., Seyyom - தூரத்திலிருக்கிறோம்.
2592பெரிய திருவந்தாதி || 8
அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே
பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம்
பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம் கண்காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு.
பருகலாம் பண்பு உடையீர், Parugalaam Panbu Udaiyeer - வாய்மடுத்துப் பானம் பண்ணுதற்கு உரிய திருக்குணங்களையுடையவரே!
பார் அளந்தீர், Paar Alandheer - (த்ரிவிந்தரமாவதாரத்தால்) பூமியெல்லாமனந்தவரே!
பாவியேம் கண் காண்பு அரிய நுண்பு உடையீர், Paaviyeem Kan Kaanbu Ariya Nunbu Udaiyeer - பாவிகளான எங்களுடைய கண்களாலே காண முடியாத வைவக்ஷண்யத்தை யுடையவரே!
நும்மை, Nummai - உம்மை
அருகும், Arugum - கிட்டுவதையும்
சுவடும், Suvadum - சிட்டுவதற்கான உபாயத்தையும்
தெரிவு உணரோம், Therivu Unarom - (நாங்கள்) பகுத்தறிந்தோமில்லை; (அப்படியிருக்கச் செய்தேயும்)
நுமக்கே, Nummaikkee - உம் விஷயத்திலேயே
அன்புமிக பெருமை, Anbumiga Perumai - (எமக்கு) ஆசையானது மிகவும் பெருகா நின்றது;
இது என், Idhu En - இதற்கு என்ன காரணம்?
பேசீர், Pesir - நீர்தாம் சொல்லவேணும்.
2593பெரிய திருவந்தாதி || 9
நுமக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென்?, மாலார்
தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால் – எமக்கினி
யாதானு மாகிடுகாண் நெஞ்சே! அவர்த்திறத்தே
யாதானும் சிந்தித் திரு.
நெஞ்சே, Nenje - ஓ மனமே!
(மாலார்) அவர் தாம், Malar Avan Thaam - எம்பெருமானாகிற அப்பெரியவர் தாம்
சார்வு அரியர் ஆனால், Saarvu Ariyar Anaal - நமக்குக்கிட்ட முடியாதவராயிருக்கும்போது
நொந்து உரைத்து என், Nondhu Uraithu En - வாய் நோவச் சொல்வதில் என்ன பயன்?
இனி, Ini - இன்று முதலாக
எமக்கு ஆதானும்  ஆகிடு காண், Emakku Aadhanum Aagidu Kaan - நமக்கு எது வேணுமானாலும் நேரட்டும்;
மாலார் தமக்கு, Malar Thamakku - அவ்வெம்பெருமானை நோக்கி
நுமக்கு அடியோம் என்று என்று, Numakku Adiyom Endru Endru - “நாங்கள் உமக்கு அடிமைப்பட்டவர்கள்” என்று பல தடவை
அவர் திறத்தே, Avar Thiraththae - அப்பெருமான் விஷயமாகவே
யாதானும் சிந்தித்து இரு, Yaadhanum Sindhiththu Iru - எதையாவது சிந்தித்துக்கொண்டு கிடப்பாயாக.
2594பெரிய திருவந்தாதி || 10
இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ
டொருநால்வர் ஓரிருவர் அல்லால்,- திருமாற்கு
யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்.
இரு நால்வர், Iru Naalvar - அஷ்ட வஸுக்கவென்ன
ஈரைந்தின் மேல் ஒருவர், Eeraindhin Mel Oruvar - ஏகாதசருத்ரர் களென்ன
எட்டோடு ஒரு நால்வர், Ettodu Oru Naalvar - த்வாதசாதித்யர்களென்ன
ஓர் இருவர் அல்லால், Oru Irivar Allaal - அச்ஸிநீ தேவர்களென்ன ஆகிய முப்பத்துமூவரமரர்கள் தவிர (மற்றவர்களான)
யாம், Yaam - நாம்
திருமாற்கு, Thirumaarku - எம்பெருமானைப் பணிவதற்கு
வணக்கம் ஆர், Vanakkam Aar - நம்முடைய பணிவுதான் எத்தன்மையது!
ஏ பாவம், Ae Paavam - அந்தோ!;
நல் நெஞ்சே, Nal Nenje - நல்ல மனமே!
நாமா, Naamaa - நாமோ வென்றால்
மிக நாழ் உடையோம், Miga Naazh Udayom - மிகவும் குற்றமுள்ளவர்களாயிருக்கிறோமிறே.
2595பெரிய திருவந்தாதி || 11
நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,
வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத
பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,
நீரும்நீ யாய்நின்ற நீ.
ஆழாத பாரும் நீ, Aazhaadha Paarum Nee - (நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு;
நீரும் நீ, Neerum Nee - ஜலதத்வமும்*;
தீயும் நீ, Theeyum Nee - தேஜஸ்தத்வமும் நீ;
காலும் நீ, Kaalum Nee - வாயுதத்வமும் நீ;
வானும் நீ, Vaanum Nee - ஆகாசமும் நீ;
ஆய் நின்ற நீ, Aay Nindra Nee - இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாகவுடைய நீ,
நாழால் அமர் முயன்ற, Naazhaal Amar Muyantra - அஹங்காரத்தினால் யுத்தம் செய்வதில் கைவைத்த
வல் அரக்கன், Val Arakkan - கொடிய இராவணனுடைய
இன் உயிரை, In Uyirai - இனிமையான பிராணனை
வாழா வகை, Vaazha Vagai - வாழ்ந்திருக்க ஒட்டாமல்
வலிதல், Valithal - கவர்ந்து கொண்டது
நின்வலியே, Ninvaliye - உனக்கு ஒரு சூரத்தனமோ? அல்ல.
2596பெரிய திருவந்தாதி || 12
நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்?
போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும்
காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.
நெஞ்சே, Nenje - ஓ மனமே! (- (என்னை வருத்தத்திற்கு ஆளாக்கப் பார்த்தது நீயேயன்றோ.) (உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்வித்துக் கொள்ளுகிறீர்’ என்ற நெஞ்சு பதில் சொல்ல) (உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்’ என்று நெஞ்சு பதில் சொல்ல) (இப்போது முடிவாகச்சொல்கிறேன் கேள்;)- (கண்டாய்  –  முன்னிலையசை))
ஆழ் துயரில், Aazh Thuyaril - அநாதமான துக்க ஸாகரத்தில்
வீழ்விப்பான், Veelvippaan - என்னைக் கொண்டு போய்த் தள்ளுவதாக
நின்று உழன்றாய் நீ அன்றே, Nindru Uzhandraai Nee Andrae - இடைவிடாதே நின்று யத்னம் பண்ணினது நீயன்றோ;
போய் ஒன்று சொல்லி என், Poi Ondru Solli En - மேன்மேலும் நீயொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ, Po - அது கிடக்கட்டும்.
உபதேசம்தரினும், Upadesamtharinum - (எம்பெருமானுக்கு நம்பக்கல் உள்ளூற வாத்ஸல்ய முண்டு’ என்று உனக்கு நான்) உபதேசித்தாலும்
நீ காழ்ந்து என்றும் கைக்கொள்ளாய், Nee Kaazhndhu Endrum Kaikkollai - நீ என்மேற் கோபங்கொண்டு என்றைக்கும் (அவ்வுபதேசத்தைக்) குறிக்கொள்கிறாயில்லை;
போய் ஒன்று சொல்லி என், Poi Ondru Solli En - மேன்மேலும் நீ யொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ, Po - அது கிடக்கட்டும்.
கண்ணன் தான், Kannan Thaan - எம்பெருமானது திருவடிகளை
வாழ்த்துவதே, Vaazhthuvathe - வாழ்த்துவதுதான்
வழக்கு, Vazhakku - நியாயம்
2597பெரிய திருவந்தாதி || 13
வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,
இழக்கவும் காண்டும் இறைவ.- இழபுண்டே,
எம்மாட் கொண்டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்
தம்மால்காட் டுன்மேனிச் சாய்.
வழக்கொடு மாறுகொள் அன்று, Vazhakkodu Maarugol Andru - (இப்போது அடியேன் விஜ்ஞாபிக்கப் போகிற ஒரு விஷயம்) நியாத்தோடு மாறுபட்டதன்று; (- (அஃது என்னவெனில்))
அடியார் வேண்ட, Adiyaar Venda - (மேன்மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்களாகில்
இழக்கவும் காண்டும், Izhakkavum Kaandum - (மேன்மக்கள் நஷ்டப்பட்டாகிலும் காரியம் செய்வதை உலகில்) காண்கிறோம்;
இறைவ, Iraiva - ஸ்வாமீ!
இழப்பு உண்டே, Izhappu Unde - (என்வேண்டுகோளை நிறைவேற்றுதற்காக) கஷ்டப்படவேண்டியது ஏதேனுமுண்டோ? (ஒன்றுமில்லை)
யான் வேண்ட, Yaan Venda - என்னுடைய வேண்டுகோளுக்காக
எம் ஆள் கொண்டு ஆகிலும், Em Aal Kondu Aagilum - என்னை அடிமைப்படுத்திக் கொண்டாவது
என் கண்கள் தம்மால், En Kangal Thammaal - எனது கண்களுக்கு
உன்மேனி சாய், Unmeeni Saai - உனது திருமேனியின் ஒளியை
காட்டு, Kaattu - காட்டியருள வேணும்
2598பெரிய திருவந்தாதி || 14
சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே,
பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த்
தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம்
பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து.
நெஞ்சே, Nenje - ஓ மனமே! (- (அப்பெருமானைக் கொன்றுவிட நினைத்து) (இப்படிக் கேட்பது எதுக்காக? என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள்;))
பேயார், Peyaar - பூதனையானவள்,
சாயால் கரியானை, Saayal Kariyanai - நிறத்தால் கரியனான கண்ணபிரானை
உன் அறியார் ஆய், Un Ariyaar Aay - உள்ளே புகுந்து அநுபவிக்க அறியாதவளாய்
பேயர் ஆய், Peyar Aay - அறிவுகெட்டவளாய்
முலை கொடுத்தார், Mulai Koduththaar - (விஷம் தடவின) முலையை (உண்ணக்) கொடுத்தாள்;
நீ ஆர், Nee Aar - அவளுக்கு நீ உறவு முறையில் என்ன ஆகவேண்டும்?
தேம்பு ஊண் சுவைத்து, Theembu Oon Suvaiththu - ஆத்மா கெட்டுப்போம்படியான சப்தாதி  விஷய போகங்களை நீ அநுபவித்து
ஊன் அறிந்து அறிந்தும், Oon Arindhu Arindhum - (அதனால்) ஊனமடைந்திருக்கிறாயென்பதை நன்றாக நீ அறிந்திருந்தும்
போய், Poy - நம்முடைய தாழ்வுக்குத் தகாததான சிறந்த பகவத் விஷயத்தை அநுபவிப்பதாகப்) போய்
தீ வினை ஆம்பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி, Thee Vinai Aampam Paar Vaai Kain Neettal Paarthi - அநர்த்தத்தை விளைக்கவல்ல பாம்பின் வாயிலே கை வீட்டுவாரைப் போலலே பகவதநுபவம் பண்ணி மூடியப் பார்க்கிறாயே.
2599பெரிய திருவந்தாதி || 15
பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம்
பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம்
தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய
செம்மேனிக் கண்வளர்வார் சீர்.
நெஞ்சே, Nenje - ஓ மனமே!
ஓதம், Otham - கடலானது
ஆர்த்து, Aarththu - கோஷித்துக்கொண்டு
தம்மேனி தாள், Thammeeni Thaal - தம்முடைய திருமேனியையும் திருவடியையும்
தடவ, Thadava - (அலையாகிற கையினாலே) தடவும்படியாக
தாம் கிடந்து, Thaam Kidandhu - (அக்கடலில்) பள்ளி கொண்டருளி
தம்முடைய செம்மேனி கண் வளர் வார், Thammudaiya Semmeeni Kan Valar Vaar - தம்முடைய செந்நிறமான திருக்கண்கள் வளரப்பெறுகின்றவரான பெருமாளுடைய
சீர், Seer - திருக்குணங்களை,
படு துயரம் பேர்த்து ஓத, Padu Thuyaram Perthu Otha - கொடிய துக்கங்கள் தீரும்படி நாம் பேசுவதனால்
பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை, Peedu Azhivu Aam Peechu Illai - அவனுடைய பெருமைக்கு அழிவு உண்டாய்விடுமென்பதில்லை;
எதிரிதா பார்த்து ஓர், Edhiridha Paarthu Oor - (இவ்விஷயத்தை) கண்ணெதிரே நிற்பதாகக் கண்டு தெரிந்துகொள்.
2600பெரிய திருவந்தாதி || 16
சீரால் பிறந்து சிறப்பால் வளராது,
பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப்
புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே?
சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து.
பேராளா, Peraala - ‘மஹாநுபாவனான பெருமானே!
சீரால் பிறந்து சிறப்பால் வளராது, Seeraal Pirandhu Sirappaal Valaraadhu - சிறப்புடன் பிறப்பதையும் சிறப்புடன் வளர்வதையும் செய்யாமல்
பேர் வாமன் ஆகாக்கால், Peer Vaaman Aagaakkal - திருநாமம் வ மானென்று வைத்துக் கொள்ளாமலிருந்தால்
மார்பு ஆர புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி, Maarbu Aara Pulki Nee Undu Umizhndha Bhoomi - உன்னாலே மார்பால் அணையப்பட்டும் வயிற்றில் வைக்கப்பட்டும் பின்பு வெளிப்படுத்தப்பட்டும் இப்படி ஸ்வாதீநமாயிருந்த இப்பூமியானது.
நீர் ஏற்பு அரிதே, Neer Erppu Aridhe - தாரை வார்த்து தத்தம் பண்ணிக் கொடுக்கப்பெற முடியாதோ?’
யாம் அறிய, Yaam Ariya - இவ்விஷயத்தை அடியோம் தெரிந்து கொள்ளும்படி
நீ சூழ்ந்து சொல்லு, Nee Soozhndhu Sollu - நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேணும்.
2601பெரிய திருவந்தாதி || 17
சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய,
தாள்வரைவில் லேந்தினார் தாம்.
எங்கும் சூழ்ந்து, Engum Soozhndhu - நாற்புறங்களிலும் சுற்றிக்கொண்டு
அரக்கன், Arakkan - இராவணனுடைய
வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடிய, Vaal Varaigal Pol Van Thalaigal Thaam Idhiya - ஒளி பொருந்திய, மலைகள் போல் வலிதான தலைகளானவை இற்று விழும்படி
தாள்வரைவில் ஏந்தினார் தாம், Thaalvaraivil Aendhinar Thaam - காலுரத்தை யுடைத்தாய் மலை போன்றதான வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்
சூழ்ந்து, Soozhndhu - (இந்த லீலா விபூதியிலே வந்து) வளைத்துக் கொண்டு
அடியார் வேண்டின் அக்கால், Adiyaar Veenin Akkal - ‘ஓ ஜனங்களே! நீங்கள் எனக்கு அடிமைப்பட வேணும்’ என விரும்பினால்
தோன்றாது விட்டாலும், Thondraathu Vittaalum - ஒரு அடியவனும் அகப்படாதபடி உபேக்ஷிக்கப் பெற்றாலும்
வாழ்ந்திடுவர், Vaazhnthiduvar - திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்) உகந்தேயிருப்பர்;
பின்னும், Pinnum - எக்காலத்திலும்
தம் வாய் திறவார், Tham Vaai Thiravaar - (பிராட்டிமாரிடத்திலும் இந்த மனக் குறையை) வாய் திறந்து சொல்லிக்கொள்ளமாட்டார்.
2602பெரிய திருவந்தாதி || 18
தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக,
பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப்
பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.
தாம்பால் ஆப்புண்டாலும், Thaampaala Aappundhaalum - (அசோதையினால்) தாம்பு கொண்டு கட்டியடிக்கப் பெற்றாலும்
அத்தழும்புதான் இளக, Aththalumbudhaan Ilaga - அந்தத் தாம்பினால் கட்டினத்தாலுண்டான காய்ப்பு அற்பதம் என்னும்படி
பாம்பால், Paampaala - காளியனாகிய பாம்பினால்
ஆப்புண்டு, Aappundu - கட்டப்பட்டு
பாடு உற்றாலும், Paadu Utralaam - கஷ்டங்களையடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்)
சோம்பாது, Soombaadhu - (ஜகத்ஸ்ருஷ்டியில்) சோம்பல்படாமல்
இ பல் உருவை எல்லாம், I Pal Uruvai Ellam - இவ்வுலகில் காணப்படுகிற பலபல பிராணிகளையெல்லாம்.
படர்வித்த, Padarvitha - விஸ்தாரமாக வுண்டாக்கின
வித்தா, Viththa - ஆதிமூலமே!
உன் தொல் உருவை ஆர் அறிவார், Un Thol Uruvai Aar Arivaar - உன்னுடைய திவ்ய ஸ்வரூபத்தை அறிவாருண்டோ?
சொல்லு, Solla - நீயே சொல்லு.
2603பெரிய திருவந்தாதி || 19
சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே,
எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண்
மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக,
காத்தானைக் காண்டும்நீ காண்.
சூது அறியா நெஞ்சமே, Soodhu Ariyaa Nenjamai - செய்ய வேண்டியது இன்னதென்றறியாமல் தளும்புகிற மனமே! (- (மெய்யே காண விரும்பினால்))
சொல்லில் குறை இல்லை, Sollil Kurai Illai - பகவத் விஷயத்தைப் பேசினால் பேச்சில் குறையில்லை; (அல்லது) நமக்கொரு குறையில்லை;
தொல்லை கண், Thollai Kan - அநாதியான இப்பூமியில்
மா தானைக்கு எல்லாம், Maa Thanaikku Ellam - (துரியோதநாதிகளுடைய) பெரிய சேனைகளுக்கெல்லாம்.
ஓர் ஐவரையே மாறு ஆக, Oor Aivaraie Maaru Aaga - பஞ்சபாண்டவர்களே எதிரிகளாம் படி
எல்லி பகல் என்னாது எப்போதும் காத்தானை, Elli Pagal Ennaadhu Eppodhum Kaathaanai - இரவுபகலென்னாமல் எக்காலத்திலும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை
காண்டும், Kaandum - காண்போம்!
நீ காண், Nee Kaan - நீ காணலாம்.
2604பெரிய திருவந்தாதி || 20
காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,
நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி
உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,
திருவாகம் தீண்டிற்றுச் சென்று.
அறிவு கைக் கொண்ட நல் நெஞ்சம், Arivu Kaik Konda Nal Nenjam - அறிவுடைய நல்ல நெஞ்சே
மாணி உரு ஆகிக்கொண்டு, Maani Uru Aagikkondu - வாமநரூபியாய்
உல்கம் நீர் ஏற்ற சீரான், Ulgam Neer Aetra Seeraan - (மாவலியிடத்திற் சென்று) உலகங்களை நீரேற்றப் பெற்ற சீர்மை பொருந்திய திருமால்.
சென்று, Sendru - தானே எங்கும் பரவி
திரு ஆகம, Thiru Aagama - தனது திருமேனியினாலே
தீண்டிற்று, Theendirru - உலகங்களையெல்லாம் தீண்டினானென்பதை
காணப்புகில், Kaanappugil - ஆராய்ந்தோமாகில்
நாம் பேசில், Naam Pesil - நாம் பேசும் வார்த்தைகளுக்கு
நாணப்படும் அன்றே, Nanappatum Anre - வெட்கப்பட வேண்டுமன்றோ
2605பெரிய திருவந்தாதி || 21
சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப்
பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய,
காருருவன் தான்நிமிர்த்த கால்.
அன்று, Anru - முன்பு மாவலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில்
அங்கு, Anku - அந்த மாவலியின்யாக பூமியிற் சென்று
பார் உருவும், Par Uruvum - பூமியாகிறஸ்துவும்
பார் வளைத்த நீர் உருவும், Par Valaitta Nir Uruvum - அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற ஜலதத்துவமும்
கண் புதைய, Kan Pudaiya - மறையும்படி
கார் உருவன் தான் நிமிர்த்த கால், Kar Uruvan Tan Nimirtta Kal - காளமேகத் திருவுருவனான எம்பெருமான் நிமிர்த்தருளிய திருவடிகள்
அங்கு வெம் நரகில் சென்று சேராமல் காப்பதற்கு, Anku Vem Narakil Cenru Ceramal Kappatarku - கொடிய அந்த நரகங்களிலே நான் சென்று சேராதபடி என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு
இன்று, Inru - இப்போது
இங்கு, Inku - இவ்விடத்தில்
என் நெஞ்சால், En Nencal - என்னுடைய நெஞ்சிலே
இடுக்குண்ட, Itakkunta - நெருக்குப்பட்டுக்கிடக்கின்றன.
2606பெரிய திருவந்தாதி || 22
காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்,
மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால்
தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம்,
வீற்றிருக்குமிடம் காணா திளைத்து.
என் மனத்தே, En Manatte - எனது நெஞ்சினுள்ளே
மாலால் குடி புகுந்தார், Malal Kuti Pukunrar - திருமால் வந்து சேர்ந்துவிட்டார்;
வல் வினையார் தாம், Val Vinaiyar Tam - (இதுவரையில் இங்கே குடியிருந்த) கொடிய பாவங்கள்.
வீற்றிருக்கும் இடம் காணாது, Virrirukkum Itam Kanadu - (இனிமேலும்) அதிகாரம் செலுத்திக்கொண்டு தங்கியிருக்க இடம் காணாமல்
கால் பொத திரிந்து, Kal Pota Tirintu - கால் நோவத்திரிந்து அலைந்ததனால்
மேலால், Melal - முன்பெல்லாம்
தருக்கும், Tarukkum - என்னைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்த
இடம் பாட்டினொடும், Itam Pattinotum - பெருமையோடே
இளைத்து, Ilaitthu - வருத்தமுற்று
இன்நாள், Innaal - இப்போது
கத்துவாரம், Kattuvaaram - கத்திக்கொண்டு கிடக்கின்றன போலும்.
2607பெரிய திருவந்தாதி || 23
இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன்,
இளைக்க நமன்தமர்கள் பற்றி – இளைப்பெய்த,
நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,
தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
நமன் தமர்கள், Naman Thamarhal - யமபடர்கள்
இளைக்க பற்றி, Ilaiyka Patri - பிடிக்கிற பிடியிலே நாம் துடிக்கும்படி நம்மைப் பிடித்து
இளைப்பு எய்த, Ilaiyppu Eitha - அதற்கு மேலும் அதிகமாகத் துடிக்கும்படி
நாய்தந்து மோதாமல், Naithandu Moothamal - நாய்களை ஏவி நலியாமற்படி
நங்குவான் நல்காப்பான், Nanguvaan Nalkaappaan - (எம்பெருமான் நமக்கு) அருள் செய்தாலும் சரி, அருள் செய்யாவிட்டாலும் சரி;
தான், Thaan - அந்த எம்பெருமான்தான்
எவ்வுயிர்க்கும், Evvuirkkum - எல்லாப்பிராணிகளுக்கும்
தாய் தந்தை, Thaai Thandai - தாயும் தமப்பனுமாவன்;
சொன்னேன், Sonnain - (இவ்வுண்மையை உனக்குச்) சொல்லிவிட்டேன்;
இளைப்பாய் இளைப்பாய், Ilaiyppai Ilaiyppai - இனி நீ  அநர்த்தப்பட்டாலும் படு; சுகப்பட்டாலும் படு.
2608பெரிய திருவந்தாதி || 24
தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்
தானே பிறர்கட்கும் தற்றோன்றல்,- தானே
இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்,
அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்.
தானே தனி தோன்றல், Thaane Thani Thondral - அவ்வெம்பெருமானொருவனே புருஷோத்தமன்;
தானே தன் அனப்பு ஒன்று இல்லாதான், Thaane Than Anappu Ondru Illadhaan - அவனே ஒப்பற்றவன்;
இளைக்கில், Ilaiykkil - (ரக்ஷிக்குந் தொழிலில்) சளைத்து நின்கிற பக்ஷத்தில்
பார், Paar - இவ்வுலகமானது
கீழ்மேல் ஆம், Keelmael Aam - தலைகீழாக விபரீதமாய்வீடும்;
பிறர் தானே கட்கும் தற்றேன்றல், Pirark Thaane Katkum Thatrenral - அவனே மற்றெல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவன்;
(தானே), Thane - இப்படிப்பட்ட எம்பெருமான்றானே
மீண்டு அமைப்பான் ஆனால, Meendu Amaippaan Aanala - (தலை கீழானவற்றை அவனே) மறுபடியும் சரிப்படுத்தப்புகுந்ததால்
பாரின் மேல் ஆர் அளக்கிற்பார், Paarin Mel Aar Alakkirpaar - இப்பூமியில் ஆர்தாம் (அவனுடைய ரக்ஷகத்வத்தை) அளவிடவுரியர்?
2609பெரிய திருவந்தாதி || 25
ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை
ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார்
மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன்,வானோர்
இனத்தலைவன் கண்ணனால் யான்.
ஆரானும் ஆதானும் செய்ய, Aaraanum Aadaanum Seyya - யாராவது எதையாவதுசெய்து கொள்ளட்டும்;
அகல் இடத்தை ஆராய்ந்து, Akal Idaththai Aaraindhu - விசாலமான இப்பூமியை ஆராய்ந்து
அது திருத்தல் ஆவதே, Adhu Thiruththal Aavadhe - அவரவர்களது காரியங்களைத் திருத்த நம்மாலாகுமோ?
யான், Yaan - நானோவென்றால்
சீர் ஆர் மனத்தலை, Seer Aar Manaththalai - (எனது) சிந்த மனத்திலுள்ள
வன் துன்பத்தை, Van Thunbaththai - வலிய துன்பங்களை
வானோர் இனம் தலைவன் கண்ணனால், Vaanor Inam Thalaivan Kannanaal - நித்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனான கண்ணபிரானால்
மாற்றினேன், Maatrinen - நீக்கிக்கொண்டேன்.
2610பெரிய திருவந்தாதி || 26
யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்
கானும் மலையும் புகக்கடிவான்,- தானோர்
இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,
அருளென்னும் தண்டால் அடித்து.
ஓர்  இருள் தான் அன்ன மாமேனி, Oor Irul Thaan Anna Maameni - இருள்தானே ஒரு வடிவு கொண்டாற்போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியையுடைய
எம் இறையார், Em Iraiyaar - எம்பெருமான்
தந்த, Thanda - அளித்த
அருள் என்னும் தண்டால், Arul Ennum Thandhaal - க்ருபையாகிற ஒரு தடியினாலே
வல்வினையை, Valvinaiyai - கொடிய பாவங்களை
அடித்து, Adiththu - புடைத்து,
கானும் மலையும் புக, Kaanum Malaiyum Puga - (அவை) காடுகளிலும் மலைகளிலும் சென்று புருரும்படியாக
கடிவான், Kadivaan - தூரத்துவதற்கு
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம், Yaanum En Nenjum Isainthozhindhom - நானும் என் மலாமுமாகிற இருவரும் இசைந்து நின்றோம்.
2611பெரிய திருவந்தாதி || 27
அடியால் படிகடந்த முத்தோ,அதன்றேல்
முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய்.
செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம்,
அறிகிலாமால் நீயளந்த அன்று.
நெடியாய், Nediyai - பகவானே!
செறி கழல் கொள் தான் நிமிர்த்து, Serri Kazhal Kol Thaan Nimirthu - செறிந்த வீரக் கழலை அணிந்த திருவடிகளை நீட்டி
உலகம் எல்லாம் சென்று நீ அளந்த அன்று, Ulagam Ellam Sendru Nee Alandha Andru - கீழுலகம் மேலுலகமெல்லாம் வியாபித்து அளந்த காலமாகிய த்ரிஸிக்கிரமாவதாரத்திலே
அடியால் படி  சடந்த முத்தோ, Adiyal Padi Sadandha Muththo - திருவடியால் பூமி முழுவதையும் அளந்துகொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
அது அன்றேல், Adhu Andraeel - அல்லது
முடியால் விசும்பு அளந்த முந்தோ, Mudiyal Visumbu Alandha Mundho - திருவடியால் மேலுலகத்தையெல்லாம் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ?
அறிகிலம், Arikilam - அவ்விரண்டு ஸந்தோஷங்களுள் எந்த ஸந்தோஷம் இப்போது உன் நெஞ்சில் ஓடுகிறதென்பதை அறிகிறோமில்லை.
2612பெரிய திருவந்தாதி || 28
அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,
இன்றேநாம் காணா திருப்பது வும்,-என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்
உட்கண்ணால் காணு முணர்ந்து.
என்றேனும், Endraenum - எக்காலத்திலும்
கண் கண்ணால், Kan Kannal - வெளிக்கண்ணாலே
நாணாக, Naanaga - காணக்கூடாத
அவ்வுருவை, Avvuruvai - அப்படிப்பட்ட விலக்ஷணமான திருவுருவத்தை
நெஞ்சு என்னும் உன் கண் உணர்ந்து  காணுமேல், Nenju Ennum Un Kan Unarndhu Kaanumeel - நெஞ்சாகிற அகக்கண் விகஹித்து ஸாக்ஷாத்கரிக்குமாகில்,
அன்றே, Andrae - அப்போதே,
ஆழியான கார் உருவம், Azhiyana Kaar Uruvam - திருவாழியை நிரூபகமாகவுடையனான எம்பெருமானுடைய கரிய திருமேனியை
நம் கண் காணும், Nam Kan Kaanum - நமது புறக்கண்ணும் காணப்பெறும்;
நாம் காணாதிருப்பதுவும் இன்றே, Naam Kaanadhiruppadhum Indrae - நாம் அவ்வுருவத்தைக் காணாமல் வருந்திக் கிடப்பது அகக்கண் மலராத இப்போது மாத்திரமே.
2613பெரிய திருவந்தாதி || 29
உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே,
இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத்
தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,
எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு.
இணரும் துழாய் அலங்கல் எந்தை, Inarun Thuzhai Alankal Endhai - (திருமேனியின் ஸம்பந்தத்தாலே) மேன்மேலும் தழைத்தோங்கு கின்ற திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமான்
தனக்கு எளியர், Thanakku Ezhiyar - தனக்கு அடிமைப்பட்டவர்கள்
எவ்வளவர், Evvalavar - (தன்மேல்) எவ்வளவு அன்பு உடையவர்களோ
அவ்வளன், Avvalan - தானும் தன்னை அவ்வளவு காட்டிக் கொடுப்பவன் (திருமால்)
ஒருவர்க்கு, Oruvarkku - (தாமாகவே முயற்சி செய்பவர்களில்) ஒருவர்க்காவது
செவ்வே, Sevvae - நேராக
உணர  எளியனே?, Unar Ezhiyane - அறியக்கூடியவனோ? (ஒருவர்க்கும் அறியக்கூடியவைனல்லனாயினும்)
ஆனால், Aanaal - ஆகையினாலே
இங்கு, Inku - இவ்விடத்தில்
எம்பெருமான், Emperumaan - எம்பெருமான்
எனக்கு, Enakku - என்னாவறிந்து
உணர எளியன், Unar Ezhiyan - கொள்ளக்கூடியவன்.
2614பெரிய திருவந்தாதி || 30
இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வி னையார் தாம்,மீண்
டடியெடுப்ப தன்றோ அழகு?
இங்கு, Inku - என்னுடைய இந்த நெஞ்சில்
பண்டுபோல், Pandupol - இத்தனை நாளும் போலே
என்னுடைய செம் கண் மால், Ennudaiya Sem Kan Maal - என்மேல் வாத்ஸல்யத்தாலே வெந்த திருக்கண்களையுடையனான பெருமானுடைய
சீர்க்கும், Seerkum - கல்யாண குணங்களுக்கே
உள்ளம் சிறிது, Ullam Siridhu - எனது நெஞ்சு இடம்போராத தாயிருக்கின்றது.
அங்கே, Ange - முன்பு விசாலமாக வாழ்ந்தவிடத்திலே
வீற்றிருத்தல் இல்லை, Veetiruththal Illai - (பாவங்கள் இனி) தங்கியிருக்க முடியாது (ஏனென்றால்)
வல்வினையார் தாம், Valvinaiyaar Thaam - கொடிய பாவங்கள்
மடி அடக்கி நிற்பதனில், Madi Adakki Nirpadanil - துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக நிற்பதைவிட
ஈண்டு, Eendu - இவ்விடத்தில் நின்றும்.
அடி எடுப்பது அன்றோ அழகு, Adi Eduppadhu Andro Azhagu - கால் பேர்ந்து வெளிக் கிளம்பிப் போவதன்றோ அழகியது.
2615பெரிய திருவந்தாதி || 31
அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,
நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக்
குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு.
நல்வினையை தீர்ப்பான், Nalvinaiyai Theerppaan - வலிய பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக (- (வல்வினையைத் தீர்ப்பதற்கு அறிந்த உபாயம் இதுவே.))
அழகும் அறிவோம் ஆய், Azhagum Arivom Aay - அழகிய உபாயத்தை அறிந்தோமாக,
குடங்கள், Kudangal - குடங்களை
தலை மீது எடுத்துக்கொண்டு, Thalai Meedhu Eduththukondu - தலையின் மேலே எடுத்து வைத்துக்கொண்டு
சுழல ஆடி, Suzhala Aadi - ஆகாசத்திலே சுழன்று வரும்படி கூத்தாடி
அன்று, Anru - முற்காலத்திலே (அக்குடக்கூத்தாடினவிடாய் தீர்வதற்காக)
அத் தட கடலை மேயார் தமக்கு, Ath Thada Kadalai Meyaar Thamakku - (முதலில் விட்டு வந்த) அப்பெரிய திருப்பாற்கடலிலேயே போய்ச் சேர்ந்த பெருமானுக்கு
நிழலும் அடி தாறும் ஆனோம், Nizhalum Adi Thaarum Aanom - பாது நிழலாகவும் பாதரேகையாகவும் உடன்பட்டோமானோம்.
2616பெரிய திருவந்தாதி || 32
தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,
தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று
தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,
யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது?
தமக்கு அடிமை வேண்டுவார், Thamakku Adimai Vendum Vaar - தாம் அடிமையாயிருப்பதற்கு ஆசைப்படுமவரான
தாமோதரனார் தமக்கு, Thamodharanaar Thamakku - தாம்பாலாப்புண்ட பெருமானுக்கு
அடிமை செய் என்றால், Adimai Sei Endraal - (நெஞ்சே! நீ) அடிமை செய் என்று சொன்னால்
நெஞ்சினார், Nenjinaar - எனது நெஞ்சானது
செய்யாது, Seiyyaadhu - அப்படியே அடிமை செய்யாமல்
எமக்கென்று, Emakkendru - என் வார்த்தை கேளாத ஸ்வாகத் திரியம் பாராட்டி
தாம் செய்யும தீ வினைக்கே, Thaam Seiyyum Thee Vinnaikkee - (வெகுகாலமாகத்) தான் செய்து வருகிற தப்புக் காரியத்திலேயே
தாழ்வுறுவர், Thaazhvuruvaar - ஊன்றியிருக்கின்றது;
இங்கு, Inku - இப்படிப்பட்ட நிலைமையில்
யாம் செய்வது யாது, Yaam Seivathu Yaadhu - நான் செய்யத்தக்கது என்னோ?
2617பெரிய திருவந்தாதி || 33
யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ,
யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,- யாதானும்
தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால்
பாறுபா றாக்கினான் பால்.
யாதானும் தேறும் ஆ செய்யா அசுரர்களை, Yaadhaanum Therum A Seiyaa Asurarhalai - கொஞ்சமும் விச்வஹிக்கும்படியான செயலைச் செய்யாதவர்களான அஸுரர்களை (- (எப்போதும் தீங்கையே செய்பவர்களை) (சிறந்த பெருமானை அயோக்யமான நாம் கிட்டவாமோ என்னில்) (அணுகாவாறு தான் என்கொல்?))
நேமியாய், Nemiyaa - திருவாழியினாலே
பாறு பாறு ஆக்சினான் பால், Paaru Paaru Aaksinaan Paal - துண்டம் துண்டமாகத் துணித்தொழித்த எம்பெருமான் பக்கலில்
யாதானும் நேர்ந்து, Yaadhaanum Neerndhu - எதையாவது ஸமர்ப்பித்து
அணுகா ஆறுதான் என்கொல், Anugaa Aaru Thaan Enkol - கிட்டாமலிருப்பது என்னோ?
யாதானும் ஒன்று அறியில், Yaadhaanum Ondru Ariyil - எதையாவது ஒரு வஸ்துவை அறியக்கூடிய சைதந்யத்தையுடைத்தாயிருந்து வைத்தும்
தன் உகக்கில், Than Ugakkil - தான் ஆநந்தப்படுவதைத் தன்மையாக உடைத்தாயிருந்து வைத்தும்
2618பெரிய திருவந்தாதி || 34
பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும்,
நீதியாய்! நிற்சார்ந்து நின்று.
நீலாழி சோதியாய், Neelaazhi Sothiyaai - நீலக்கடல் போன்ற நிறத்தையுடையவனே!
ஆதியாய், Aadhiyaai - முழுமுதற் கடவுளே!
எம்பால் தொல் வினை கடியும் நீதியாய், Empaal Thol Vinai Kadiyum Neethiyaai - எம்மிடத்திலே யுள்ள பழைய பாவங்களைத் தொலைக்குமியல்வுடையவனே!
யாம், Yaam - அடியோம்
நின், Nin - உன்னை
சார்ந்து நின்று, Saarndhu Nindru - அணுகி,
நீ பால் ஆழி கிடக்கும் பண்பை, Nee Paal Aazhi Kidakkum Panbai - நீ திருப்பாற் கடலில் சயனிக்கு மழகை
கேட்டேயும், Kaetteyum - காதாற்கேட்ட மாத்திரத்திலும்
கால் ஆழும், Kaal Aazhum - கால்கள் தடுமாறுகின்றன;
நெஞ்சு அழியும், Nenju Azhiyum - நெஞ்சு சிதிலமாகா நின்றது;
கண் சுழலும், Kan Suzhalum - கண்கள் சுழலவிடா நின்றன.
2619பெரிய திருவந்தாதி || 35
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,
ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை
வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான்,
அன்புடைய னன்றே யவன்?
அன்று, Anru - முற்காலத்தில்
அம் கை வன் புடையால், Am Kai Van Pudaiyaal - அழகிய திருக்கைகளாலே ஓங்கி அறைந்ததனால்
பொன் பெயரோன் வாய் தகர்ந்து, Pon Peyroon Vaai Thakarndhu - இரணியாசுரனுடைய (ப்ரஹ்லாதனை அதட்டின) வாயைப் புடைத்து
நின்றும், Nindrum - (என்னெஞ்சிலே) நின்று கொண்டிருந்தும்
இருந்தும், Irundhum - வீற்றிருந்தும்
கிடந்தும், Kidandhum - சயனித்திருந்தும்
திரிதந்தும், Thiridandhum - எழுந்துஉயாலியும்
ஒன்றும், Ondrum - கொஞ்சமும்
மார்பு இடந்தான் அவன், Maarbu Idandhaan Avan - (அவ்விரணியனுடைய) மார்பைக் கிழித்தெறிந்த பெருமான்.
அன்பு உடையான் அன்றே, Anbu Udaiyaan Andrae - (ஆச்ரிதர்திறத்தில்) மிக் அன்புடையவனன்றோ; (ஆனது பற்றியே)
ஓவாற்றான், Ovaattraan - திருப்தியடைகிறானில்லை;
என் நெஞ்சு அகலான், En Nenju Akalaan - என்னுடைய நெஞ்சைவிட்டு நீங்குகிறானில்லை.
2620பெரிய திருவந்தாதி || 36
அவனாம் இவனாம் உவனாம், மற்றும்ப
ரவனாம் அவனென் றிராதே,- அவனாம்
அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்,
அவனே எவனேலும் ஆம்.
அவன், Avan - ஸர்வேச்வரனானவன்
அவன் ஆம், Avan Aam - துர்பலனாயிருப்பனோ?
இவன் ஆம், Ivan Aam - ஸுலபனாயிருப்பனோ?
உவன் ஆம், Uvan Aam - மத்யஸ்தனாயிருப்பனோ?
மற்று உம்பரவன் ஆம், Mattru Umbaravan Aam - அல்லது, மிகவும் உயர்ந்தவனாய் எட்டாதேயிருப்பனோ?
என்று இராதோ, Endru Iraatho - என்றிப்படி பலவகையான ஸந்தேஹங்கள் கொண்டிராமல்
அவன் அவனே ஆம் என தெளிந்து, Avan Avane Aam En Thelinthu - எம்பெருமானுடைய ஸ்வரூபமே லௌலப்யம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டு
கண்ணனுக்கே தீர்ந்தால், Kannankke Theerndhaal - அந்த ஸௌவப்யத்தை க்ருஷ்ணாவதார முகத்தாலே விளங்கக் காட்டிய அவனுக்கே ஆட்பட்டால்
அவனே, Avane - அப்பெருமானே
எவனேலும் ஆம், Evanelum Aam - எல்லாவுறவுமுறையுமாவன்.
2621பெரிய திருவந்தாதி || 37
ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே?
நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய்
மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்
அதுகரமே அன்பால் அமை.
நல் நெஞ்சே, Nal Nenje - நல்ல மனமே! (- (ஆகையால் நீ செய்யத்தக்கது என்னவென்றால்))
ஆம் ஆறு அறிவு உடையார் ஆவது, Aam Aaru Arivu Udaiyaar Aavathu - யுக்தமான அறிவை உடையவராக ஆவது
அரிது அன்றே, Aridhu Andrae - (உலகில் யார்க்கும்) அருமையன்றோ;
அது, Adhu - அப்படிப்பட்ட அறிவை
நாமே உடையோம், Naam E Udaiyom - (பகவத் கிருபையால்) பெற்றிருக்கின்றோம்;
பூ மேய் மதுகரம் மே தண் துழாய், Poo Mey Mathukaram Me Than Thuzhai - பூக்களிலே மேய்கின்ற வண்டுகள் படிந்துள்ள குளிர்ந்த திருத்துழாயையுடையனாய்
மாலாரை, Maalaarai - (ஆச்ரிதர் திறத்தில்) வ்யாமோஹமுடையான பெருமாளை
வாழ்த்து ஆம் அது, Vaazhthu Aam Adhu - வாழ்த்துவதாகிற அக்காரியமொன்றிலேயே
அன்பால், Anbaal - பக்தியுடன்
கரமே, Karame - திண்ணமாக
அமை, Amai - ஊன்றியிரு.
2622பெரிய திருவந்தாதி || 38
அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே,
இமைக்கும் பொழுதும் இடைச்சி – குமைத்திறங்கள்,
ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே,
பேசியே போக்காய் பிழை.
நெஞ்சே, Nenje - ஓ மனமே!
ஆராயில், Aaraayil - ஆராய்ந்து பார்த்தால்
இமைக்கும் பொழுதும், Imaykkum Pozhudum - ஒரு க்ஷண காலமாகிலும்
அமைக்கும் பொழுது உண்டே, Amaikkum Pozhuthu Unde - வீண்போது போக்க முடியுமோ?
இடைச்சி குமை திறங்கள், Idaichchi Kumai Thirangal - யசோதையின் கையிலே அகப்பட்டு இவன் நலிவுபட்ட பாடுகளை
ஏசியே ஆயினும், Easiyai Aayinum - பரிஹா ஸோக்தியாகச் சொல்லியாவது
ஈன் துழாய் மாயளையே, Een Thuzhai Maayalaiye - போய்கமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானைப் பற்றியே
பேசியே, Pesiyye - (எதையாவது) பேசிக்கொண்டே
பிழை, Pizhai - உனது பாவங்களை
போக்காய், Pokkai - போக்கிக் கொள்ளப்பார்.
2623பெரிய திருவந்தாதி || 39
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே! பேசாய்,
தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால்
போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே
வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு.
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை, Thazhaikkum Thuzhai Maarvan Thannai - தழைத்தோங்குகின்ற திருத்துழாய் மாலையைத் திருமார்விலே யுடையனான எம்பெருமானைக் குறித்து
அழைத்து, Azhaitthu - கூப்பிட்டு
ஒருகால், Orukaal - அவனுக்குத் திருவுள்ளமானவொரு காலத்திலே
போய், Poy - பரமபதத்திலே சென்று
பொலிய, Poliya - நன்றாக
உபகாரம், Upakaaram - கைங்கரியங்கள் செய்கையாகிற உபகாரத்தை
கொள்ளாது, Kollaadhu - கொள்ள முயலாமல்
அவன் புகழே, Avan Pugazhe - அப்பெருமானது திருக்குணங்களையே
வாய் உபகாரம் கொண்ட, Vaai Upakaaram Konda - வாயாலே சொல்லிக்கொண்டருக்கையாகிற
வாய்ப்பு, Vaippu - இந்த நேர்பாடு
பிழைக்க முயன்றோமோ, Pizhaikka Muyanrom - தப்பு செய்ததாமோ?
பேசாய், Pesai - நீ சொல்வாய்.
2624பெரிய திருவந்தாதி || 40
வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,
போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால
பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை
மாய்த்தானை வாழ்தே வலி.
வா நெஞ்சே, Va Nenje - வாராய் மனமே!
இது ஒப்ப வாய்ப்பு மற்று இல்லை, Idhu Oppa Vaippu Matru Illai - இப்போது நமக்கு வாய்திருக்கிற மாதிரி மற்று எப்போதும் வாய்க்கமாட்டாது காண;
வெம் நரகில், Vem Narakil - (நைச்சியம் பேசிப் பின் வாங்குவதாகிற) கொடிய நரகத்திலே
பூவியேல், Pooviyel - கொண்டு தள்ளி விடாதே;
தீ பால, Thee Paal - தீயதான தன்மையையுடையலான
பேய் தாய், Pei Thaai - தாய் வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய
உயிர், Uyir - பிராணனை
பால், Paal - அவளது முலைப்பாலோடே
நலாய், Nalai - கலந்து
உண்டு, Undu - அமுது செய்து
அவன் உயிரை மாய்த்தானை, Avan Uyirai Maayththaanai - அப்பூதனையினது உயிரை முடித்த பெருமானை
வாழ்த்தே, Vaazhththe - வாழ்த்துதலே
வலி, Vali - நமக்கு மிடுக்காம்.
2625பெரிய திருவந்தாதி || 41
வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கி,-வலியநின்
பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,
பன்னாளும் நிற்குமிப் பார்.
வலியம் என நினைந்து, Valiyam Ena Ninaindhu - நாமே பலசாலிகள்’ என்று நினைத்துக் கொண்டு (- (நீ கைகோகக் காரியம் செய்ததைக் கண்ணால் கண்டு வைத்தும்))
வலிய முடி, Valiya Mudi - வலிதான தலைகள்
இடிய, Idiya - சிதறியொழியும்படி
வாங்கி, Vaangi - போக்கடித்து
நின், Nin - உன்னுடைய
வலிய பொன் ஆழி கையால், Valiya Pon Aazhi Kaiyaal - வலிதாயும் அழகிய திருவாழியையுடையதாயுமுள்ள திருக்கையாலே
புடைத்திடுதி, Pudaitthiduthi - (அந்த மல்லர்களை) அடித்துவிட்டாய்;
வந்து எதிர்த்த மல்லர், Vandhu Edhirththa Mallar - எதிரிட்டு வந்த மல்லர்களுடைய
இப்பார், Ippaar - இவ்வுலகமானது
கீளாதே, Keelaadhe - வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்
பல் நாளும் நிற்கும், Pal Naalum Nirkkum - சிரஞ்ஜீவியாயிருக்கின்றதே! (என்ன கல் நெஞ்சோ!)
2626பெரிய திருவந்தாதி || 42
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன்படைத்தா னென்பரால்,- பாரிடம்
ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு
ஆவான் பூகாவால் அவை.
பார் உண்டான், Paar Undhaan - (பிரளய காலத்தில்) பூமியை விழுங்கினான்; (- (ஸ்ரீமந் நாராயணனே))
பார் இடந்தான், Paar Idandhaan - (மஹாவரடாநஹமாகிப்) பூமியை ஒட்டுவிடுவித்தெடுத்தான்;
பார் அளந்தான், Paar Alandhaan - (திரிவிக்கிரமனாகிப்) பூமியை அளந்து கொண்டான்;
முன், Mun - முதல்முதலாக
பார் இடம் படைத்தான், Paar Idam Padaiththaan - இப்பூமியை யெல்லாம் உண்டாக்கினான்
என்பர், Enbar - என்ற சாஸ்த்ர ஞானிகள் சொல்லுகிறார்கள்;
பார் உமிழ்ந்தான், Paar Umizhndhaan - (பிறகு) அதைப் புறப்படவிட்டான்;
பார் இடம் ஆவானும் தான், Paar Idam Aavaanum Thaan - அவனே ஸகல ப்ரபஞ்ச ஸ்வரீபியாகவுமிருக்கிறான்;
ஆனால், Aanaal - ஆனபின்பு (நமக்கு)
இடம் ஆர், Idam Aar - ஆச்ரயமாகக் கூடியவர்கள் வேறு யார்? (ஆருமில்லை)
அவை, Avai - இவ்வுலகங்கள்
மற்று ஒருவர்க்கு, Mattru Oruvarkku - ஸ்ரீமந்நாராயணனைத் தவிர மற்றொரு தெய்வத்துக்கு
ஆவான் புகா, Aavaan Pugaa - சேஷப்பட்டிருக்க மாட்டா.
2627பெரிய திருவந்தாதி || 43
அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,
நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ,
மனத்துயரை மாய்க்கும் வகை.
அவயம் என நினைத்து வந்த, Avayam Ena Ninaiththu Vanda - அபயம் வேண்டிவந்து சரணமடைந்த
சுரர் பால், Surar Paal - தேவதைகளிடத்திலுள்ள
நவையை, Navaiyai - குற்றங்குறைகளை
நளிர்விப்பான் தன்னை, Nalirvippaan Thannai - போக்கடிக்கு மெம்பிரானை
சுவை இல் மனத்து, Suvai Il Manathu - ஒரு படிப்பட்ட மனத்திலே
உயர வைத்து இருந்து, Uyar Vaiththu Irundhu - பரிபூர்ணமாக வைத்துக் கொண்டிருந்து
வாழ்த்தா தார்க்கு, Vazhththaa Thaarakku - மங்களாசாஸனம் பண்ணாதவர்களுக்கு
மனம் துயரை மாய்க்கும் வகையுண்டோ?, Manam Thuyirai Maaykkum Vagaiyundoo - தங்கள் மனத்திலேயுள்ள துக்கங்களைப் போக்கிக் கொள்ள வழி ஏது?
2628பெரிய திருவந்தாதி || 44
வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,
மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து
மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே,
மேலைத்தாம் செய்யும் வினை.
வகை சேர்ந்த நல்நெஞ்சும், Vagai Serndha Nalenjum - (ஞானத்திற்கு) மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும்
மிக வாய்ந்து வீழா எனினும், Miga Vaayndhu Veezhaa Eninum - (எம்பெருமானை) நன்றாகக்கிட்டி அநுபவிக்காவிட்டாலும்,
தாம், Thaam - சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள்
மிக ஆய்ந்து, Miga Aayndhu - நன்றாக ஆராய்ச்சி பண்ணி
நா உடைய வாயும், Naa Udaiya Vaayum - (எம்பெருமானைப் பேசுவதற்கு உறுப்பான) நாவோடு கூடிய வாக்கும்
மாலை, Maalai - எம்பெருமானை
வாழ்த்தாது இருப்பர், Vazhththaadhu Irupper - வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள்
மேலை தாம் செய்யும் வினை இது அன்றே, Melaith Thaam Seyyum Vinai Ithu Andrae - மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது.
2629பெரிய திருவந்தாதி || 45
வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி,
தினையாம் சிறிதளவும் செல்ல – நினையாது
வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,
நாயகத்தான் பொன்னடிகள் நான்.
விளையார், Vilaiyaar - பாவங்கள்
தர முயலும், Thara Muyalum - நமக்கு உண்டு பண்ண நினைக்கிற
வெம்மையை அஞ்சி, Vemmmai Ajnchi - கொடிய துன்பங்களுக்கு அஞ்சி
தினை ஆம் சிறிது அளவும், Dinai Aam Siridhu Alavum - தினையளவு சிறிய அற்ப காலமும்
செல்ல நினையாது, Sella Ninaiaadhu - வீணாகக் கழிய விரும்பமாட்டாமையினாலே,
நான், Naan - அடியேன்
வானோர், Vaanor - நித்யஸூரிகள்
தொழுது இறைஞ்சும் நாயாகத்தான், Thozhudhu Irainchum Naayagaththaan - தொழுது வணங்கும் பெருமை வாய்ந்த பெருமானுடைய
பொன் அடிக்கள், Pon Adikkal - திருவடிகளை
வாசகத்தால் ஏத்தினேவ், Vasakathal Aethinev - சொற்களாலே துதிக்கின்றேன்.
2630பெரிய திருவந்தாதி || 46
நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும்
தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
நீகதியா நெஞ்சே! நினை.
தேங்கு ஓதம் நீர் உருவன், Thengu Odam Neer Uruvan - ஓடாமல் தேங்குகின்ற கடல் போன்ற திருநிறத்தையுடையவனும்.
செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவனுமான
மால், Maal - ஸர்வேச்வரன்
நீங்காத, Neengadha - ஒருநாளும் விட்டுப்பிரியக்கூடாத
மா கதி ஆம், Maa Kathi Aam - சிறந்த உபேயமாயிரா நின்றான்; (அவ்வளவு மல்லாமல்,)
வெம்நரகில், Vemnarakil - கொடியஸம்ஸாரத்திலே
சேராமல், Seramal - பொருந்தாமல்
காப்பதற்கு, Kaappatharku - நம்மை ரக்ஷிப்பதற்கு
கதி ஆம், Kathi Aam - உபாயமாகவும் இராநின்றான்;
நெஞ்சேரி நினை, Nenjeri Ninai - நெஞ்சே!  (இதை) நீ அநுஸந்திக்கக்கடவை;
நாள் நாளும், Naal Naalum - நாள்தோறும் (உடனுக்கு) நான்
நான் கூறும் கூற்று ஆவது இத்தனையே, Naan Koorum Kootru Aavathu Ithanaiye - சொல்லும் சொல்லாவது இங்ஙனமே காண்.
2631பெரிய திருவந்தாதி || 47
நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே,
நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச
எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும்
எவ்வளவு முண்டோ எமக்கு.
மாலே, Maale - ஸர்வேச்வரனே! (- (இப்பாவிகள் அற்ப பலன்களை விரும்பி தேவதாந்தரங்களின் பக்கல் ஓடுமவர்களே யொழிய அவற்றுக்காகவும் உன்னருகு வரமாட்டார்கள்; இப்படியான பின்பு.) (உபாயமும் உபேயமும் நீயேயென்கிற உறுதி எமக்கு நிலை பெற்றதன்றோ.))
மானிடவர், Maanidavar - “இவ்வுலகத்தவர்கள்
நினைத்து இறைஞ்சி, Ninaithu Irainji - நம்மை ஒரு பொருளாக நினைத்து வணங்கி
ஒன்று, Ondru - ஏதாவதொரு அற்ப பலனையாவது
இரப்பர், Irappar - நம்மிடத்தில் வேண்டிக் கொள்வர்கள்
என்றேயும், Endraiyum - என்று கூட
நீ நினைத்திட வேண்டா, Nee Ninaithida Venda - நீ நினைக்க வேண்டா;
நேரே நினைத்து இறைஞ்ச, Nere Ninaithu Irajinja - (இவர்கள்) உன்னையே உபாயமாகவும் உபேயமாகவும் நினைத்துத் தொழுவதற்கு
எவ் அளவர், Ev Alavar - என்ன அறிவுள்ளவர்கள்?
என் இடத்தோர், En Idathor - அப்படிப்பட்ட அறிவு உண்டாகக்கூடிய இடத்தில் தானுள்ளவர்களோ? (இருள் தருமாஞானத்திலுள்ளவர்களன்றோ.)
எமக்கு, Emakku - உன்னுடைய நிர்ஹேதுந கடாஷத்திற்குப் பாத்திராமன அடியோங்களுக்கோவென்றால்
அது தானும், Adhu Thanum - கீழ்சொன்ன மானிடவர்களுக்குமான துர்ப்புத்தி
எவ்வளவும், Evvalavum - சிறிதேனும்,
உண்டோ, Undo - உண்டாகக் கூடியதோ?
2632பெரிய திருவந்தாதி || 48
எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,
அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப்பொலிந்த
மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,
கொன்றானை யேமனத்துக் கொண்டு.
அமை பொலிந்த மென் தோளி காரணம் ஆ, Amai Polintha Men Tholi Kaaranam Aa - மூங்கில்போல் பருத்து விளங்குகின்ற மெல்லிய தோள்களையுடையவளான நப்பின்னைப் பிராட்டிக்காக
வெம்கோடு ஏழ் ஏறு, Vemkodu Ezha Eru - கொடிய கொம்புகளையுடைய ஏழு நாளைகளை
உடனே, Udaney - ஒரு நொடிப்பொழுதில்
சொன்றானையே, Sonranaie - முடிந்த எம்பெருமானையே
மனத்துகொண்டு, Manathukondu - சிந்தையில் தியானித்துக் கொண்டு
யாம், Yaam - அடியோம்
விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை, Vin Naatukku Uchasamudhu Aam Veettai - மேலுலகங்களுக்கெல்லாம் மேற்பட்டதான பரமபதத்தை
எமக்கு அமைத்திருந்தோம், Emakku Amaithirundhom - எமக்கு (ப்ராப்யபூமியாகப்) பாரித்துக் கொண்டிருக்கின்றோம்.
அஃது அன்றே ஆம் ஆற, Aghthu Andrae Aam Aaru - அப்படி யிருப்பதுன்றோ (முழுக்ஷுத்வத்திற்கு) ஏற்றிருப்பது.
2633பெரிய திருவந்தாதி || 49
கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்
பேருருவென் றெம்மைப் பிரிந்து.
கொண்டால் தான், Kondal Thaan - மேகங்களையும்
மால் வரை தான், Maal Varai Thaan - பெரிய மலைகளையும்
மா கடல்தான், Maa Kadalthaan - கருங்கடலையும்
மற்று கார் உருவம்தான், Mattru Kaar Uruvamthaan - மற்றுமுள்ள (குவளை, குயில், மயில் முதலிய) கறுத்து உருவங்களையும்
கண்ட நாள், Kanda Naal - பார்க்குங் காலத்தில்
காண்தோறும், Kaandhorum - பார்க்கும்போதெல்லாம்
கூர் இருள் தான், Koora Irul Thaan - செறிந்த இருளையும்
வண்டு அறா பூவைதான், Vandu Araa Poovaithaan - (தேனில் நசையாலே) வண்டுகள் விட்டு நீங்காத பூவைப் பூவையும்
நெஞ்சு, Nenju - என் மனமானது
கண்ணனார் பேர் உரு என்று, Kannanaar Peer Uru Enru - இவை கண்ணபிரானுடைய அழகிய திருமேனி என்றெண்ணி
எம்மை பிரிந்து, Emmai Pirinthu - என்னைவிட்டு நீங்கி
ஓடும், Oodum - அங்கே ஓடும்.
2634பெரிய திருவந்தாதி || 50
பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,
திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால்
ஆவா! எனவிரங்கார் அந்தோ! வலிதேகொல்,
மாவை பிளந்தார் மனம்.
பிரிந்து, Pirinthu - தம்மைவிட்டுப் பிரிந்து
ஒன்று நோக்காது, Onru Nookkaadhu - வேறொன்றிலும் கண் வையாமல்
தம்முடைய பின்னே, Thammudaiya Pinne - தம்மோடு கூடவே
திரிந்து உழலும், Thirinthu Uzhalum - அலைந்துகொண்டு திரிகிற
சிந்தனையார் தம்மை, Sindhanaiyaar Thammai - என் நெஞ்சினாரை
ஒரு கால், Oru Kaal - ஒரு நாலாகிலும்
புரிந்து, Purinthu - அன்புகூர்ந்து
ஆ ஆ என இரங்கார், Aa Aa En Raingaar - ஐயோவென்று அருள்புரிகின்றலர் (பகவான்);
அந்தோ, Andho - கஷ்டம்!;
மா வாய் பிளந்தார் மனம், Maa Vaai Pilandhaar Manam - கேசியென்னும் குதிரையின் வாயைக் கிண்டொழித்த அப்பெருமானுடைய நெஞ்சு
வலிதே கொல், Valithe Kol - கடினமோ;
2635பெரிய திருவந்தாதி || 51
மனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை,
சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய
தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே,
வண்டுழாம் சீராக்கு மாண்பு.
மனம் ஆளும், Manam Aalum - மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி ஆளுமவையான
ஓர் ஐயர், Oor Aiyar - ஒப்பற்ற பஞ்சேந்திரியங்கனென்கிற
வன் குறும்பர் தம்மை, Van Kurumpar Thammai - பிரபலர்களான துஷ்டர்களை
சினம் மாள்வித்து, Sinam Maalviththu - கோவமடங்கச் செய்து
ஓர் இடத்தே சேர்த்து, Oru Idaththae Serththu - (பகவத் விஷயமாகிற) ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி,
புனம்மேல் தண் துழாயான் அடியை, Punammeel Than Thuzhaayaan Adiyai - தன்னிலத்திலே பொருந்திய குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானது திருவடிகளை
தாம் காணும் அஃது அன்றே, Thaam Kaanum Aghthu Anr Ae - ஸேவித்துக் கொண்டிருப்பதன்றோ
வண் துழாம் சீரார்க்கு மாண்பு, Van Thuzhaam Seeraarkku Maanbu - அழகிய விசாலமான நற்குணங்களை யுடையவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு.
2636பெரிய திருவந்தாதி || 52
மாண்பாவித் தஞ்ஞான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ்
சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங்
கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா
துண்ணவாய் தானுறுமோ ஒன்று.
அஞ்ஞான்று, Ajnyaantru - முன்னொரு காலத்தில்
மாண், Maan - வாமாவேஷத்தை
பாவித்து, Paaviththu - பாவனை செய்துகொண்டு
மண் இரந்தான், Man Irandhaan - (மாவலியிடத்துச் சென்று) பூமியை யாசித்தவனும்
மாயவன், Maayavan - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
நஞ்சு, Nanju - (முலையிலே தடவியிருந்த) விஷத்தை
ஊண் பாவித்து உண்டானது, Oon Paaviththu Undaanathu - உண்பதாகப் பாவனை செய்து அமுது செய்தவனுமான பெருமானுடைய
ஓர் உருவம், Oru Uruvam - விலக்ஷணமான திருமேனியை
காண்பான், Kaanbaan - ஸேவிக்கும் விஷயத்திலே
நம் கண் அவா, Nam Kan Avaa - நமது ஆண்களுக்கு ஆசை;
மற்று ஒன்று காண உறா, Mattru Ondru Kaan Uraa - வேறொன்றையும் காண விரும்புகின்றனவில்லை!
வாய்தான், Vaithaan - வாக்கானது
சீர் பரவாது, Seer Paravaadhu - (அவனது) திருக்குணங்களைப் புகழ்வது தவிர்த்து
ஒன்று, Ondru - வேறொன்றை (சோற்றை)
உண்ண, Unna - உண்பதற்கு
உறுமோ, Urumo - விரும்புமோ?
2637பெரிய திருவந்தாதி || 53
ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது,
உன்னடியார்க் கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில்
வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு
வைகுந்த மென்றருளும் வான்.
செம்கண் மால், Semkan Mal - (அடியார்கள் மீது வாத்ஸ்ல்யத்தாலே) சிவந்த திருக்கண்களையுடைய திருமாலே; (- (எத்தனை நன்மை செய்தும் த்ருப்தி பெறாமல்))
யான் உரைப்பது, Yaan Uraippathu - அடியேன் விண்ணப்பஞ் செய்வது
ஒன்று உண்டு, Onru Undu - ஒரு விஷயமுண்டு;
அவர்க்கு, Avarkku - இப்படி பார்க்கின்ற நீ அடியவர்களுக்கு
வைகுந்தம் என்று அருளுமி வான், Vaikundham Endru Arulum Vaan - ஸ்ரீவைகுண்டமென்று சிறப்பித்துச் சொல்லி உதவுகின்ற பரம பதமானது.
நீ, Nee - நீயோ வென்றால்
உன் அடியார்க்கு, Un Adiyarkku - உனது அடியார்களுக்கு
என் செயவன் என்றே இருத்தி, En Seyavan Endrae Iruththi - இன்னமும் என்ன நன்மை செய்வோமென்றே பாரித்திரா நின்றாய்;
நின் புகழில் வைகுந்தம் சிந்தையிலும் இனிதோ, Nin Pugazhila Vaikundham Sindhaiyilum Inidho - உனது திருக்குணங்களிலேயே ஊன்றியிருக்கப்பெற்ற தமது சிந்தையிற் காட்டிலும் சிறந்ததோ?
2638பெரிய திருவந்தாதி || 54
வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ?
கானோ? ஒருங் கிற்றும் கண்டிலமால்,- ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்துயரை யாவா! மருங்கு.
ஆன் ஈன்ற கண்டு, Aan Eendra Kandu - பசுவினால் பெறப்பட்ட வத்ஸாஸுரனை (- (இன்னவிடத்தில் மறைந்து போயினவென்று தெரியவில்லை;))
உயர எறிந்து, Uyara Erindhu - (விளாமரத்தின்) மேலே வீசியெறிந்து
காய் உதிர்த்தார், Kaai Uthirthaar - (அவ்விளாமரத்தின்) காய்களை உதிர்த்த கண்ணபிரானுடைய
தாள், Thaal - திருவடிகளை
பணிந்தோம், Panindhom - ஆச்ரயித்தோம் (அதன் பிறகு)
வன் துயரை, Van Thuyarai - வலிய (நமது) பாவங்களை
மருங்கு கண்டிலம், Marungu Kandilam - ஸமீபத்தில் காணோம்;
ஒருங்கிற்று, Orungitru - (அப்பாவங்கள்) மறைந்து போனவிடம்
வானோ, Vaano - ஆகாசமோ?
மறி கடலோ, Mari Kadaloo - மடிந்து மடிந்து அலையெறிகி கடலோ?
மாருரமோ, Maruramo - காற்றோ?
தீயகமோ, Thiyakamo - நெருப்போ?
கானோ, Kaano - காடோ?
ஆ ஆ ஆல், Aa Aa Aal - ஐயோ பாவம்.
2639பெரிய திருவந்தாதி || 55
மருங்கோத மோதும் மணிநா கணையார்,
மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே
எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,
மனக்கவலை தீர்ப்பார் வரவு.
வரவு, Varavu - (தம்முடைய) வருகையினாலே
மனம் கவலை தீர்ப்பார், Manam Kavalai Theerppaar - (நமது) மணத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும்
மழுங்கு ஓதம் மோதும், Mazhunghu Oodham Moathum - ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே)
மணி நாக அணையார், Mani Naaga Anaiyaar - மாணிக்கத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவருமான பெருமான்.
மருங்கே வர அரியர் எலும், Marungae Vara Ariyar Elum - (ஒருவர்க்கும் ஸ்வப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும்
எமக்கு, Emakku - நமக்கு
அவரை, Avarai - அப்பெருமானை
உன்னால், Unnaal - மனத்தினால்
ஒருங்கே, Orungae - ஒரே தன்மையாக
எப்பொழுதும் காணலாம், Eppozhudhum Kaanalaam - எப்போதும் கண்டு அநுபவிக்கட்டும்.
2640பெரிய திருவந்தாதி || 56
வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே!
ஒருவாறொருவன் புகவாறு,-உருமாறும்
ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,
மாயவர்தாம் காட்டும் வழி.
ஒருவன், Oruvan - எந்த சேதானும் (- (அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக))
ஒரு ஆறு, Oru Aaru - எந்த உபாயாந்தரத்திலும்
புகா ஆறு, Pugaa Aaru - பிரவேசிக்க வேண்டாதபடி
உரு மாறும், Uru Maarum - தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற
ஆயவர் தாம், Aayavar Thaam - ஸ்ரீகிருஷ்ணனானவனும்
சேயவர் தாம், Seyavar Thaam - ஆஸுரப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும்
அன்று உலகம் தாயவர் தாம், Andru Ulagam Thaayavar Thaam - முன்பொருநாள் உலகங்களைத் தாலியளந்தவனும்
மாயவர் தாம், Maayavar Thaam - ஆச்சரியருமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
காட்டும் வழி, Kaattum Vazhi - காட்டுகிற உபாயம்
வரவு ஆறு ஒன்று, Varavu Aaru Ondru - இன்னவழியாக வந்ததென்று தெரியாது;
வாழ்வு இனிது, Vazhvum Inidhu - பலன் போக்யமாயிரா நின்றது;
ஆல் எல்லே, Aal Ellae - ஆச்சரியம்
2641பெரிய திருவந்தாதி || 57
வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,
தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள,
வாழ்வடங்க மார்விடந்த மால்.
நெஞ்சே, Nenje - நெஞ்சமே!
போர், Poar - யுத்த பூமியிலே
அவுணன் தன்னை, Avunan Thannai - இரணியாசுரனை
தழீஇக் கொண்டு, Thazhiik Kondu - அழுந்தக் கட்டிக்கொண்டு,
புலால் வெள்ளம், Pulaal Vellam - ரத்த ப்ரவாஹமானது
தாழ்வு இடங்கள் பற்றி, Thazhvu Idangal Patri - பள்ள நிலங்கள் பக்கமாக
எங்கும் சுழித்து உகன, Engum Suzithu Ukan - கண்டவிடமெங்கும் சுழித்துக் கொண்டு அலையெறிந்து கிளரும்படியாக
வாழ்வு அடங்கா, Vazhvum Adangaa - (அவ்விணியனுடைய) வாழ்ச்சி முடியும்படி
மார்வு இடந்தமால், Maarvu Idanthamaal - அவனது மார்பைப் பிளந்த பெருமான்,
வழி தங்கு வல்வினையை, Vazhi Thangu Valvinaiyai - இடைவழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற (பிரதிபந்தகமான) வலிய பாவங்களை
மாற்றோனோ, Maatrono - (போக்கியருள மாட்டானோ? (போக்கியேவிடுவன்.)
2642பெரிய திருவந்தாதி || 58
மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது
பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால்
பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,
மறப்பின்மை யான்வேண்டும் மாடு.
மாலே, Maale - திருமாலே! (- (உன் திருவடிகளில் கைங்கரியம் பண்ணவேணுமென்று அடியேன் ஆசைப்படவில்லை.))
உனது, Unathu - உன்னுடைய
பால்போல் சீரில் பழுந்தொழிந்தேன், Paalpol Seeril Pazhunthozhindhen - பால்போலப் பரம போக்யாமன திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்;
இனி, Ini - இனிமேல்
பிறப்பு இன்மை பெற்று, Pirappu Inmai Petru - வீடுபெற்று
அடி கீழ், Adi Keezh - (உனது) திருவடிவாரத்திலே
குற்றவேல், Kuttraveel - கைங்கரியம் பண்ணுவது
யான் வேண்டும் மாடு அன்று, Yaan Vendum Maadu Andru - அடியேன் அபேஷிக்கிற செல்வமன்று;
படிசோதி, Padisothi - (உன்னுடைய) திவ்யமங்கள விக்ரஹ தேஜஸ்வை
மாற்றேல், Maatreel - எனக்கு ஒரு காலும் மாற்றாமல் நிற்யாநுபவ விஷயமாக்க வேணும் ;
மேலால், Melal - மேலுள்ள காலத்திலே
மறப்பு இன்மை, Marappu Inmai - உன்னை மறவாதிருந்தால் போதுமென்பதே
யான்வேண்டும் மாடு, Yaanvendum Maadu - அடியேன் ஆசைப்படும் செல்வம்.
2643பெரிய திருவந்தாதி || 59
மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்
காடானும் ஆதானும் கைகொள்ளார்,- ஊடேபோய்ப்
போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.
பேர் ஓதம், Peer Otham - விசாலமான கடலிலே
சிந்து திரை ஊடேபோய், Sindhu Thirai Oodepoy - சிதறிவிழுகின்ற அலைகளினுள்ளே சென்று
கண்வளரும், Kanvalarum - திருக்கண் வளர்ந்தருளா நின்ற
பேராளன், Peraalan - எம்பெருமானுடைய
பேர், Peer - திருநாமங்களை
ஓத, Otha - அநுஸந்திக்க வேணுமென்று
சிந்திக்க, Sindhikka - நினைத்த மாத்திரத்திலே,
வல்வினையார், Valvinaiyaar - கொடிய பாவங்கள்
பேர்ந்து, Perndhu - நம்மைவிட்டுக் கிளம்பி
காடானும் ஆதானும் கைக்கொள்ளார், Kaadaanum Aadaanum Kaikkollaar - காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது)
மாடு வரப்பெறுவராம் என்றே?, Maadu Varapperuvaaram Endrae - இன்னமும் நம்மிடத்திலே வாழப்பெறலாமென்கிற எண்ணத்தினாலோ?
2644பெரிய திருவந்தாதி || 60
பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே,- பேர்ந்தெங்கும்
தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லைகாண் மற்றோர் இறை.
என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே!
பேர்ந்து ஒன்று நோக்காது, Perndhu Ondru Nookkathu - வேறொன்றையும் கணிசியாமல்
ஈன் துழாய் மாயனையே பின்நிற்பாய், Een Thuzhai Maayanaiye Pinnirpai - போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி நின்றும் நில்லு;
நில்லாப்பாய், Nillaappai - அப்படி அவனைப் பற்றாதொழியினும் ஒழி;
தொல்லை, Tollai - அநாதியாய்
மா, Maa - பெரிதாய்
வெம், Vem - கடினமான
நரகில், Naragil - நரகத்திலே
சேராமல், Seramal - போய்ப்புகாமல்
காப்பதற்கு, Kaappatharku - நம்மை ரக்ஷிப்பதற்கு
பேர்ந்து மற்று ஓர் இறை, Perndhu Matru Oru Irai - வேறொரு ஸ்வாமி
எங்கும் இல்லை காண், Engum Illai Kaan - ஓரிடத்திலுமில்லைகிடாய்.
2645பெரிய திருவந்தாதி || 61
இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,
மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்
மீதிலகித் தாங்கிடக்கும் மீன்.
தாழ் விசும்பின் மீது, Thaal Visumbin Meedhu - வெளியான ஆகாசத்திலே
இலசி கிடக்கும் மீன், Ilasi Kidakkum Meen - விளங்காநின்ற நக்ஷத்திரங்களானவை
இறை முறையான், Irai Muraiyaan - ஸ்வாமியான முறைமையையுடைய எம்பெருமான்
மண் அளந்த அந்நாள், Man Alandha Annal - உலகளந்த அக்காலத்திலே
வான் நாடர், Vaan Naadar - வானுலகத்திலுள்ளாரெல்லாரும்
கூடி, Koodi - கும்பல்கூடி
சே அடி மேல், Sae Adi Mel - (அப்பெருமானது) செவ்விய திருவடிகளின் மேல்
மறை முறையால், Marai Muraiyaal - வேதங்களிற் சொல்லிய விதிப்படி
தாது இலகு பூ, Thaadu Ilaku Poo - தாதுநயாலே விளங்காநின்றுள்ள புஷ்பங்களை
முறை முறையின், Murai Muraiyin - முறை முறையாக
தெளித்தால் ஒவ்வாதே, Thelithaal Ovaadhe - தெளிந்தாற்போன்றுள்ளனவன்றோ?
2646பெரிய திருவந்தாதி || 62
மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்
வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர்
மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான்,நங்கள்
பிணிக்காம் பெருமருந்து பின்.
மீள் என்னும் நம்பின், Meel Ennum Nambin - நக்ஷத்திங்களாகிற நம்புகளையுடையதும்
வெறி என்னும் வெள்ளி லேய், Veri Ennum Velli Ley - சந்தினாகிற வெள்ளிக்குழையையுடையதும்
வான் என்னம், Vaan Ennam - ஆகாசமென்கிற பெயருடையதும்
கேடு இலா, Kedu Ila - ஒருநாளும் அழிவில்லாததுமான
வான் குடைக்கு, Vaan Kudhaikku - பெரிய குடைக்கு
ஓர் மணி காம்பு போல் நிமிர்ந்து, Or Mani Kaambu Pol Nimirthu - ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போல வளர்ந்து
மண் அளந்தான் தான், Man Alandhaan Thaan - உலகளந்தவனான பெருமாள்
பின், Pin - மேலுள்ள காலமெல்லாம்
நங்கன் பிணிக்கு, Nangan Pinikku - நம்முடைய (ஸம்ஸாரமாகிற) வியாதிக்கு
பெரு மருந்து ஆம், Peru Marundhu Aam - சிறந்த ஔஷதமாவன்
2647பெரிய திருவந்தாதி || 63
பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,
வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று
திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்,
பருச்செவியு மீர்ந்த பரன்.
பின் துரத்தும் காற்று இழந்த சூல்கொண்டல், Pin Thuraththum Kaatru Izhanda Soolkondal - பின்பற்றித்தள்ளுகிற காற்றையிழந்து கடலிலே போய்ச் சேர்ந்த காளமேகமானது (- (எப்படி யிருக்கின்றதென்றால்))
திரு செய்ய நேமியான், Thiru Seyya Nemiyan - அழகிய சிவந்த சக்கரத்தையுடையவனும்,
தீ அரக்கி, Thee Arakki - கொடிய ராக்ஷஹியான சூர்ப்பணகையினது
மூக்கும், Mookkum - மூக்கையும்
பரு செலியும், Paru Seliyum - பருத்தகாதுகளையும்
அன்று, Anru - ஸ்ரீராமாவதாரத்தில்
ஈர்த்த, Eerththa - அறுத்தொழித்தவனுமான
பரன், Paran - ஸ்ரீராமபிரான்
பேர்ந்தும் போய், Pernthum Poi - (அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று
வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து, Van Thiraik Kan Vandhu Anaindha Vaimaiththu - பெரிய திருப்பாற்கடலிலே வந்து சேர்ந்தபடியை ஒத்திருக்கின்றது.
2648பெரிய திருவந்தாதி || 64
பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,
உரனா லொருமூன்று போதும்,-மரமேழன்
றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர்
கைதான் தொழாவே கலந்து.
அன்று, Anru - முற்காலத்தில் (- (அப்படிப்பட்ட விவேகிகளை))
மரம் ஏழ் எய்தானை, Maram Ezhu Eydhaanai - (ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தஸால வ்ருக்ஷங்களைத் துளைத்த இராமபிரானென்ன,
புள்ளின் வாய் சீண்டானை, Pullin Vaai Seendhaanai - பகாஸுரனது வாயைக் கிழித்தெறிந்த கண்ணபிரானென்ன இவர்களை நோக்கி
அவன் பரன் ஆம் ஆதல், Avan Paran Aam Aadhala - ‘அந்த இராமபிரானும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மனுஷ்யரல்லர்;) ஸாக்ஷாத் பரமபுருஷரேயாவர்’ என்கிற விஷயத்தை
உõனால், Unnaal - தங்களுடைய மனத்தினாலே
பாவிப்பர் ஆகில், Paavippar Aagil - அநுஸந்திப்பர்களேயானால்
அமரர் கை, Amarar Kai - தேவர்களின் கைகளானவை
கலந்து, Kalandhu - ஒன்றுசேர்ந்து
ஒரு மூன்று போதும், Oru Moondru Podhum - எப்போதும்
தொழாவே, Thozhaave - ஸேவிக்க மாட்டாவோ.
2649பெரிய திருவந்தாதி || 65
கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல்
தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,
சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.
நெஞ்சே, Nenje - வாராய்மனமே!
கலந்து, Kalandhu - நம்மோடு கூடவேயிருந்து
நஸியும், Nasiyum - ஹிம்ஸிக்கின்ற
கடு துயரை, Kadu Thuyarai - கடுமையான துக்கங்களை
மலங்க அடித்து மடிப்பான், Malanga Adithu Madippaan - முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில்,
விலக்கல்போல், Vilakkalpol - மலைபோன்றவனும்
தொல் மாலை, Thol Maalai - அநாதிசாலமாக நம்மேல் வ்யாமோஹமுடையவனும்
கேசவனை, Keesavanai - சிறந்த திருக்குழல் கற்றையை யுடையவனும்
நாரணனை, Naaranai - ஸ்ரீமர்நாராயணனும்
மாதவனை, Maadhavanai - திருமகள் கேழ்வனுமான பெருமான் விஷயத்திலே
சொல் மாலை, Sol Maalai - பாசுரங்களாகிற மாலைகளை
எப்பொழுதும், Eppozhudhum - ஸர்வகாலமும்
குட்டு, Kuttu - ஸமர்ப்பி.
2650பெரிய திருவந்தாதி || 66
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை,
மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட
வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே!
அறிகண்டாய் சொன்னேன் அது.
நெஞ்சை, Nenjai - ஓ மனமே!
சூடு ஆய நேமியான், Soodu Aaya Nemiyan - (ஆயுதமாயிருக்கும் மாத்திரமல்லாமல்) அலங்காரமாயுமிருக்கிற திருவாழியையுடையவனும்
மாட்டே, Maattai - அவன் பக்கத்திலிருந்து கொண்டே
துயர் இழைத்த, Thuyar Izhaittha - துன்பப்படுத்தின
மாயவனை, Maayavanai - ஆச்சர்யனும்
ஈட்ட, Eetta - திரண்ட
வெறிகொண்ட, Verikonda - பரிமளம் மிக்க
தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த
தொல் அரக்கன் இன்உயிரை, Thol Arakkan Inuyirai - வெகு காலமாகத் தீமை செய்து கொண்டிருந்த இராவணனுடைய இனிய உயிரை.
வேதியனை, Vedhiyai - வைதிகனுமான எம்பெருமானை
அறிகண்டாய், Arikandai - அநுஸந்தித்திரு;
அது சொன்னேன், Adhu Sonnaen - ஒருவர்க்கும் சொல்லவொண்ணாத அப்படிப்பட்ட இவ்விஷயத்தை உனக்குச் சொன்னேன்.
2651பெரிய திருவந்தாதி || 67
அநுவோநன் றென்றங் கமருலகோ வேண்டில்*
அதுவோர் பொருளில்லை யன்றே? *- அதுவொழிந்து
மண்ணின்றாள் வேனெனிலுங் கூடும் மடநெஞ்சே! *
கண்ணன்தாள் வாழ்த்துவதே கல்.
மடநெஞ்சே, Madanenjee - அறிவுகெட்ட மனமே!
அதுவோ நன்று என்று, Adhuvo Nandru Endru - (இப்பூபதியிலிருப்பைவிட) அந்தப் பரமபதாநுபவம் சிறந்ததென்று கொண்டு
அங்கு அவர் உலகு வேண்டில், Angu Avar Ulaku Vendl - அந்தப் பரம பதாநுபவத்தை விரும்புகிற பக்ஷத்தில்
மண் நின்று ஆள்வேன் எனினும், Man Nindru Aalvaen Eninum - இந்த மண்ணுலகத்தில் நிலை நின்று ஐச்வரியத்தை ஆள வேணுமென்று விரும்பினாயாகிலும்
கூடும், Koodum - அதையும் அவன் எளிதில் அருளக்கூடும்;
அது ஓர் பொருள் இல்லை அன்றே, Adhu Oor Porul Illai Andrae - அதனைக் கொடுப்பது (எம்பெருமானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே;
அது ஒழிந்து, Adhu Ozhindhu - அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு
கண்ணன், Kannan - ஆசவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய
தாள், Thaal - திருவடிகளை
வாழ்த்துவதே, Vaazhthuvathe - மங்களாசாஸநம் பண்ணுவதையே
கல், Kal - அப்பஸிக்கக்கடவாய்.
2652பெரிய திருவந்தாதி || 68
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,
புல்லென் றழிந் தனகொல் ஏபாவம்,-வெல்ல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,
அடியேன துள்ளத் தகம்.
வெல்ல நெடியான், Vella Nediyan - மிகவுயர்ந்தவனும்
நிறம் கரியான், Niram Kariyan - நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான்
உன் புகுந்து, Un Pugundhu - உள்ளே பிரவேசித்து
அடியேனது உள்ளத் தகம் நீங்கான், Adiyenathu Ullath Thagam Neengan - அடியேனது உள்ளத்தைவிட்டு நீங்குகின்றனில்லை; (ஆகையாலே)
கல்லும், Kallum - திருவேங்கடமலையும்
கனை கடலும், Kanai Kadalum - கோஷிக்கின்ற திருப்பாற்கடலும்
வைகுந்தம், Vaikundham - வைகுண்டமென்கிற
வான் நாடும், Vaan Naadum - வானுலகமும்
புல்லென்று ஒழிந்தன கொல், Pullenru Ozhindhana Kol - அல்பமாய் விட்டன போலும்;
எபாவம், Epavam - ஐயோ பாவம்!
2653பெரிய திருவந்தாதி || 69
அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,
முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால்
சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,
ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து?
வல்வினையர் ஆவார், Valvinaiyar Aavaar - கடுமையான பாவங்களானவை (- (தங்களுடைய குடியிருப்பை யிழந்தமையாலே))
அகம் சிவந்த கண்ணினர் ஆய், Aham Sivantha Kanninar Aay - (கோவத்தினால் உள்ளே சிவந்த கண்களையுடையனவாய்
முக்கி, Mugki - வருந்தி
முகம் சிதைவராம் அன்றே, Mugam Sithaivaraam Andrae - முகம் வாடியிருக்கின்றனவல்லவோ?
மிகும், Mikum - எல்லாரிலும் மேற்பட்டவனான
திருமால், Thirumaal - திருமாலினுடைய
சீர் கடலை, Seer Kadalai - கல்யாண குணங்களாகிற கடலை
உள் பொதிந்த, Ull Pothintha - உள்ளே அடக்கிக் கொண்ட
சிந்தனையேன் தன்னை, Sindhanaiyen Thannai - சிந்தனையை யுடையேனான என்னை
செவ்வே, Sevvae - செவ்வையாக
அடர்ந்து, Adarnthu - நெருக்கி
ஆர்க்கு அடல் ஆம், Aarkku Adal Aam - யாரால் உபத்ரவிக்க முடியும்? (ஒருவராலும் என்னைத் திரஸ்கரிக்க முடியாது.)
2654பெரிய திருவந்தாதி || 70
அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை,
சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதாகில் யாதே இனி?
அடர்பொன் முடியானை, Adarpon Mudiyaanai - அடர்ந்த பொன்மயமான திருவபிஷேகத்தையுடையவனும்
ஆயிரம் பேரானை, Aayiram Peraanai - ஸஹஸ்ரநாமங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும்
சுடர்கொள் சுடர் ஆர்யானை, Sudarkol Sudar Aaryanai - (சந்திர ஸூர்யன் முதலியன) சுடர்களையெல்லாம் வென்று விளங்குகின்ற திருவாழியையுடையவனுமான எம்பெருமானை.
இடர் கடியும் மாதா பிது ஆக, Idar Kadiyum Maatha Pithu Aaga - துக்கங்களைப் போக்கவல்லதாயும் தந்தையுமாக
எனது உள்ளே வைத்தேன், Enathu Ullae Vaiththen - என்னுடைய ஹ்ருதயத்திலே இருத்தினேன்;
இனி, Ini - இனிமேல்
யாது ஆகில் யாதே, Yaadhu Aagil Yaadhe - (எனக்கு) என்ன நேர்ந்தாலென்ன?
2655பெரிய திருவந்தாதி || 71
இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,
தனிநின்ற சார்விலா மூர்த்தி,- பனிநீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு
முகத்தான்நின் உந்தி முதல்.
தனி நின்ற, Thani Nindra - தானொருவனுமே காரணமாய் நின்றவனும் (- (என்னால் சொல்லப்போகாதென்கை))
சார்வு இலா, Saarvu Ilaa - வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான
மூர்த்தி, Moorthy - எம்பெருமானே!
அகத்து பனி நீர் உலவு செம்சடையான், Agathu Pani Neer Uhlavu Semchadayan - உள்ளே குளிர்ந்த சங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையையுடையனான சிவன்.
ஆகத்தான், Aagaththaan - உன் திருமேனியை அச்ரயித்து வாழ்பவன்;
நான்கு முகத்தான், Naanthu Mugaththaan - நான்முகக் கடவுள்
நின் உந்தி முதல், Nin Undhi Mudhal - உனது திருநாபிக் கமலத்தை மூலகாரணமாகவுடையவன்;
இனி, Ini - இப்படியான பின்பு
நின் பெருமை, Nin Perumai - உனது மேன்மையை
யான் நின்று உரைப்பது என்னே, Yaan Nindru Uraippathu Ennae - தான் முயன்று சொல்வது எங்ஙனே?
2656பெரிய திருவந்தாதி || 72
முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் மென்பர் – முதல்வா,
நிகரிலகு காருருவா! நின்னகத்த தன்றே,
புகரிலகு தாமரையின் பூ.
முதல்வா, Muthalvaa - ஸகலகாரண பூதனான பெருமானே!
மூன்று திரு உருவம் முதல் ஆம் என்பர், Moondru Thiru Uruvam Mudhal Aam Enbar - பிரமன் விஷ்ணு சிவன் என்கிற மூன்று திவ்ய மூர்த்திகள் தலைவராவர்’ என்று சிலர் சொல்லுவார்கள்;
மூன்றுக்கும் ஒன்றே முதல் ஆகும் என்பர், Moondrukkum Ondrae Mudhal Aagum Enbar - ‘மேற்சொன்ன மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கும்’ என்று மற்றுஞ் சிலர் சொல்லுவார்கள்.
நிகர் இலகு கார் உருவா, Nikar Ilaku Kaar Uruvaa - மேகமொன்று சொல்லலாம்படி அதனோடொத்து விளங்காநின்ற திருமேனியை யுடையவனே!
புகர் இலகு தாமரையின் பூ, Pugar Ilaku Thaamaraik Koo - தேஜஸ்ஸுமிக்கு விளங்குகின்ற தாமரைப் பூவானது
நின் அகத்தது அன்றே, Nin Agaththathu Andrae - உன்னிடத்திலுள்ளதன்றோ? (திருநாபிக்கமலமே உனது பரத்வத்தை வெளியிடவல்லது என்றவாறு.)
2657பெரிய திருவந்தாதி || 73
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,
காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.
பூவையும், Poovaiyum - பூவைப்பூவையும்
காயாவும், Kaayavum - காயாம் பூவையும்
நீலமும், Neelamum - கரு நெய்தல் பூவையும்
பூக்கின்ற, Pookkinra - புஷ்பிக்கின்ற
பிரான், Piraan - எம்பெருமானுடைய
உருவே என்று, Uruve Endru - திருவுருவமே என்ற கொண்டு
பாவியேன், Paaviyen - அடியேனுடைய
காவி மலர், Kaavi Malar - செங்கழுநீர்ப் பூவையும்
என்றும் காண் தோறும், Endrum Kaan Thorum - பார்க்கிற போதெல்லாம்
அவ் அவை எல்லாம், Avv Avai Ellam - அந்தந்த மலர்களெல்லாம்
மெல் ஆவி, Mel Aavi - மிருதுவான உயிரும்
மெய், Mei - சரீரமும்
மிகவே பூரிக்கும், Mikave Poorkkum - மிகவும் பருத்து வளர்கின்றது
2658பெரிய திருவந்தாதி || 74
என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்,
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று
குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே!
புடைதான் பெரிதே புவி.
ஒரு நாள் ஒழியாமை, Oru Naal Ozhiyamai - ஒருநாளும் தப்பாமல்
என்றும், Endrum - எந்நாளும்
யான் இரந்தால், Yaan Irandhaal - அடியேன் பிரார்த்தித்தால்,
குன்று குடை ஆக ஆ காத்த கோவலனார், Kundru Kudai Aaga Aa Kaatha Kovalanaar - (முன்பு) கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திப் பசுக்களை ரக்ஷித்த கோபாலகிருஷ்ண பகவான்
ஒன்றும் இரங்கார், Ondrum Irangaar - சிறிதும் தயவு செய்கிறாரில்லை;
உரு காட்டார், Uru Kaattaar - தன் திருமேனியைக் காட்டுகிறாரில்லை;
நெஞ்சே, Nenje - ஓ மனமே!
புவி, Bhuvi - நாமிருக்கும் இடம்
பெரிதே புடை தான், Peridhe Pudai Thaan - (அவருடைய அருள் வெள்ளம் ஏறிப்பாய முடியாத) மிகப் பெரிய மேட்டு நிலமோ?
2659பெரிய திருவந்தாதி || 75
புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்
செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,- அவிவின்றி
யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,
ஊன்பருகு நேமியாய்! உள்ளு.
ஊன் பருகு நேமியாய், Oon Parugu Nemiyai - (அஸுர சரீரத்திலுள்ள) மாம்ஸங்களைக் கவர்கின்ற திருவாழி யாழ்வானைக் கையிலேந்தியுள்ள பெருமானே!,
புவியும், Puviyum - இவ்வுலகமும்
இரு விசும்பும், Iru Visumbum - விசாலமான மேலுலகமும்
என் உள்ளாய், En Ullai - என் பக்கல் இரா நின்றாய்:
யான் பெரியன், Yaan Periyan - நானே பெரியவன்;
நின் அகத்த, Nin Akath - உன்னிடத்தேயுள்ளன;
நீ, Nee - உபய விபூதியையும் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற நீ
என் செவியின் வழி புகுந்து, En Seviyin Vazhi Pugundhu - என் காது வழியே புகுந்து
அவிவு இன்றி, Avivu Inri - ஒருநாளும் விட்டு நீங்காமல்
நீ வெரியை என்பதனை யார் அறிவார், Nee Veriyai Enbadhai Yaar Arivaar - நீ பெரியனென்று அறிவாருண்டோ?
உள்ளு, Ullu - இதை நீயே ஆலோசித்துப் பார்.
2660பெரிய திருவந்தாதி || 76
உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம்,
விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள
உலகளவு யானும் உளனாவன் என்கொல்?
உலகளந்த மூர்த்தி! உரை.
உலகு அளந்த மூர்த்தி, Ulaku Alandha Moorthi - த்ரிவிக்ரம பகவானே,
உன்னை உள்ளிலும், Unnai Ullilum - உன்னை(நெஞ்சில்) அநுஸந்தித்த மாத்திரத்திலும்
உள்ளம், Ullam - எனது நெஞ்சானது
துடிக்கும், Thudikkum - (ஸந்தோஷத்தினால்) பூரிக்கின்றது
வினை படலம் விள்ள, Vinai Padalam Vill - பாவங்களின் கூட்டங்கள் என்னை விட்டு ஒழிந்து போம்படி
விழித்து, Vizhithu - உன்னாலே நான் கடாக்ஷிக்கப் பெற்று
உன்னை மெய்வற்றால், Unnai Meivatraal - (பரமபதத்திலே வந்து) உன்னை உள்ளபடியே அடைந்து விட்டேனாகில்
உள்ள உலகு அளவும், Ulla Ulaku Alavum - நீ வியாபித்திருக்கிற உலகமெங்கும்
யானும் உளன் ஆவன், Yaanum Ulan Aavan - நானும் வியாபித்தவனாவேன்;
என் கொலோ, En Kolon - நான் சொல்லுகிற விது ஸம்பாவிதநதானோ?
உரை, Urai - நீயே சொல்லு.
2661பெரிய திருவந்தாதி || 77
உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,
இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்,
நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்
சொல்நன்றி யாகும் துணை.
இரைக்கும் கடல், Iraikkum Kadhal - கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே
கிடந்த, Kidandha - பள்ளிக்கொண்டிரா நின்ற
எந்தாய், Endhai - ஸ்வாமீ!
உரைக்கில், Uraikkil - ஆராய்ந்து சொல்லில்,
ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே, Oru Sutraththaar Utraar Endru Aarae - (நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ?
எனது உயிர்க்கு, Enathu Uyirkkum - என் ஆத்மாவுக்கு
ஓர் சொல், Oru Sol - ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்கிற சரமச்லோகமாகிற ஒரு சொல்லாலே
நன்றி ஆகும் துணை, Nandri Aakum Thunai - உதவிசெய்யும் துணையும்
உரைப்பு எல்லாம், Uraippu Ellam - மற்றும் சொல்லப்படுகிற எல்லாவகையான துணையும்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய், Nin Andri Matru Ileen Kandaai - உன்னைத் தவிர வேறொருவரையும் உடையே னல்லேனுகாண்.
2662பெரிய திருவந்தாதி || 78
துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும்,
சுற்றத் திணைநாளு மின்புடைத்தா மேலும், – கணைநாணில்
ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,
ஓவாத வூணாக உண்.
துணை, Thunai - ஸ்நேஹிதர்களும் (- (ஆகிய இவை யெல்லாம்) (நீ அவற்றில் ஆசை கொள்ளாமல்))
நாள், Naal - ஆயுஸ்ஸும்
பெரு கிளையும், Peru Kilaiyum - பிள்ளைகள் பேரன்கனென்கிற பெரிய ஸந்தானமும்
தொல் குணமும், Thol Gunamum - பரம்பரையாக வருகிற நற்குலமும்
சுற்றத்து இணை, Sutraththil Inai - பந்துக்களோடே சேர்ந்திருப்பதும்
நாளும், Naalum - நாள்தோறும்
இன்பு உடைத்து ஆம் எனும், Inbu Udaiththu Aam Ennum - (துக்கத்தை யுண்டு பண்ணாமல்)  ஸந்தோஷத்தையுண்டு பண்ணுவனவென்றே வைத்துக்கொண்õடலும்,
நல்நெஞ்சே, Nalnenje - நல்மனமே!
கணை நாணில் ஒவா தொழில்சார்ங்கன், Kanai Naanil Ovaa Thozhilsaarngan - அம்புகள் நாளில் நின்றும் ஒருகாலும் மாறாதபடி வீரத்தொழில் செய்துகொண்டேயிருக்கிற வில்லையுடையனான இராமபிரானுடைய
தொல் சீரை, Tol Seerai - இயற்கையான நற்குணங்களையே
ஓவாத ஊண் ஆக உண், Ovaadha Oon Aaga Un - நித்யபோக்யமாக அநுபவிக்கக் கடவாய்.
2663பெரிய திருவந்தாதி || 79
உள் நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையை யஞ்சுமே,
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்
பேராயற் காளாம் பிறப்பு.
மண் நாட்டில், Man Naattin - இந்த மண்ணுலகத்திலே
ஆர் ஆகி, Aar Aagi - எப்பிறவியிலே பிறந்தவராயினும்
என் இழிலிற்று ஆனாலும், En Izhilichirru Aanallum - எப்படிப்பட்ட இழி தொழில்களையுடையவர்களாயினும்
ஆழி அம் கைபேர் ஆயற்கு ஆன் ஆம் பிறப்பு, Aazhi Am Kaiper Aayarku Aan Aam Pirappu - திருவாழியை அழகிய கையிலேயுடைய ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அடிமைப்பட்டவர்களாகப் பிறக்கும் பிறவியானது.
உன் நாடு தேச அன்றே, Un Naadu Desa Anrre - பரமபதத்திள்ள தேஜஸ்ஸையுடையதன்றோ?
ஊழ் வினையை அஞ்சுமே, Oozh Vinaikay Anjumee - அநாதியான பாவங்களைக் குறித்து அஞ்ச வேணுமோ?
விண் நாட்டை, Vin Naattai - ஸ்வர்க்க லோகத்தை
ஒன்று ஆக, Onru Aaga - ஒரு பொருளாக
மெச்சுமே, Mechchume - விரும்பக்கூடுமோ?
2664பெரிய திருவந்தாதி || 80
பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும்
இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல்.
பிறப்பு, Pirappu - பிறவியையும்
இறப்பு, Irappu - மரணத்தையும்
மூப்பு, Mooppu - கிழத்தனத்தையும்
பிணி, Pini - வியாதிகளையும்
துறந்து, Thurandhu - ஒழிந்து
பின்னும், Pinnum - அவ்வளவோடு மல்லாமல்
இறக்கவும், Irakkavum - மிகவும்
இன்பு உடைத்து ஆம் ஏலும், Inbu Udaithu Aam Aelum - ஆநந்தமுடையதான ஸநவல்யமோக்ஷம் உண்டாவதானாலும்
மண் அளந்தான் பாதமே ஏத்தா பகல், Man Alandhaan Paathame Aetthaa Pakal - உலகளந்த பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தப்பெறாத காலங்களிலுண்டான
மறப்பு எல்லாம், Marappu Ellam - மறப்புகள் எல்லாம்
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே, Edhame Endru Allal Ennavane - துன்பமென்றே எண்ணுவனேயொழிய வேறுவகையாக எண்ணுவனோ?
2665பெரிய திருவந்தாதி || 81
பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை
இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,–தகவாத்
தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என்றோரார்,
செழும்பரவை மேயார் தெரிந்து.
செழு பரவை மேயார், Sezhu Paravai Meyaar - அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான்,
இவர் தகவாதொழும்பர், Ivar Thagavathozhumbar - “இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்;
சீர்க்கும் துணை இலர், Seerkum Thunai Ilar - சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்”
என்று தெரிந்து ஓரார், Endru Therinthu Ooraar - என்பதை ஊன்றி ஆராயாதவனாய்
பகல் இரா என்பதுவும் பாவியாது இருபொழுதும், Pagal Ira Enbadhum Paaviyadhu Irupozhudhum - பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும்
இகல் செய்து, Ikal Seidhu - வலிகட்டாயப்படுத்தி
எம்மை ஆள்வர், Emmai Aalvar - அடியேனை அநுபவியா நின்றான்.
2666பெரிய திருவந்தாதி || 82
தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன்,
வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில்
அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை யேத்தா தயர்ந்து.
தீ வினையேன், Thee Vinaiyen - மஹாபாபியான நான்
தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால், Therintha Unarvu Ondru Inmaiyaal - விவேகவுணர்ச்சி சிறிதுமில்லாமையினாலே
அந்நான்று, Annandru - முன்பொருகாலத்தில்
கரந்த உருவிய அமானை பின் தொடர்ந்து, Karandha Uruviya Amanaipin Thodarndhu - நிஜமான வுருவத்தை மறைத்துக்கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற
ஆழி அம் கை அம்மானை, Aazhi Am Kai Ammanai - அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையிலணிந்திருந்த இராமபிரானை
ஏத்தாது, Eththadhu - தோத்திரம் செய்யாமல்
அயர்த்து, Ayarththu - அறிவுகெட்டு
கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன், Keel Naalgal Ellam Vaanaa Irundhozhindhen - கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன்.
2667பெரிய திருவந்தாதி || 83
அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்
உயப்போம் நெறியிதுவே கண்டாய், – செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே! அஞ்சினேன்
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
செயற்பால அல்லவே, Seyarpala Allave - செய்யத்தகாதவற்றையே
செய்கிறுதி, Seygiruthi - செய்ய முல்வாயென்று
அஞ்சினேன், Anjinhen - (உன்னைப் பற்றிப்) பயப்படுகின்றேன்;
மல்லர் நான் வல்வினளை வாழ்த்து, Malllar Naan Valvinaiyai Vazhthu - மல்லர்களின் ஆயுளை முடித்த கண்ணபிரானை மங்கவா சாஸநம் பண்ணிக்கொண்டிரு
உயபோம் நெறி இதுவே கண்டாய், Uyapom Nerii Idhuvee Kandaai - உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்;
அயர்ப்பாய், Ayirppai - (அப்பெருமானை) மறந்து கெட்டாலும் கெடு;
அயர்ப்பாய், Ayirppai - மறவாமல் நினைந்து வாழ்ந்தாலும் வாழ்;
சொன்னேன், Sonnain - (உனக்கு நான் சொல்லவேண்டிய ஹிதத்தைச்) சொல்லி வைத்தேன்.
2668பெரிய திருவந்தாதி || 84
வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத்
தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,
எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,
தங்கத்தா னாமேலும் தங்கு.
அவன் அடியை வாழ்த்தி, Avan Adiyai Vaazhththi - “அப்பெருமானுடைய திருவடிகளை மங்களா சாஸநம்பண்ணி
பூ புனைந்து, Poo Punaindhu - (அத்திருவடிகளிலே) புஷபங்களைச் சாத்தி
நின் தலையை தாழ்த்து, Nin Thalaiyai Thaazhththu - உன் தலையை வணங்கு;
இரு கை கூப்பு, Iru Kai Kooppu - இரண்டு கையையுங்கொண்டு அஞ்ஜலிபண்ணு”
என்றால், Endraal - என்று சொன்னால்
உப்பாத, Uppadha - அப்படி செய்யாத
பாழ்த்த விதி, Paalththa Vidhi - பாழும் விதியையுடைய
என் நெஞ்சமே, En Nenjamai - என்னுடைய மனமே!
அவனை, Avanai - அந்த ஸர்வேச்வானை
எங்கு உற்றாய் என்று ஏத்தாது, Engu Utrraai Endru Aeththadhu - ‘எங்கேயிருக்கிறாய்’ என்று சொல்லியழைத்துத் துதியாமல்
தங்க ஆம் எனில், Thanga Aam Enil - தரித்திருக்கக் கூடுமாகில்
தங்கு, Thangu - தரித்திரு.
2669பெரிய திருவந்தாதி || 85
தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,
எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத்
தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய
கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்.
பொங்கு ஓதம், Pongu Oodham - கிளர்ந்த அலைகளையுடைத்தாய்
தண் அம், Than Am - குளிர்ந்து அழகிய
பால்வேலைவாய், Paalvelaivai - திருப்பாற்கடலிலே
நல் நிறம் கொள் கார், Nal Niram Kol Kaar - நல்ல திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டிருக்கிற மேகங்கள்
தங்கா முயற்சிய ஆய், Thangaa Muyarchiya Aay - மாறாத முயற்சியையுடையனவாய்க் கொண்டு
தாழ் விசும்பின் மீது பாய்ந்து, Thaal Visumbin Meedhu Paayndhu - விசாலமான ஆகாசத்தின் மேலே ஸஞ்சரித்து
கண்வளரும், Kanvalarum - திருக்கண் வளர்ந்தருளுகிற
என்னுடைய கண்ணன் பால், Ennudaiya Kannan Paal - எமது கண்ணபிரானிடத்திலுள்ள
எங்கே புக்கு, Engae Pukku - எந்த தேசத்திலேபோய்
எத்தவம் செய்திட்டன கொல், Eththavam Seidittana Kol - எவ்வகையான தபஸ்ஸைச் செய்தனவோ? (அறியேன்.)
2670பெரிய திருவந்தாதி || 86
கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,
என்நினைந்து போக்குவரிப் போது.
கார் கலந்த மேனியான், Kaar Kalanda Meniyaan - மேகத்தோடொத்த திருமேனியை யுடையவனும்
கை கலந்த ஆழியான், Kai Kalanda Azhiyaan - கையோடு சேர்ந்த திருவாழியை யுடையவனும்.
பார் கலந்த வல் வயிற்றான், Paar Kalanda Val Vayitran - (பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சோப் பெற்ற வலிய திருவயிற்றையுடையவனும்
பாம்பு அணையான், Paambu Anaiyaan - திருவன்நதாழ்வானைப் படுக்கையாகவுடையவனுமான பெருமானுடைய
சீர் கலந்து, Seer Kalandhu - திருக்குணங்கள் நிரம்பிய
சொல், Sol - ஸ்ரீஸூக்திகளை
நினைந்து, Ninaindhu - அநுணுந்தித்து
சூழ்வினையின் ஆழ் அவரை போக்கார் எம், Sozhvinainin Aazh Avarai Pokkaar Em - கொடிய பாவங்களினாலுண்டாகும் மிக்க துன்பங்களைப் போக்கிக்கொள்ளார்களாகில் (ஒழியட்டும்)
என் நினைந்து இப்போது போகுவர், En Ninaindhu Ippodhu Poguvaar - வேறு எதை அநுஸந்தித்து இந்தப் போதைப் போக்குவார்கள்.
2671பெரிய திருவந்தாதி || 87
இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்
எப்போது மீதேசொல் என்னெஞ்சே–எப்போதும்
கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்
மெய்கழலே ஏத்த முயல்.
என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே!
நம்மேல் வினை கடிவான், Nammael Vinai Kadivaan - நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக
எப்போதும் கை கழலா நேமியான், Eppodhum Kai Kazhalaa Nemiyaan - ஒருபோதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய
மொய்கழலே, Moykazhale - அழகிய திருவடிகளையே
ஏந்த, Aentha - அதிக்க
இப்போதும், Ippodhum - இக்காலத்திலும்
இன்னம் இனி சிறிது நின்றாலும், Innam Ini Siridhu Nindraalum - மேலுள்ள காலத்திலும்
எப்போதும், Eppodhum - ஆக எந்தக் காலத்திலும்
ஈதே சொல், Eedhe Sol - இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும்.