| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2585 | பெரிய திருவந்தாதி || 1 | முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே, இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப் பூவீன்ற வண்ணன் புகழ் | முயற்சி சுமந்து, Muyarchi Sumandhu - எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே உத்ஸாஹம் பூண்டு (- (இதுவே நீயும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம்.)) எழுந்து, Ezhunthu - கிளம்பி முந்துற்ற நெஞ்சே, Mundru Nenjhe - (அவ்விஷயத்தில் என்னைவிட) முற்பட்டிருக்கிற மனமே! நீ எம் எம்மொடு கூடி, Nee Em Emmodu Koodi - நீ (தனிப்பட்டுப் போகாமல்) என்னோடு சேர்ந்து இயற்றுவாய், Iyattruvai - காரியத்தை நடத்த வேணும்; (நாம் இருவருஞ் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம் என்னவென்றால்) நல் பூவைப்பூ ஈன்ற வண்ணான், Nal Poovai Poo Eendra Vannaan - (அழகிய காயாம் பூவிலுண்டான நிறம் போன்ற நிறத்தையுடையனான எம்பெருமானுடைய புகழ், Pugazh - திருக்கல்யாணகுணங்களை நயப்பு உடைய, Nayappu Udaya - அன்பு பொதுந்திய நா ஈன், Na Een - நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற தொடை கிளவியுள், Thodai Kilaviyul - சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே பொதிவோம், Podivom - அடக்குவோமாக. |
| 2586 | பெரிய திருவந்தாதி || 2 | புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம் மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம் எங்கள்மால் கண்டாய் இவை. | எம் கண், Em Kan - எங்களிடத்தில் (- (ஆக இப்படிப்பட்ட உண்மையை நாங்கள் நன்கு அறிந்திருந்தும் உன்னைப் புகழாமலாவது மதியாமலாவது இருக்கப் போகிறதில்லை; புகழ்வதும், மதிப்பதும் செய்யத்தான் போகிறோம்.)) மால், Maal - வ்யாமோஹகத்தையுடைய செம் கண் மால், Sem Kan Maal - புண்டரீகாக்ஷனான பெருமானே, புகழ்வோம், Pugazhvom - (ஒருவராலும் புகழ்ந்து முடிக்கவொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில் பழிப்போம், Pazhippom - (அயோக்யர் புகழ்வது புகழ்ச்சியன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய்விடுவோம்; புகழோம், Pugazhom - (இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு) புகழாதிருந்தோமாகில் பழியோம், Pazhiyom - உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம்; மதிப்போம், Mathippom - உன்னைச் சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோமாகிலும் இகழ்வோம், Ikazhvom - உன்னை அகௌரவப்படுத்தினவர்களாக ஆய்விடுவோம்; மதியோம், Madhiyom - அப்படி நெஞ்சால் நினையாதிருந்தோமாகில் இகழோம், Ikazhom - அகௌரவப்படுத்தாதவர்களாக ஆவோம்; நீ சீறல், Nee Seeral - நீ கோபங்கொள்ளலாகாது; இவை, Ivai - புகழ நினைப்பதும் (பிறகு) புகழலாகாதென்று பின் வாங்குவதுமாகிற இவை தீ வினையோம் எங்கள் மால் கண்டாய், Thee Vinaiyom Engal Maal Kandaai - மஹாபாவிகளான எங்களுடைய ப்ரமமேயாம். |
| 2587 | பெரிய திருவந்தாதி || 3 | இவையன்றே நல்ல இவையன்றே தீய, இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம் என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே, என்னால் செயற்பால தென்? | இறையவனே, Iraiyavane - எம்பெருமானே! இவை அன்றே நல்ல, Ivai Anrae Nalla - உன்னைப் புகழாமையும் சிந்தியாமையுமாகிற இவையன்றோ நல்லது; இவை அன்றே தீய, Ivai Anrae Theeya - உன்னைப் புகழ்வதும் சிந்திப்பதுமாகிற இவையன்றோ கெட்டது; இவை இவை என்ற அறவனேனும், Ivai Ivai Endra Aravaneenum - (ஆகவே) ‘இன்னது இப்படிப்பட்டது’ என்று நான் உண்மையில் தெரிந்து கொண்டிருக்கிறேனாகிலும் இவை எல்லாம், Ivai Ellam - புகழாமையும் மதியாமையும், புகழ்தலும் மதித்தலுமாகிய இவையெல்லாம் என்னால், Ennal - என்னாலே அடைப்பு நீக்கு ஒண்ணாது, Adaippu Neekku Onnaadhu - பற்றவும் முடியாது, விடவும் முடியாது; என்னால் செயற்பாவது என், Ennal Seyarpaavathu En - (சபலனான) என்னாலே செய்யக்கூடியது என்ன இருக்கிறது? |
| 2588 | பெரிய திருவந்தாதி || 4 | என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற் றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப் பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று. | என்ன, Enna - என்னுடையவனான நரும் சோதி கண்ணன், Narum Sothi Kannan - கறுத்த நிறத்தையுடைய ஸ்ரீக்ருஷ்ணனும் கடல் புரையும் சீலன், Kadal Puraiyum Seelan - கடல் போன்ற (கம்பீர) ஸ்வபாவ முடையவனும் பெரும் சேயதிக்கு, Perum Seyathikku - மிகப் பெரிய சோதிவடிவமானவனுமான எம்பெருமானுக்கு என் நெஞ்சு ஆள் பெற்று, En Nenju Aal Petru - என்னுடைய நெஞ்சானது அடிமைப்பட்டதனால் என்னில், Ennil - என்னைவிட மிகு புகழார் யாவரே, Migu Pugazhaar Yaavare - மிக்க புகழுடையவர் யார் கொல்? மற்று பிள்ளையம் எண்ணில், Mattru Pillaiyam Ennil - இன்னமும் ஆராய்ந்து பார்க்குமளவில் மிரு புகழோன் யான் அல்லால், Miru Pugazhon Yaan Allaal - மிக்க புகழுடையவன் தவிர வேறு யாருமில்லை. |
| 2589 | பெரிய திருவந்தாதி || 5 | பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ மற்றையா ராவாரும் நீபேசில்,- எற்றேயோ! மாய! மா மாயவளை மாயமுலை வாய்வைத்த நீயம்மா! காட்டும் நெறி. | மாய, Maaya - மாயவனே! அம்மா, Amma - ஸ்வாமியே! பேசில், Pesil - உன்னால் நான் பெய்ய உபகாரங்களைப் பேசப் புகுந்தால் பெற்ற தாய் நீயே, Petra Thaai Neeye - பெற்றதாய் போலே ப்ரியமானதையே செய்பவனும் நீயே; பிறப்பித்த தந்தை நீ, Pirappiththa Thandhai Nee - உண்டாக்கின பிதாவைப் போல ஹிதமானதையே செய்பவனும் நீயே; மற்றையர் ஆவாரும் நீ, Mattraiyar Aavaarum Nee - மற்றும் ஆசாரியரும் நீயே; மா மாயவளை மாய, Maa Maayavalai Maaya - மஹத்தான வஞ்சனையையுடைனான பூதனையை முடிப்பதற்காக முலை, Mulai - (அவளது விஷந்தடவின) முலையை வாய் வைத்த நீ, Vaai Vaiththa Nee - அமுது செய்த நீ காட்டும் நெறி, Kaattum Nerii - எனக்குக் காட்டின வழிகள் எற்றே ஓ, Ettre O - என்ன ஆசாரியமானவை ( என்று உருகுகிறார்.) |
| 2590 | பெரிய திருவந்தாதி || 6 | நெறிகாட்டி நீக்குதியோ? நின்பால் கருமா முறிமேனி காட்டுதியோ? மேனாள்-அறியோமை எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே! ஈதுரையாய் எஞ்செய்தா லென்படோம் யாம்? | கண்ணனே, Kannane - எம்பெருமானே! நெறி காட்டி நின்பால் நீக்குதியோ, Nerii Kaatti Ninpaal Neekuthiyo - கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களைக் காட்டி (இவற்றை அநுஷ்டித்துப் பலன் பெறுவாய் என்று சொல்லி என்னை) கைவிட்டு விடப் பார்க்கிறாயோ? (அல்லது) கரு மா முறி மேனி காட்டுதியோ, Karum Maa Muri Meeni Kaattuthiyo - கறுத்த மாமரத்தின் தளிர் போன்ற (உனது) திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து அநுப்ரஹிக்க நினைக்கிறாயோ? மேல் நாள், Mel Naal - அநாதி காலமாக அறியோமை, Ariyomai - அறியாதவர்களான எங்களை என் செய்வான் எண்ணினாய், En Seivaan Enninai - என்ன செய்வதாக திருவுள்ளம் பற்றியிருக்கிறது? ஈது உரையாய், Eethu Uraiyaai - தேவரீருடைய திருவுள்ள மின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்; என் செய்தால், En Seithal - நீ எமக்கு என்ன நன்மையைச் செய்தாலும் யாம் என் படோம், Yaam En Padom - யாம் என்ன அநர்த்தத்தைத்தான் அநுபவிக்க மாட்டோம். |
| 2591 | பெரிய திருவந்தாதி || 7 | யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார் தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த அம்மா!நின் பாதத் தருகு. | பூ மேய, Poo Meyya - தாமரைப்பூவில் பொருந்தியிருக்கிற செம் மாதை, Sem Maathai - *ஹிரண்ய வர்ணையான பிராட்டியை நின் மார்வில் சேர்வித்து, Nin Maarvil Serivithu - உனது திருமார்விலே சேர்த்துக் கொண்டானாயும் பார் இடந்த, Paar Idantha - (பிரளயத்திலழுந்திக் கிடந்த) பூமியைக் குத்தியெடுத்தவனாயுமிருக்கிற அம்மா, Amma - ஸ்வாமீ! நின் பாதத்து அருகு, Nin Paadaththu Arugu - தேவரீருடைய திருவடிகளின் சமீபத்திலே என் நெஞ்சினார் தாமே, En Nenjinnaar Thaame - என்னுடைய நெஞ்சதானே அணுக்கர் ஆய் சார்ந்தொழிந்தார், Anukkara Aayi Sarnthozhindhaar - அந்தரங்கமாகச் சென்று சேர்ந்துவிட்டது; அரு வினையோம், Aru Vinaiyom - போக்க முடியாத பாவத்தைப் பண்ணியுள்ள யாமே, Yaame - நாங்கள் மாத்திரம் சேயோம்., Seyyom - தூரத்திலிருக்கிறோம். |
| 2592 | பெரிய திருவந்தாதி || 8 | அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம் பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம் கண்காண்பரிய நுண்புடையீர் நும்மை நுமக்கு. | பருகலாம் பண்பு உடையீர், Parugalaam Panbu Udaiyeer - வாய்மடுத்துப் பானம் பண்ணுதற்கு உரிய திருக்குணங்களையுடையவரே! பார் அளந்தீர், Paar Alandheer - (த்ரிவிந்தரமாவதாரத்தால்) பூமியெல்லாமனந்தவரே! பாவியேம் கண் காண்பு அரிய நுண்பு உடையீர், Paaviyeem Kan Kaanbu Ariya Nunbu Udaiyeer - பாவிகளான எங்களுடைய கண்களாலே காண முடியாத வைவக்ஷண்யத்தை யுடையவரே! நும்மை, Nummai - உம்மை அருகும், Arugum - கிட்டுவதையும் சுவடும், Suvadum - சிட்டுவதற்கான உபாயத்தையும் தெரிவு உணரோம், Therivu Unarom - (நாங்கள்) பகுத்தறிந்தோமில்லை; (அப்படியிருக்கச் செய்தேயும்) நுமக்கே, Nummaikkee - உம் விஷயத்திலேயே அன்புமிக பெருமை, Anbumiga Perumai - (எமக்கு) ஆசையானது மிகவும் பெருகா நின்றது; இது என், Idhu En - இதற்கு என்ன காரணம்? பேசீர், Pesir - நீர்தாம் சொல்லவேணும். |
| 2593 | பெரிய திருவந்தாதி || 9 | நுமக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென்?, மாலார் தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால் – எமக்கினி யாதானு மாகிடுகாண் நெஞ்சே! அவர்த்திறத்தே யாதானும் சிந்தித் திரு. | நெஞ்சே, Nenje - ஓ மனமே! (மாலார்) அவர் தாம், Malar Avan Thaam - எம்பெருமானாகிற அப்பெரியவர் தாம் சார்வு அரியர் ஆனால், Saarvu Ariyar Anaal - நமக்குக்கிட்ட முடியாதவராயிருக்கும்போது நொந்து உரைத்து என், Nondhu Uraithu En - வாய் நோவச் சொல்வதில் என்ன பயன்? இனி, Ini - இன்று முதலாக எமக்கு ஆதானும் ஆகிடு காண், Emakku Aadhanum Aagidu Kaan - நமக்கு எது வேணுமானாலும் நேரட்டும்; மாலார் தமக்கு, Malar Thamakku - அவ்வெம்பெருமானை நோக்கி நுமக்கு அடியோம் என்று என்று, Numakku Adiyom Endru Endru - “நாங்கள் உமக்கு அடிமைப்பட்டவர்கள்” என்று பல தடவை அவர் திறத்தே, Avar Thiraththae - அப்பெருமான் விஷயமாகவே யாதானும் சிந்தித்து இரு, Yaadhanum Sindhiththu Iru - எதையாவது சிந்தித்துக்கொண்டு கிடப்பாயாக. |
| 2594 | பெரிய திருவந்தாதி || 10 | இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ டொருநால்வர் ஓரிருவர் அல்லால்,- திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே நாமா மிகவுடையோம் நாழ். | இரு நால்வர், Iru Naalvar - அஷ்ட வஸுக்கவென்ன ஈரைந்தின் மேல் ஒருவர், Eeraindhin Mel Oruvar - ஏகாதசருத்ரர் களென்ன எட்டோடு ஒரு நால்வர், Ettodu Oru Naalvar - த்வாதசாதித்யர்களென்ன ஓர் இருவர் அல்லால், Oru Irivar Allaal - அச்ஸிநீ தேவர்களென்ன ஆகிய முப்பத்துமூவரமரர்கள் தவிர (மற்றவர்களான) யாம், Yaam - நாம் திருமாற்கு, Thirumaarku - எம்பெருமானைப் பணிவதற்கு வணக்கம் ஆர், Vanakkam Aar - நம்முடைய பணிவுதான் எத்தன்மையது! ஏ பாவம், Ae Paavam - அந்தோ!; நல் நெஞ்சே, Nal Nenje - நல்ல மனமே! நாமா, Naamaa - நாமோ வென்றால் மிக நாழ் உடையோம், Miga Naazh Udayom - மிகவும் குற்றமுள்ளவர்களாயிருக்கிறோமிறே. |
| 2595 | பெரிய திருவந்தாதி || 11 | நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை, வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ, நீரும்நீ யாய்நின்ற நீ. | ஆழாத பாரும் நீ, Aazhaadha Paarum Nee - (நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு; நீரும் நீ, Neerum Nee - ஜலதத்வமும்*; தீயும் நீ, Theeyum Nee - தேஜஸ்தத்வமும் நீ; காலும் நீ, Kaalum Nee - வாயுதத்வமும் நீ; வானும் நீ, Vaanum Nee - ஆகாசமும் நீ; ஆய் நின்ற நீ, Aay Nindra Nee - இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாகவுடைய நீ, நாழால் அமர் முயன்ற, Naazhaal Amar Muyantra - அஹங்காரத்தினால் யுத்தம் செய்வதில் கைவைத்த வல் அரக்கன், Val Arakkan - கொடிய இராவணனுடைய இன் உயிரை, In Uyirai - இனிமையான பிராணனை வாழா வகை, Vaazha Vagai - வாழ்ந்திருக்க ஒட்டாமல் வலிதல், Valithal - கவர்ந்து கொண்டது நின்வலியே, Ninvaliye - உனக்கு ஒரு சூரத்தனமோ? அல்ல. |
| 2596 | பெரிய திருவந்தாதி || 12 | நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்? போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும் காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு. | நெஞ்சே, Nenje - ஓ மனமே! (- (என்னை வருத்தத்திற்கு ஆளாக்கப் பார்த்தது நீயேயன்றோ.) (உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்வித்துக் கொள்ளுகிறீர்’ என்ற நெஞ்சு பதில் சொல்ல) (உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்’ என்று நெஞ்சு பதில் சொல்ல) (இப்போது முடிவாகச்சொல்கிறேன் கேள்;)- (கண்டாய் – முன்னிலையசை)) ஆழ் துயரில், Aazh Thuyaril - அநாதமான துக்க ஸாகரத்தில் வீழ்விப்பான், Veelvippaan - என்னைக் கொண்டு போய்த் தள்ளுவதாக நின்று உழன்றாய் நீ அன்றே, Nindru Uzhandraai Nee Andrae - இடைவிடாதே நின்று யத்னம் பண்ணினது நீயன்றோ; போய் ஒன்று சொல்லி என், Poi Ondru Solli En - மேன்மேலும் நீயொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்? போ, Po - அது கிடக்கட்டும். உபதேசம்தரினும், Upadesamtharinum - (எம்பெருமானுக்கு நம்பக்கல் உள்ளூற வாத்ஸல்ய முண்டு’ என்று உனக்கு நான்) உபதேசித்தாலும் நீ காழ்ந்து என்றும் கைக்கொள்ளாய், Nee Kaazhndhu Endrum Kaikkollai - நீ என்மேற் கோபங்கொண்டு என்றைக்கும் (அவ்வுபதேசத்தைக்) குறிக்கொள்கிறாயில்லை; போய் ஒன்று சொல்லி என், Poi Ondru Solli En - மேன்மேலும் நீ யொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்? போ, Po - அது கிடக்கட்டும். கண்ணன் தான், Kannan Thaan - எம்பெருமானது திருவடிகளை வாழ்த்துவதே, Vaazhthuvathe - வாழ்த்துவதுதான் வழக்கு, Vazhakku - நியாயம் |
| 2597 | பெரிய திருவந்தாதி || 13 | வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட, இழக்கவும் காண்டும் இறைவ.- இழபுண்டே, எம்மாட் கொண்டாகிலும் யான்வேண்ட, என்கண்கள் தம்மால்காட் டுன்மேனிச் சாய். | வழக்கொடு மாறுகொள் அன்று, Vazhakkodu Maarugol Andru - (இப்போது அடியேன் விஜ்ஞாபிக்கப் போகிற ஒரு விஷயம்) நியாத்தோடு மாறுபட்டதன்று; (- (அஃது என்னவெனில்)) அடியார் வேண்ட, Adiyaar Venda - (மேன்மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்களாகில் இழக்கவும் காண்டும், Izhakkavum Kaandum - (மேன்மக்கள் நஷ்டப்பட்டாகிலும் காரியம் செய்வதை உலகில்) காண்கிறோம்; இறைவ, Iraiva - ஸ்வாமீ! இழப்பு உண்டே, Izhappu Unde - (என்வேண்டுகோளை நிறைவேற்றுதற்காக) கஷ்டப்படவேண்டியது ஏதேனுமுண்டோ? (ஒன்றுமில்லை) யான் வேண்ட, Yaan Venda - என்னுடைய வேண்டுகோளுக்காக எம் ஆள் கொண்டு ஆகிலும், Em Aal Kondu Aagilum - என்னை அடிமைப்படுத்திக் கொண்டாவது என் கண்கள் தம்மால், En Kangal Thammaal - எனது கண்களுக்கு உன்மேனி சாய், Unmeeni Saai - உனது திருமேனியின் ஒளியை காட்டு, Kaattu - காட்டியருள வேணும் |
| 2598 | பெரிய திருவந்தாதி || 14 | சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே, பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த் தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம் பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து. | நெஞ்சே, Nenje - ஓ மனமே! (- (அப்பெருமானைக் கொன்றுவிட நினைத்து) (இப்படிக் கேட்பது எதுக்காக? என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள்;)) பேயார், Peyaar - பூதனையானவள், சாயால் கரியானை, Saayal Kariyanai - நிறத்தால் கரியனான கண்ணபிரானை உன் அறியார் ஆய், Un Ariyaar Aay - உள்ளே புகுந்து அநுபவிக்க அறியாதவளாய் பேயர் ஆய், Peyar Aay - அறிவுகெட்டவளாய் முலை கொடுத்தார், Mulai Koduththaar - (விஷம் தடவின) முலையை (உண்ணக்) கொடுத்தாள்; நீ ஆர், Nee Aar - அவளுக்கு நீ உறவு முறையில் என்ன ஆகவேண்டும்? தேம்பு ஊண் சுவைத்து, Theembu Oon Suvaiththu - ஆத்மா கெட்டுப்போம்படியான சப்தாதி விஷய போகங்களை நீ அநுபவித்து ஊன் அறிந்து அறிந்தும், Oon Arindhu Arindhum - (அதனால்) ஊனமடைந்திருக்கிறாயென்பதை நன்றாக நீ அறிந்திருந்தும் போய், Poy - நம்முடைய தாழ்வுக்குத் தகாததான சிறந்த பகவத் விஷயத்தை அநுபவிப்பதாகப்) போய் தீ வினை ஆம்பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி, Thee Vinai Aampam Paar Vaai Kain Neettal Paarthi - அநர்த்தத்தை விளைக்கவல்ல பாம்பின் வாயிலே கை வீட்டுவாரைப் போலலே பகவதநுபவம் பண்ணி மூடியப் பார்க்கிறாயே. |
| 2599 | பெரிய திருவந்தாதி || 15 | பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம் பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம் தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய செம்மேனிக் கண்வளர்வார் சீர். | நெஞ்சே, Nenje - ஓ மனமே! ஓதம், Otham - கடலானது ஆர்த்து, Aarththu - கோஷித்துக்கொண்டு தம்மேனி தாள், Thammeeni Thaal - தம்முடைய திருமேனியையும் திருவடியையும் தடவ, Thadava - (அலையாகிற கையினாலே) தடவும்படியாக தாம் கிடந்து, Thaam Kidandhu - (அக்கடலில்) பள்ளி கொண்டருளி தம்முடைய செம்மேனி கண் வளர் வார், Thammudaiya Semmeeni Kan Valar Vaar - தம்முடைய செந்நிறமான திருக்கண்கள் வளரப்பெறுகின்றவரான பெருமாளுடைய சீர், Seer - திருக்குணங்களை, படு துயரம் பேர்த்து ஓத, Padu Thuyaram Perthu Otha - கொடிய துக்கங்கள் தீரும்படி நாம் பேசுவதனால் பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை, Peedu Azhivu Aam Peechu Illai - அவனுடைய பெருமைக்கு அழிவு உண்டாய்விடுமென்பதில்லை; எதிரிதா பார்த்து ஓர், Edhiridha Paarthu Oor - (இவ்விஷயத்தை) கண்ணெதிரே நிற்பதாகக் கண்டு தெரிந்துகொள். |
| 2600 | பெரிய திருவந்தாதி || 16 | சீரால் பிறந்து சிறப்பால் வளராது, பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப் புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே? சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து. | பேராளா, Peraala - ‘மஹாநுபாவனான பெருமானே! சீரால் பிறந்து சிறப்பால் வளராது, Seeraal Pirandhu Sirappaal Valaraadhu - சிறப்புடன் பிறப்பதையும் சிறப்புடன் வளர்வதையும் செய்யாமல் பேர் வாமன் ஆகாக்கால், Peer Vaaman Aagaakkal - திருநாமம் வ மானென்று வைத்துக் கொள்ளாமலிருந்தால் மார்பு ஆர புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி, Maarbu Aara Pulki Nee Undu Umizhndha Bhoomi - உன்னாலே மார்பால் அணையப்பட்டும் வயிற்றில் வைக்கப்பட்டும் பின்பு வெளிப்படுத்தப்பட்டும் இப்படி ஸ்வாதீநமாயிருந்த இப்பூமியானது. நீர் ஏற்பு அரிதே, Neer Erppu Aridhe - தாரை வார்த்து தத்தம் பண்ணிக் கொடுக்கப்பெற முடியாதோ?’ யாம் அறிய, Yaam Ariya - இவ்விஷயத்தை அடியோம் தெரிந்து கொள்ளும்படி நீ சூழ்ந்து சொல்லு, Nee Soozhndhu Sollu - நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேணும். |
| 2601 | பெரிய திருவந்தாதி || 17 | சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும் வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய, தாள்வரைவில் லேந்தினார் தாம். | எங்கும் சூழ்ந்து, Engum Soozhndhu - நாற்புறங்களிலும் சுற்றிக்கொண்டு அரக்கன், Arakkan - இராவணனுடைய வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடிய, Vaal Varaigal Pol Van Thalaigal Thaam Idhiya - ஒளி பொருந்திய, மலைகள் போல் வலிதான தலைகளானவை இற்று விழும்படி தாள்வரைவில் ஏந்தினார் தாம், Thaalvaraivil Aendhinar Thaam - காலுரத்தை யுடைத்தாய் மலை போன்றதான வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான் சூழ்ந்து, Soozhndhu - (இந்த லீலா விபூதியிலே வந்து) வளைத்துக் கொண்டு அடியார் வேண்டின் அக்கால், Adiyaar Veenin Akkal - ‘ஓ ஜனங்களே! நீங்கள் எனக்கு அடிமைப்பட வேணும்’ என விரும்பினால் தோன்றாது விட்டாலும், Thondraathu Vittaalum - ஒரு அடியவனும் அகப்படாதபடி உபேக்ஷிக்கப் பெற்றாலும் வாழ்ந்திடுவர், Vaazhnthiduvar - திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்) உகந்தேயிருப்பர்; பின்னும், Pinnum - எக்காலத்திலும் தம் வாய் திறவார், Tham Vaai Thiravaar - (பிராட்டிமாரிடத்திலும் இந்த மனக் குறையை) வாய் திறந்து சொல்லிக்கொள்ளமாட்டார். |
| 2602 | பெரிய திருவந்தாதி || 18 | தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக, பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப் பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன் தொல்லுருவை யாரறிவார் சொல்லு. | தாம்பால் ஆப்புண்டாலும், Thaampaala Aappundhaalum - (அசோதையினால்) தாம்பு கொண்டு கட்டியடிக்கப் பெற்றாலும் அத்தழும்புதான் இளக, Aththalumbudhaan Ilaga - அந்தத் தாம்பினால் கட்டினத்தாலுண்டான காய்ப்பு அற்பதம் என்னும்படி பாம்பால், Paampaala - காளியனாகிய பாம்பினால் ஆப்புண்டு, Aappundu - கட்டப்பட்டு பாடு உற்றாலும், Paadu Utralaam - கஷ்டங்களையடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்) சோம்பாது, Soombaadhu - (ஜகத்ஸ்ருஷ்டியில்) சோம்பல்படாமல் இ பல் உருவை எல்லாம், I Pal Uruvai Ellam - இவ்வுலகில் காணப்படுகிற பலபல பிராணிகளையெல்லாம். படர்வித்த, Padarvitha - விஸ்தாரமாக வுண்டாக்கின வித்தா, Viththa - ஆதிமூலமே! உன் தொல் உருவை ஆர் அறிவார், Un Thol Uruvai Aar Arivaar - உன்னுடைய திவ்ய ஸ்வரூபத்தை அறிவாருண்டோ? சொல்லு, Solla - நீயே சொல்லு. |
| 2603 | பெரிய திருவந்தாதி || 19 | சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே, எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண் மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக, காத்தானைக் காண்டும்நீ காண். | சூது அறியா நெஞ்சமே, Soodhu Ariyaa Nenjamai - செய்ய வேண்டியது இன்னதென்றறியாமல் தளும்புகிற மனமே! (- (மெய்யே காண விரும்பினால்)) சொல்லில் குறை இல்லை, Sollil Kurai Illai - பகவத் விஷயத்தைப் பேசினால் பேச்சில் குறையில்லை; (அல்லது) நமக்கொரு குறையில்லை; தொல்லை கண், Thollai Kan - அநாதியான இப்பூமியில் மா தானைக்கு எல்லாம், Maa Thanaikku Ellam - (துரியோதநாதிகளுடைய) பெரிய சேனைகளுக்கெல்லாம். ஓர் ஐவரையே மாறு ஆக, Oor Aivaraie Maaru Aaga - பஞ்சபாண்டவர்களே எதிரிகளாம் படி எல்லி பகல் என்னாது எப்போதும் காத்தானை, Elli Pagal Ennaadhu Eppodhum Kaathaanai - இரவுபகலென்னாமல் எக்காலத்திலும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை காண்டும், Kaandum - காண்போம்! நீ காண், Nee Kaan - நீ காணலாம். |
| 2604 | பெரிய திருவந்தாதி || 20 | காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம், நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான், திருவாகம் தீண்டிற்றுச் சென்று. | அறிவு கைக் கொண்ட நல் நெஞ்சம், Arivu Kaik Konda Nal Nenjam - அறிவுடைய நல்ல நெஞ்சே மாணி உரு ஆகிக்கொண்டு, Maani Uru Aagikkondu - வாமநரூபியாய் உல்கம் நீர் ஏற்ற சீரான், Ulgam Neer Aetra Seeraan - (மாவலியிடத்திற் சென்று) உலகங்களை நீரேற்றப் பெற்ற சீர்மை பொருந்திய திருமால். சென்று, Sendru - தானே எங்கும் பரவி திரு ஆகம, Thiru Aagama - தனது திருமேனியினாலே தீண்டிற்று, Theendirru - உலகங்களையெல்லாம் தீண்டினானென்பதை காணப்புகில், Kaanappugil - ஆராய்ந்தோமாகில் நாம் பேசில், Naam Pesil - நாம் பேசும் வார்த்தைகளுக்கு நாணப்படும் அன்றே, Nanappatum Anre - வெட்கப்பட வேண்டுமன்றோ |
| 2605 | பெரிய திருவந்தாதி || 21 | சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு, இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப் பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய, காருருவன் தான்நிமிர்த்த கால். | அன்று, Anru - முன்பு மாவலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில் அங்கு, Anku - அந்த மாவலியின்யாக பூமியிற் சென்று பார் உருவும், Par Uruvum - பூமியாகிறஸ்துவும் பார் வளைத்த நீர் உருவும், Par Valaitta Nir Uruvum - அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற ஜலதத்துவமும் கண் புதைய, Kan Pudaiya - மறையும்படி கார் உருவன் தான் நிமிர்த்த கால், Kar Uruvan Tan Nimirtta Kal - காளமேகத் திருவுருவனான எம்பெருமான் நிமிர்த்தருளிய திருவடிகள் அங்கு வெம் நரகில் சென்று சேராமல் காப்பதற்கு, Anku Vem Narakil Cenru Ceramal Kappatarku - கொடிய அந்த நரகங்களிலே நான் சென்று சேராதபடி என்னை உஜ்ஜீவிக்கச் செய்யும் பொருட்டு இன்று, Inru - இப்போது இங்கு, Inku - இவ்விடத்தில் என் நெஞ்சால், En Nencal - என்னுடைய நெஞ்சிலே இடுக்குண்ட, Itakkunta - நெருக்குப்பட்டுக்கிடக்கின்றன. |
| 2606 | பெரிய திருவந்தாதி || 22 | காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள், மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால் தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம், வீற்றிருக்குமிடம் காணா திளைத்து. | என் மனத்தே, En Manatte - எனது நெஞ்சினுள்ளே மாலால் குடி புகுந்தார், Malal Kuti Pukunrar - திருமால் வந்து சேர்ந்துவிட்டார்; வல் வினையார் தாம், Val Vinaiyar Tam - (இதுவரையில் இங்கே குடியிருந்த) கொடிய பாவங்கள். வீற்றிருக்கும் இடம் காணாது, Virrirukkum Itam Kanadu - (இனிமேலும்) அதிகாரம் செலுத்திக்கொண்டு தங்கியிருக்க இடம் காணாமல் கால் பொத திரிந்து, Kal Pota Tirintu - கால் நோவத்திரிந்து அலைந்ததனால் மேலால், Melal - முன்பெல்லாம் தருக்கும், Tarukkum - என்னைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்த இடம் பாட்டினொடும், Itam Pattinotum - பெருமையோடே இளைத்து, Ilaitthu - வருத்தமுற்று இன்நாள், Innaal - இப்போது கத்துவாரம், Kattuvaaram - கத்திக்கொண்டு கிடக்கின்றன போலும். |
| 2607 | பெரிய திருவந்தாதி || 23 | இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன், இளைக்க நமன்தமர்கள் பற்றி – இளைப்பெய்த, நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான், தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான். | நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே! நமன் தமர்கள், Naman Thamarhal - யமபடர்கள் இளைக்க பற்றி, Ilaiyka Patri - பிடிக்கிற பிடியிலே நாம் துடிக்கும்படி நம்மைப் பிடித்து இளைப்பு எய்த, Ilaiyppu Eitha - அதற்கு மேலும் அதிகமாகத் துடிக்கும்படி நாய்தந்து மோதாமல், Naithandu Moothamal - நாய்களை ஏவி நலியாமற்படி நங்குவான் நல்காப்பான், Nanguvaan Nalkaappaan - (எம்பெருமான் நமக்கு) அருள் செய்தாலும் சரி, அருள் செய்யாவிட்டாலும் சரி; தான், Thaan - அந்த எம்பெருமான்தான் எவ்வுயிர்க்கும், Evvuirkkum - எல்லாப்பிராணிகளுக்கும் தாய் தந்தை, Thaai Thandai - தாயும் தமப்பனுமாவன்; சொன்னேன், Sonnain - (இவ்வுண்மையை உனக்குச்) சொல்லிவிட்டேன்; இளைப்பாய் இளைப்பாய், Ilaiyppai Ilaiyppai - இனி நீ அநர்த்தப்பட்டாலும் படு; சுகப்பட்டாலும் படு. |
| 2608 | பெரிய திருவந்தாதி || 24 | தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான் தானே பிறர்கட்கும் தற்றோன்றல்,- தானே இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால், அளக்கிற்பார் பாரின்மேல் ஆர். | தானே தனி தோன்றல், Thaane Thani Thondral - அவ்வெம்பெருமானொருவனே புருஷோத்தமன்; தானே தன் அனப்பு ஒன்று இல்லாதான், Thaane Than Anappu Ondru Illadhaan - அவனே ஒப்பற்றவன்; இளைக்கில், Ilaiykkil - (ரக்ஷிக்குந் தொழிலில்) சளைத்து நின்கிற பக்ஷத்தில் பார், Paar - இவ்வுலகமானது கீழ்மேல் ஆம், Keelmael Aam - தலைகீழாக விபரீதமாய்வீடும்; பிறர் தானே கட்கும் தற்றேன்றல், Pirark Thaane Katkum Thatrenral - அவனே மற்றெல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவன்; (தானே), Thane - இப்படிப்பட்ட எம்பெருமான்றானே மீண்டு அமைப்பான் ஆனால, Meendu Amaippaan Aanala - (தலை கீழானவற்றை அவனே) மறுபடியும் சரிப்படுத்தப்புகுந்ததால் பாரின் மேல் ஆர் அளக்கிற்பார், Paarin Mel Aar Alakkirpaar - இப்பூமியில் ஆர்தாம் (அவனுடைய ரக்ஷகத்வத்தை) அளவிடவுரியர்? |
| 2609 | பெரிய திருவந்தாதி || 25 | ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார் மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன்,வானோர் இனத்தலைவன் கண்ணனால் யான். | ஆரானும் ஆதானும் செய்ய, Aaraanum Aadaanum Seyya - யாராவது எதையாவதுசெய்து கொள்ளட்டும்; அகல் இடத்தை ஆராய்ந்து, Akal Idaththai Aaraindhu - விசாலமான இப்பூமியை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே, Adhu Thiruththal Aavadhe - அவரவர்களது காரியங்களைத் திருத்த நம்மாலாகுமோ? யான், Yaan - நானோவென்றால் சீர் ஆர் மனத்தலை, Seer Aar Manaththalai - (எனது) சிந்த மனத்திலுள்ள வன் துன்பத்தை, Van Thunbaththai - வலிய துன்பங்களை வானோர் இனம் தலைவன் கண்ணனால், Vaanor Inam Thalaivan Kannanaal - நித்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனான கண்ணபிரானால் மாற்றினேன், Maatrinen - நீக்கிக்கொண்டேன். |
| 2610 | பெரிய திருவந்தாதி || 26 | யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக் கானும் மலையும் புகக்கடிவான்,- தானோர் இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த, அருளென்னும் தண்டால் அடித்து. | ஓர் இருள் தான் அன்ன மாமேனி, Oor Irul Thaan Anna Maameni - இருள்தானே ஒரு வடிவு கொண்டாற்போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியையுடைய எம் இறையார், Em Iraiyaar - எம்பெருமான் தந்த, Thanda - அளித்த அருள் என்னும் தண்டால், Arul Ennum Thandhaal - க்ருபையாகிற ஒரு தடியினாலே வல்வினையை, Valvinaiyai - கொடிய பாவங்களை அடித்து, Adiththu - புடைத்து, கானும் மலையும் புக, Kaanum Malaiyum Puga - (அவை) காடுகளிலும் மலைகளிலும் சென்று புருரும்படியாக கடிவான், Kadivaan - தூரத்துவதற்கு யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம், Yaanum En Nenjum Isainthozhindhom - நானும் என் மலாமுமாகிற இருவரும் இசைந்து நின்றோம். |
| 2611 | பெரிய திருவந்தாதி || 27 | அடியால் படிகடந்த முத்தோ,அதன்றேல் முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய். செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம், அறிகிலாமால் நீயளந்த அன்று. | நெடியாய், Nediyai - பகவானே! செறி கழல் கொள் தான் நிமிர்த்து, Serri Kazhal Kol Thaan Nimirthu - செறிந்த வீரக் கழலை அணிந்த திருவடிகளை நீட்டி உலகம் எல்லாம் சென்று நீ அளந்த அன்று, Ulagam Ellam Sendru Nee Alandha Andru - கீழுலகம் மேலுலகமெல்லாம் வியாபித்து அளந்த காலமாகிய த்ரிஸிக்கிரமாவதாரத்திலே அடியால் படி சடந்த முத்தோ, Adiyal Padi Sadandha Muththo - திருவடியால் பூமி முழுவதையும் அளந்துகொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ? அது அன்றேல், Adhu Andraeel - அல்லது முடியால் விசும்பு அளந்த முந்தோ, Mudiyal Visumbu Alandha Mundho - திருவடியால் மேலுலகத்தையெல்லாம் அளந்து கொண்டதனாலுண்டான ஸந்தோஷமோ? அறிகிலம், Arikilam - அவ்விரண்டு ஸந்தோஷங்களுள் எந்த ஸந்தோஷம் இப்போது உன் நெஞ்சில் ஓடுகிறதென்பதை அறிகிறோமில்லை. |
| 2612 | பெரிய திருவந்தாதி || 28 | அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம், இன்றேநாம் காணா திருப்பது வும்,-என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும் உட்கண்ணால் காணு முணர்ந்து. | என்றேனும், Endraenum - எக்காலத்திலும் கண் கண்ணால், Kan Kannal - வெளிக்கண்ணாலே நாணாக, Naanaga - காணக்கூடாத அவ்வுருவை, Avvuruvai - அப்படிப்பட்ட விலக்ஷணமான திருவுருவத்தை நெஞ்சு என்னும் உன் கண் உணர்ந்து காணுமேல், Nenju Ennum Un Kan Unarndhu Kaanumeel - நெஞ்சாகிற அகக்கண் விகஹித்து ஸாக்ஷாத்கரிக்குமாகில், அன்றே, Andrae - அப்போதே, ஆழியான கார் உருவம், Azhiyana Kaar Uruvam - திருவாழியை நிரூபகமாகவுடையனான எம்பெருமானுடைய கரிய திருமேனியை நம் கண் காணும், Nam Kan Kaanum - நமது புறக்கண்ணும் காணப்பெறும்; நாம் காணாதிருப்பதுவும் இன்றே, Naam Kaanadhiruppadhum Indrae - நாம் அவ்வுருவத்தைக் காணாமல் வருந்திக் கிடப்பது அகக்கண் மலராத இப்போது மாத்திரமே. |
| 2613 | பெரிய திருவந்தாதி || 29 | உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே, இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத் தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால், எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு. | இணரும் துழாய் அலங்கல் எந்தை, Inarun Thuzhai Alankal Endhai - (திருமேனியின் ஸம்பந்தத்தாலே) மேன்மேலும் தழைத்தோங்கு கின்ற திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமான் தனக்கு எளியர், Thanakku Ezhiyar - தனக்கு அடிமைப்பட்டவர்கள் எவ்வளவர், Evvalavar - (தன்மேல்) எவ்வளவு அன்பு உடையவர்களோ அவ்வளன், Avvalan - தானும் தன்னை அவ்வளவு காட்டிக் கொடுப்பவன் (திருமால்) ஒருவர்க்கு, Oruvarkku - (தாமாகவே முயற்சி செய்பவர்களில்) ஒருவர்க்காவது செவ்வே, Sevvae - நேராக உணர எளியனே?, Unar Ezhiyane - அறியக்கூடியவனோ? (ஒருவர்க்கும் அறியக்கூடியவைனல்லனாயினும்) ஆனால், Aanaal - ஆகையினாலே இங்கு, Inku - இவ்விடத்தில் எம்பெருமான், Emperumaan - எம்பெருமான் எனக்கு, Enakku - என்னாவறிந்து உணர எளியன், Unar Ezhiyan - கொள்ளக்கூடியவன். |
| 2614 | பெரிய திருவந்தாதி || 30 | இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே மடியடக்கி நிற்பதனில் வல்வி னையார் தாம்,மீண் டடியெடுப்ப தன்றோ அழகு? | இங்கு, Inku - என்னுடைய இந்த நெஞ்சில் பண்டுபோல், Pandupol - இத்தனை நாளும் போலே என்னுடைய செம் கண் மால், Ennudaiya Sem Kan Maal - என்மேல் வாத்ஸல்யத்தாலே வெந்த திருக்கண்களையுடையனான பெருமானுடைய சீர்க்கும், Seerkum - கல்யாண குணங்களுக்கே உள்ளம் சிறிது, Ullam Siridhu - எனது நெஞ்சு இடம்போராத தாயிருக்கின்றது. அங்கே, Ange - முன்பு விசாலமாக வாழ்ந்தவிடத்திலே வீற்றிருத்தல் இல்லை, Veetiruththal Illai - (பாவங்கள் இனி) தங்கியிருக்க முடியாது (ஏனென்றால்) வல்வினையார் தாம், Valvinaiyaar Thaam - கொடிய பாவங்கள் மடி அடக்கி நிற்பதனில், Madi Adakki Nirpadanil - துணியை இடுக்கிக் கொண்டு நெருக்கமாக நிற்பதைவிட ஈண்டு, Eendu - இவ்விடத்தில் நின்றும். அடி எடுப்பது அன்றோ அழகு, Adi Eduppadhu Andro Azhagu - கால் பேர்ந்து வெளிக் கிளம்பிப் போவதன்றோ அழகியது. |
| 2615 | பெரிய திருவந்தாதி || 31 | அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான், நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக் குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத் தடங்கடலை மேயார் தமக்கு. | நல்வினையை தீர்ப்பான், Nalvinaiyai Theerppaan - வலிய பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக (- (வல்வினையைத் தீர்ப்பதற்கு அறிந்த உபாயம் இதுவே.)) அழகும் அறிவோம் ஆய், Azhagum Arivom Aay - அழகிய உபாயத்தை அறிந்தோமாக, குடங்கள், Kudangal - குடங்களை தலை மீது எடுத்துக்கொண்டு, Thalai Meedhu Eduththukondu - தலையின் மேலே எடுத்து வைத்துக்கொண்டு சுழல ஆடி, Suzhala Aadi - ஆகாசத்திலே சுழன்று வரும்படி கூத்தாடி அன்று, Anru - முற்காலத்திலே (அக்குடக்கூத்தாடினவிடாய் தீர்வதற்காக) அத் தட கடலை மேயார் தமக்கு, Ath Thada Kadalai Meyaar Thamakku - (முதலில் விட்டு வந்த) அப்பெரிய திருப்பாற்கடலிலேயே போய்ச் சேர்ந்த பெருமானுக்கு நிழலும் அடி தாறும் ஆனோம், Nizhalum Adi Thaarum Aanom - பாது நிழலாகவும் பாதரேகையாகவும் உடன்பட்டோமானோம். |
| 2616 | பெரிய திருவந்தாதி || 32 | தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார், தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார், யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது? | தமக்கு அடிமை வேண்டுவார், Thamakku Adimai Vendum Vaar - தாம் அடிமையாயிருப்பதற்கு ஆசைப்படுமவரான தாமோதரனார் தமக்கு, Thamodharanaar Thamakku - தாம்பாலாப்புண்ட பெருமானுக்கு அடிமை செய் என்றால், Adimai Sei Endraal - (நெஞ்சே! நீ) அடிமை செய் என்று சொன்னால் நெஞ்சினார், Nenjinaar - எனது நெஞ்சானது செய்யாது, Seiyyaadhu - அப்படியே அடிமை செய்யாமல் எமக்கென்று, Emakkendru - என் வார்த்தை கேளாத ஸ்வாகத் திரியம் பாராட்டி தாம் செய்யும தீ வினைக்கே, Thaam Seiyyum Thee Vinnaikkee - (வெகுகாலமாகத்) தான் செய்து வருகிற தப்புக் காரியத்திலேயே தாழ்வுறுவர், Thaazhvuruvaar - ஊன்றியிருக்கின்றது; இங்கு, Inku - இப்படிப்பட்ட நிலைமையில் யாம் செய்வது யாது, Yaam Seivathu Yaadhu - நான் செய்யத்தக்கது என்னோ? |
| 2617 | பெரிய திருவந்தாதி || 33 | யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ, யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,- யாதானும் தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால் பாறுபா றாக்கினான் பால். | யாதானும் தேறும் ஆ செய்யா அசுரர்களை, Yaadhaanum Therum A Seiyaa Asurarhalai - கொஞ்சமும் விச்வஹிக்கும்படியான செயலைச் செய்யாதவர்களான அஸுரர்களை (- (எப்போதும் தீங்கையே செய்பவர்களை) (சிறந்த பெருமானை அயோக்யமான நாம் கிட்டவாமோ என்னில்) (அணுகாவாறு தான் என்கொல்?)) நேமியாய், Nemiyaa - திருவாழியினாலே பாறு பாறு ஆக்சினான் பால், Paaru Paaru Aaksinaan Paal - துண்டம் துண்டமாகத் துணித்தொழித்த எம்பெருமான் பக்கலில் யாதானும் நேர்ந்து, Yaadhaanum Neerndhu - எதையாவது ஸமர்ப்பித்து அணுகா ஆறுதான் என்கொல், Anugaa Aaru Thaan Enkol - கிட்டாமலிருப்பது என்னோ? யாதானும் ஒன்று அறியில், Yaadhaanum Ondru Ariyil - எதையாவது ஒரு வஸ்துவை அறியக்கூடிய சைதந்யத்தையுடைத்தாயிருந்து வைத்தும் தன் உகக்கில், Than Ugakkil - தான் ஆநந்தப்படுவதைத் தன்மையாக உடைத்தாயிருந்து வைத்தும் |
| 2618 | பெரிய திருவந்தாதி || 34 | பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச் சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும், நீதியாய்! நிற்சார்ந்து நின்று. | நீலாழி சோதியாய், Neelaazhi Sothiyaai - நீலக்கடல் போன்ற நிறத்தையுடையவனே! ஆதியாய், Aadhiyaai - முழுமுதற் கடவுளே! எம்பால் தொல் வினை கடியும் நீதியாய், Empaal Thol Vinai Kadiyum Neethiyaai - எம்மிடத்திலே யுள்ள பழைய பாவங்களைத் தொலைக்குமியல்வுடையவனே! யாம், Yaam - அடியோம் நின், Nin - உன்னை சார்ந்து நின்று, Saarndhu Nindru - அணுகி, நீ பால் ஆழி கிடக்கும் பண்பை, Nee Paal Aazhi Kidakkum Panbai - நீ திருப்பாற் கடலில் சயனிக்கு மழகை கேட்டேயும், Kaetteyum - காதாற்கேட்ட மாத்திரத்திலும் கால் ஆழும், Kaal Aazhum - கால்கள் தடுமாறுகின்றன; நெஞ்சு அழியும், Nenju Azhiyum - நெஞ்சு சிதிலமாகா நின்றது; கண் சுழலும், Kan Suzhalum - கண்கள் சுழலவிடா நின்றன. |
| 2619 | பெரிய திருவந்தாதி || 35 | நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும், ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான், அன்புடைய னன்றே யவன்? | அன்று, Anru - முற்காலத்தில் அம் கை வன் புடையால், Am Kai Van Pudaiyaal - அழகிய திருக்கைகளாலே ஓங்கி அறைந்ததனால் பொன் பெயரோன் வாய் தகர்ந்து, Pon Peyroon Vaai Thakarndhu - இரணியாசுரனுடைய (ப்ரஹ்லாதனை அதட்டின) வாயைப் புடைத்து நின்றும், Nindrum - (என்னெஞ்சிலே) நின்று கொண்டிருந்தும் இருந்தும், Irundhum - வீற்றிருந்தும் கிடந்தும், Kidandhum - சயனித்திருந்தும் திரிதந்தும், Thiridandhum - எழுந்துஉயாலியும் ஒன்றும், Ondrum - கொஞ்சமும் மார்பு இடந்தான் அவன், Maarbu Idandhaan Avan - (அவ்விரணியனுடைய) மார்பைக் கிழித்தெறிந்த பெருமான். அன்பு உடையான் அன்றே, Anbu Udaiyaan Andrae - (ஆச்ரிதர்திறத்தில்) மிக் அன்புடையவனன்றோ; (ஆனது பற்றியே) ஓவாற்றான், Ovaattraan - திருப்தியடைகிறானில்லை; என் நெஞ்சு அகலான், En Nenju Akalaan - என்னுடைய நெஞ்சைவிட்டு நீங்குகிறானில்லை. |
| 2620 | பெரிய திருவந்தாதி || 36 | அவனாம் இவனாம் உவனாம், மற்றும்ப ரவனாம் அவனென் றிராதே,- அவனாம் அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால், அவனே எவனேலும் ஆம். | அவன், Avan - ஸர்வேச்வரனானவன் அவன் ஆம், Avan Aam - துர்பலனாயிருப்பனோ? இவன் ஆம், Ivan Aam - ஸுலபனாயிருப்பனோ? உவன் ஆம், Uvan Aam - மத்யஸ்தனாயிருப்பனோ? மற்று உம்பரவன் ஆம், Mattru Umbaravan Aam - அல்லது, மிகவும் உயர்ந்தவனாய் எட்டாதேயிருப்பனோ? என்று இராதோ, Endru Iraatho - என்றிப்படி பலவகையான ஸந்தேஹங்கள் கொண்டிராமல் அவன் அவனே ஆம் என தெளிந்து, Avan Avane Aam En Thelinthu - எம்பெருமானுடைய ஸ்வரூபமே லௌலப்யம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டு கண்ணனுக்கே தீர்ந்தால், Kannankke Theerndhaal - அந்த ஸௌவப்யத்தை க்ருஷ்ணாவதார முகத்தாலே விளங்கக் காட்டிய அவனுக்கே ஆட்பட்டால் அவனே, Avane - அப்பெருமானே எவனேலும் ஆம், Evanelum Aam - எல்லாவுறவுமுறையுமாவன். |
| 2621 | பெரிய திருவந்தாதி || 37 | ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே? நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய் மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம் அதுகரமே அன்பால் அமை. | நல் நெஞ்சே, Nal Nenje - நல்ல மனமே! (- (ஆகையால் நீ செய்யத்தக்கது என்னவென்றால்)) ஆம் ஆறு அறிவு உடையார் ஆவது, Aam Aaru Arivu Udaiyaar Aavathu - யுக்தமான அறிவை உடையவராக ஆவது அரிது அன்றே, Aridhu Andrae - (உலகில் யார்க்கும்) அருமையன்றோ; அது, Adhu - அப்படிப்பட்ட அறிவை நாமே உடையோம், Naam E Udaiyom - (பகவத் கிருபையால்) பெற்றிருக்கின்றோம்; பூ மேய் மதுகரம் மே தண் துழாய், Poo Mey Mathukaram Me Than Thuzhai - பூக்களிலே மேய்கின்ற வண்டுகள் படிந்துள்ள குளிர்ந்த திருத்துழாயையுடையனாய் மாலாரை, Maalaarai - (ஆச்ரிதர் திறத்தில்) வ்யாமோஹமுடையான பெருமாளை வாழ்த்து ஆம் அது, Vaazhthu Aam Adhu - வாழ்த்துவதாகிற அக்காரியமொன்றிலேயே அன்பால், Anbaal - பக்தியுடன் கரமே, Karame - திண்ணமாக அமை, Amai - ஊன்றியிரு. |
| 2622 | பெரிய திருவந்தாதி || 38 | அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே, இமைக்கும் பொழுதும் இடைச்சி – குமைத்திறங்கள், ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே, பேசியே போக்காய் பிழை. | நெஞ்சே, Nenje - ஓ மனமே! ஆராயில், Aaraayil - ஆராய்ந்து பார்த்தால் இமைக்கும் பொழுதும், Imaykkum Pozhudum - ஒரு க்ஷண காலமாகிலும் அமைக்கும் பொழுது உண்டே, Amaikkum Pozhuthu Unde - வீண்போது போக்க முடியுமோ? இடைச்சி குமை திறங்கள், Idaichchi Kumai Thirangal - யசோதையின் கையிலே அகப்பட்டு இவன் நலிவுபட்ட பாடுகளை ஏசியே ஆயினும், Easiyai Aayinum - பரிஹா ஸோக்தியாகச் சொல்லியாவது ஈன் துழாய் மாயளையே, Een Thuzhai Maayalaiye - போய்கமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானைப் பற்றியே பேசியே, Pesiyye - (எதையாவது) பேசிக்கொண்டே பிழை, Pizhai - உனது பாவங்களை போக்காய், Pokkai - போக்கிக் கொள்ளப்பார். |
| 2623 | பெரிய திருவந்தாதி || 39 | பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே! பேசாய், தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால் போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு. | நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே! தழைக்கும் துழாய் மார்வன் தன்னை, Thazhaikkum Thuzhai Maarvan Thannai - தழைத்தோங்குகின்ற திருத்துழாய் மாலையைத் திருமார்விலே யுடையனான எம்பெருமானைக் குறித்து அழைத்து, Azhaitthu - கூப்பிட்டு ஒருகால், Orukaal - அவனுக்குத் திருவுள்ளமானவொரு காலத்திலே போய், Poy - பரமபதத்திலே சென்று பொலிய, Poliya - நன்றாக உபகாரம், Upakaaram - கைங்கரியங்கள் செய்கையாகிற உபகாரத்தை கொள்ளாது, Kollaadhu - கொள்ள முயலாமல் அவன் புகழே, Avan Pugazhe - அப்பெருமானது திருக்குணங்களையே வாய் உபகாரம் கொண்ட, Vaai Upakaaram Konda - வாயாலே சொல்லிக்கொண்டருக்கையாகிற வாய்ப்பு, Vaippu - இந்த நேர்பாடு பிழைக்க முயன்றோமோ, Pizhaikka Muyanrom - தப்பு செய்ததாமோ? பேசாய், Pesai - நீ சொல்வாய். |
| 2624 | பெரிய திருவந்தாதி || 40 | வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே, போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை மாய்த்தானை வாழ்தே வலி. | வா நெஞ்சே, Va Nenje - வாராய் மனமே! இது ஒப்ப வாய்ப்பு மற்று இல்லை, Idhu Oppa Vaippu Matru Illai - இப்போது நமக்கு வாய்திருக்கிற மாதிரி மற்று எப்போதும் வாய்க்கமாட்டாது காண; வெம் நரகில், Vem Narakil - (நைச்சியம் பேசிப் பின் வாங்குவதாகிற) கொடிய நரகத்திலே பூவியேல், Pooviyel - கொண்டு தள்ளி விடாதே; தீ பால, Thee Paal - தீயதான தன்மையையுடையலான பேய் தாய், Pei Thaai - தாய் வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய உயிர், Uyir - பிராணனை பால், Paal - அவளது முலைப்பாலோடே நலாய், Nalai - கலந்து உண்டு, Undu - அமுது செய்து அவன் உயிரை மாய்த்தானை, Avan Uyirai Maayththaanai - அப்பூதனையினது உயிரை முடித்த பெருமானை வாழ்த்தே, Vaazhththe - வாழ்த்துதலே வலி, Vali - நமக்கு மிடுக்காம். |
| 2625 | பெரிய திருவந்தாதி || 41 | வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர் வலிய முடியிடிய வாங்கி,-வலியநின் பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே, பன்னாளும் நிற்குமிப் பார். | வலியம் என நினைந்து, Valiyam Ena Ninaindhu - நாமே பலசாலிகள்’ என்று நினைத்துக் கொண்டு (- (நீ கைகோகக் காரியம் செய்ததைக் கண்ணால் கண்டு வைத்தும்)) வலிய முடி, Valiya Mudi - வலிதான தலைகள் இடிய, Idiya - சிதறியொழியும்படி வாங்கி, Vaangi - போக்கடித்து நின், Nin - உன்னுடைய வலிய பொன் ஆழி கையால், Valiya Pon Aazhi Kaiyaal - வலிதாயும் அழகிய திருவாழியையுடையதாயுமுள்ள திருக்கையாலே புடைத்திடுதி, Pudaitthiduthi - (அந்த மல்லர்களை) அடித்துவிட்டாய்; வந்து எதிர்த்த மல்லர், Vandhu Edhirththa Mallar - எதிரிட்டு வந்த மல்லர்களுடைய இப்பார், Ippaar - இவ்வுலகமானது கீளாதே, Keelaadhe - வயிறு வெடித்து மாய்ந்து போகாமல் பல் நாளும் நிற்கும், Pal Naalum Nirkkum - சிரஞ்ஜீவியாயிருக்கின்றதே! (என்ன கல் நெஞ்சோ!) |
| 2626 | பெரிய திருவந்தாதி || 42 | பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் பாரிடம் முன்படைத்தா னென்பரால்,- பாரிடம் ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு ஆவான் பூகாவால் அவை. | பார் உண்டான், Paar Undhaan - (பிரளய காலத்தில்) பூமியை விழுங்கினான்; (- (ஸ்ரீமந் நாராயணனே)) பார் இடந்தான், Paar Idandhaan - (மஹாவரடாநஹமாகிப்) பூமியை ஒட்டுவிடுவித்தெடுத்தான்; பார் அளந்தான், Paar Alandhaan - (திரிவிக்கிரமனாகிப்) பூமியை அளந்து கொண்டான்; முன், Mun - முதல்முதலாக பார் இடம் படைத்தான், Paar Idam Padaiththaan - இப்பூமியை யெல்லாம் உண்டாக்கினான் என்பர், Enbar - என்ற சாஸ்த்ர ஞானிகள் சொல்லுகிறார்கள்; பார் உமிழ்ந்தான், Paar Umizhndhaan - (பிறகு) அதைப் புறப்படவிட்டான்; பார் இடம் ஆவானும் தான், Paar Idam Aavaanum Thaan - அவனே ஸகல ப்ரபஞ்ச ஸ்வரீபியாகவுமிருக்கிறான்; ஆனால், Aanaal - ஆனபின்பு (நமக்கு) இடம் ஆர், Idam Aar - ஆச்ரயமாகக் கூடியவர்கள் வேறு யார்? (ஆருமில்லை) அவை, Avai - இவ்வுலகங்கள் மற்று ஒருவர்க்கு, Mattru Oruvarkku - ஸ்ரீமந்நாராயணனைத் தவிர மற்றொரு தெய்வத்துக்கு ஆவான் புகா, Aavaan Pugaa - சேஷப்பட்டிருக்க மாட்டா. |
| 2627 | பெரிய திருவந்தாதி || 43 | அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே, நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில் மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ, மனத்துயரை மாய்க்கும் வகை. | அவயம் என நினைத்து வந்த, Avayam Ena Ninaiththu Vanda - அபயம் வேண்டிவந்து சரணமடைந்த சுரர் பால், Surar Paal - தேவதைகளிடத்திலுள்ள நவையை, Navaiyai - குற்றங்குறைகளை நளிர்விப்பான் தன்னை, Nalirvippaan Thannai - போக்கடிக்கு மெம்பிரானை சுவை இல் மனத்து, Suvai Il Manathu - ஒரு படிப்பட்ட மனத்திலே உயர வைத்து இருந்து, Uyar Vaiththu Irundhu - பரிபூர்ணமாக வைத்துக் கொண்டிருந்து வாழ்த்தா தார்க்கு, Vazhththaa Thaarakku - மங்களாசாஸனம் பண்ணாதவர்களுக்கு மனம் துயரை மாய்க்கும் வகையுண்டோ?, Manam Thuyirai Maaykkum Vagaiyundoo - தங்கள் மனத்திலேயுள்ள துக்கங்களைப் போக்கிக் கொள்ள வழி ஏது? |
| 2628 | பெரிய திருவந்தாதி || 44 | வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும், மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே, மேலைத்தாம் செய்யும் வினை. | வகை சேர்ந்த நல்நெஞ்சும், Vagai Serndha Nalenjum - (ஞானத்திற்கு) மார்க்கமாக ஏற்பட்டிருக்கிற நல்ல நெஞ்சும் மிக வாய்ந்து வீழா எனினும், Miga Vaayndhu Veezhaa Eninum - (எம்பெருமானை) நன்றாகக்கிட்டி அநுபவிக்காவிட்டாலும், தாம், Thaam - சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள் மிக ஆய்ந்து, Miga Aayndhu - நன்றாக ஆராய்ச்சி பண்ணி நா உடைய வாயும், Naa Udaiya Vaayum - (எம்பெருமானைப் பேசுவதற்கு உறுப்பான) நாவோடு கூடிய வாக்கும் மாலை, Maalai - எம்பெருமானை வாழ்த்தாது இருப்பர், Vazhththaadhu Irupper - வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள் மேலை தாம் செய்யும் வினை இது அன்றே, Melaith Thaam Seyyum Vinai Ithu Andrae - மேலுள்ள காலமும் கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றோ இது. |
| 2629 | பெரிய திருவந்தாதி || 45 | வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி, தினையாம் சிறிதளவும் செல்ல – நினையாது வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும், நாயகத்தான் பொன்னடிகள் நான். | விளையார், Vilaiyaar - பாவங்கள் தர முயலும், Thara Muyalum - நமக்கு உண்டு பண்ண நினைக்கிற வெம்மையை அஞ்சி, Vemmmai Ajnchi - கொடிய துன்பங்களுக்கு அஞ்சி தினை ஆம் சிறிது அளவும், Dinai Aam Siridhu Alavum - தினையளவு சிறிய அற்ப காலமும் செல்ல நினையாது, Sella Ninaiaadhu - வீணாகக் கழிய விரும்பமாட்டாமையினாலே, நான், Naan - அடியேன் வானோர், Vaanor - நித்யஸூரிகள் தொழுது இறைஞ்சும் நாயாகத்தான், Thozhudhu Irainchum Naayagaththaan - தொழுது வணங்கும் பெருமை வாய்ந்த பெருமானுடைய பொன் அடிக்கள், Pon Adikkal - திருவடிகளை வாசகத்தால் ஏத்தினேவ், Vasakathal Aethinev - சொற்களாலே துதிக்கின்றேன். |
| 2630 | பெரிய திருவந்தாதி || 46 | நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும் தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு, நீகதியா நெஞ்சே! நினை. | தேங்கு ஓதம் நீர் உருவன், Thengu Odam Neer Uruvan - ஓடாமல் தேங்குகின்ற கடல் போன்ற திருநிறத்தையுடையவனும். செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவனுமான மால், Maal - ஸர்வேச்வரன் நீங்காத, Neengadha - ஒருநாளும் விட்டுப்பிரியக்கூடாத மா கதி ஆம், Maa Kathi Aam - சிறந்த உபேயமாயிரா நின்றான்; (அவ்வளவு மல்லாமல்,) வெம்நரகில், Vemnarakil - கொடியஸம்ஸாரத்திலே சேராமல், Seramal - பொருந்தாமல் காப்பதற்கு, Kaappatharku - நம்மை ரக்ஷிப்பதற்கு கதி ஆம், Kathi Aam - உபாயமாகவும் இராநின்றான்; நெஞ்சேரி நினை, Nenjeri Ninai - நெஞ்சே! (இதை) நீ அநுஸந்திக்கக்கடவை; நாள் நாளும், Naal Naalum - நாள்தோறும் (உடனுக்கு) நான் நான் கூறும் கூற்று ஆவது இத்தனையே, Naan Koorum Kootru Aavathu Ithanaiye - சொல்லும் சொல்லாவது இங்ஙனமே காண். |
| 2631 | பெரிய திருவந்தாதி || 47 | நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே, நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும் எவ்வளவு முண்டோ எமக்கு. | மாலே, Maale - ஸர்வேச்வரனே! (- (இப்பாவிகள் அற்ப பலன்களை விரும்பி தேவதாந்தரங்களின் பக்கல் ஓடுமவர்களே யொழிய அவற்றுக்காகவும் உன்னருகு வரமாட்டார்கள்; இப்படியான பின்பு.) (உபாயமும் உபேயமும் நீயேயென்கிற உறுதி எமக்கு நிலை பெற்றதன்றோ.)) மானிடவர், Maanidavar - “இவ்வுலகத்தவர்கள் நினைத்து இறைஞ்சி, Ninaithu Irainji - நம்மை ஒரு பொருளாக நினைத்து வணங்கி ஒன்று, Ondru - ஏதாவதொரு அற்ப பலனையாவது இரப்பர், Irappar - நம்மிடத்தில் வேண்டிக் கொள்வர்கள் என்றேயும், Endraiyum - என்று கூட நீ நினைத்திட வேண்டா, Nee Ninaithida Venda - நீ நினைக்க வேண்டா; நேரே நினைத்து இறைஞ்ச, Nere Ninaithu Irajinja - (இவர்கள்) உன்னையே உபாயமாகவும் உபேயமாகவும் நினைத்துத் தொழுவதற்கு எவ் அளவர், Ev Alavar - என்ன அறிவுள்ளவர்கள்? என் இடத்தோர், En Idathor - அப்படிப்பட்ட அறிவு உண்டாகக்கூடிய இடத்தில் தானுள்ளவர்களோ? (இருள் தருமாஞானத்திலுள்ளவர்களன்றோ.) எமக்கு, Emakku - உன்னுடைய நிர்ஹேதுந கடாஷத்திற்குப் பாத்திராமன அடியோங்களுக்கோவென்றால் அது தானும், Adhu Thanum - கீழ்சொன்ன மானிடவர்களுக்குமான துர்ப்புத்தி எவ்வளவும், Evvalavum - சிறிதேனும், உண்டோ, Undo - உண்டாகக் கூடியதோ? |
| 2632 | பெரிய திருவந்தாதி || 48 | எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை, அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப்பொலிந்த மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே, கொன்றானை யேமனத்துக் கொண்டு. | அமை பொலிந்த மென் தோளி காரணம் ஆ, Amai Polintha Men Tholi Kaaranam Aa - மூங்கில்போல் பருத்து விளங்குகின்ற மெல்லிய தோள்களையுடையவளான நப்பின்னைப் பிராட்டிக்காக வெம்கோடு ஏழ் ஏறு, Vemkodu Ezha Eru - கொடிய கொம்புகளையுடைய ஏழு நாளைகளை உடனே, Udaney - ஒரு நொடிப்பொழுதில் சொன்றானையே, Sonranaie - முடிந்த எம்பெருமானையே மனத்துகொண்டு, Manathukondu - சிந்தையில் தியானித்துக் கொண்டு யாம், Yaam - அடியோம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை, Vin Naatukku Uchasamudhu Aam Veettai - மேலுலகங்களுக்கெல்லாம் மேற்பட்டதான பரமபதத்தை எமக்கு அமைத்திருந்தோம், Emakku Amaithirundhom - எமக்கு (ப்ராப்யபூமியாகப்) பாரித்துக் கொண்டிருக்கின்றோம். அஃது அன்றே ஆம் ஆற, Aghthu Andrae Aam Aaru - அப்படி யிருப்பதுன்றோ (முழுக்ஷுத்வத்திற்கு) ஏற்றிருப்பது. |
| 2633 | பெரிய திருவந்தாதி || 49 | கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான் வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள் காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார் பேருருவென் றெம்மைப் பிரிந்து. | கொண்டால் தான், Kondal Thaan - மேகங்களையும் மால் வரை தான், Maal Varai Thaan - பெரிய மலைகளையும் மா கடல்தான், Maa Kadalthaan - கருங்கடலையும் மற்று கார் உருவம்தான், Mattru Kaar Uruvamthaan - மற்றுமுள்ள (குவளை, குயில், மயில் முதலிய) கறுத்து உருவங்களையும் கண்ட நாள், Kanda Naal - பார்க்குங் காலத்தில் காண்தோறும், Kaandhorum - பார்க்கும்போதெல்லாம் கூர் இருள் தான், Koora Irul Thaan - செறிந்த இருளையும் வண்டு அறா பூவைதான், Vandu Araa Poovaithaan - (தேனில் நசையாலே) வண்டுகள் விட்டு நீங்காத பூவைப் பூவையும் நெஞ்சு, Nenju - என் மனமானது கண்ணனார் பேர் உரு என்று, Kannanaar Peer Uru Enru - இவை கண்ணபிரானுடைய அழகிய திருமேனி என்றெண்ணி எம்மை பிரிந்து, Emmai Pirinthu - என்னைவிட்டு நீங்கி ஓடும், Oodum - அங்கே ஓடும். |
| 2634 | பெரிய திருவந்தாதி || 50 | பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே, திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால் ஆவா! எனவிரங்கார் அந்தோ! வலிதேகொல், மாவை பிளந்தார் மனம். | பிரிந்து, Pirinthu - தம்மைவிட்டுப் பிரிந்து ஒன்று நோக்காது, Onru Nookkaadhu - வேறொன்றிலும் கண் வையாமல் தம்முடைய பின்னே, Thammudaiya Pinne - தம்மோடு கூடவே திரிந்து உழலும், Thirinthu Uzhalum - அலைந்துகொண்டு திரிகிற சிந்தனையார் தம்மை, Sindhanaiyaar Thammai - என் நெஞ்சினாரை ஒரு கால், Oru Kaal - ஒரு நாலாகிலும் புரிந்து, Purinthu - அன்புகூர்ந்து ஆ ஆ என இரங்கார், Aa Aa En Raingaar - ஐயோவென்று அருள்புரிகின்றலர் (பகவான்); அந்தோ, Andho - கஷ்டம்!; மா வாய் பிளந்தார் மனம், Maa Vaai Pilandhaar Manam - கேசியென்னும் குதிரையின் வாயைக் கிண்டொழித்த அப்பெருமானுடைய நெஞ்சு வலிதே கொல், Valithe Kol - கடினமோ; |
| 2635 | பெரிய திருவந்தாதி || 51 | மனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை, சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே, வண்டுழாம் சீராக்கு மாண்பு. | மனம் ஆளும், Manam Aalum - மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி ஆளுமவையான ஓர் ஐயர், Oor Aiyar - ஒப்பற்ற பஞ்சேந்திரியங்கனென்கிற வன் குறும்பர் தம்மை, Van Kurumpar Thammai - பிரபலர்களான துஷ்டர்களை சினம் மாள்வித்து, Sinam Maalviththu - கோவமடங்கச் செய்து ஓர் இடத்தே சேர்த்து, Oru Idaththae Serththu - (பகவத் விஷயமாகிற) ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி, புனம்மேல் தண் துழாயான் அடியை, Punammeel Than Thuzhaayaan Adiyai - தன்னிலத்திலே பொருந்திய குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானது திருவடிகளை தாம் காணும் அஃது அன்றே, Thaam Kaanum Aghthu Anr Ae - ஸேவித்துக் கொண்டிருப்பதன்றோ வண் துழாம் சீரார்க்கு மாண்பு, Van Thuzhaam Seeraarkku Maanbu - அழகிய விசாலமான நற்குணங்களை யுடையவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு. |
| 2636 | பெரிய திருவந்தாதி || 52 | மாண்பாவித் தஞ்ஞான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ் சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங் கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா துண்ணவாய் தானுறுமோ ஒன்று. | அஞ்ஞான்று, Ajnyaantru - முன்னொரு காலத்தில் மாண், Maan - வாமாவேஷத்தை பாவித்து, Paaviththu - பாவனை செய்துகொண்டு மண் இரந்தான், Man Irandhaan - (மாவலியிடத்துச் சென்று) பூமியை யாசித்தவனும் மாயவன், Maayavan - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய நஞ்சு, Nanju - (முலையிலே தடவியிருந்த) விஷத்தை ஊண் பாவித்து உண்டானது, Oon Paaviththu Undaanathu - உண்பதாகப் பாவனை செய்து அமுது செய்தவனுமான பெருமானுடைய ஓர் உருவம், Oru Uruvam - விலக்ஷணமான திருமேனியை காண்பான், Kaanbaan - ஸேவிக்கும் விஷயத்திலே நம் கண் அவா, Nam Kan Avaa - நமது ஆண்களுக்கு ஆசை; மற்று ஒன்று காண உறா, Mattru Ondru Kaan Uraa - வேறொன்றையும் காண விரும்புகின்றனவில்லை! வாய்தான், Vaithaan - வாக்கானது சீர் பரவாது, Seer Paravaadhu - (அவனது) திருக்குணங்களைப் புகழ்வது தவிர்த்து ஒன்று, Ondru - வேறொன்றை (சோற்றை) உண்ண, Unna - உண்பதற்கு உறுமோ, Urumo - விரும்புமோ? |
| 2637 | பெரிய திருவந்தாதி || 53 | ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது, உன்னடியார்க் கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில் வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு வைகுந்த மென்றருளும் வான். | செம்கண் மால், Semkan Mal - (அடியார்கள் மீது வாத்ஸ்ல்யத்தாலே) சிவந்த திருக்கண்களையுடைய திருமாலே; (- (எத்தனை நன்மை செய்தும் த்ருப்தி பெறாமல்)) யான் உரைப்பது, Yaan Uraippathu - அடியேன் விண்ணப்பஞ் செய்வது ஒன்று உண்டு, Onru Undu - ஒரு விஷயமுண்டு; அவர்க்கு, Avarkku - இப்படி பார்க்கின்ற நீ அடியவர்களுக்கு வைகுந்தம் என்று அருளுமி வான், Vaikundham Endru Arulum Vaan - ஸ்ரீவைகுண்டமென்று சிறப்பித்துச் சொல்லி உதவுகின்ற பரம பதமானது. நீ, Nee - நீயோ வென்றால் உன் அடியார்க்கு, Un Adiyarkku - உனது அடியார்களுக்கு என் செயவன் என்றே இருத்தி, En Seyavan Endrae Iruththi - இன்னமும் என்ன நன்மை செய்வோமென்றே பாரித்திரா நின்றாய்; நின் புகழில் வைகுந்தம் சிந்தையிலும் இனிதோ, Nin Pugazhila Vaikundham Sindhaiyilum Inidho - உனது திருக்குணங்களிலேயே ஊன்றியிருக்கப்பெற்ற தமது சிந்தையிற் காட்டிலும் சிறந்ததோ? |
| 2638 | பெரிய திருவந்தாதி || 54 | வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ? கானோ? ஒருங் கிற்றும் கண்டிலமால்,- ஆனீன்ற கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம், வன்துயரை யாவா! மருங்கு. | ஆன் ஈன்ற கண்டு, Aan Eendra Kandu - பசுவினால் பெறப்பட்ட வத்ஸாஸுரனை (- (இன்னவிடத்தில் மறைந்து போயினவென்று தெரியவில்லை;)) உயர எறிந்து, Uyara Erindhu - (விளாமரத்தின்) மேலே வீசியெறிந்து காய் உதிர்த்தார், Kaai Uthirthaar - (அவ்விளாமரத்தின்) காய்களை உதிர்த்த கண்ணபிரானுடைய தாள், Thaal - திருவடிகளை பணிந்தோம், Panindhom - ஆச்ரயித்தோம் (அதன் பிறகு) வன் துயரை, Van Thuyarai - வலிய (நமது) பாவங்களை மருங்கு கண்டிலம், Marungu Kandilam - ஸமீபத்தில் காணோம்; ஒருங்கிற்று, Orungitru - (அப்பாவங்கள்) மறைந்து போனவிடம் வானோ, Vaano - ஆகாசமோ? மறி கடலோ, Mari Kadaloo - மடிந்து மடிந்து அலையெறிகி கடலோ? மாருரமோ, Maruramo - காற்றோ? தீயகமோ, Thiyakamo - நெருப்போ? கானோ, Kaano - காடோ? ஆ ஆ ஆல், Aa Aa Aal - ஐயோ பாவம். |
| 2639 | பெரிய திருவந்தாதி || 55 | மருங்கோத மோதும் மணிநா கணையார், மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால், மனக்கவலை தீர்ப்பார் வரவு. | வரவு, Varavu - (தம்முடைய) வருகையினாலே மனம் கவலை தீர்ப்பார், Manam Kavalai Theerppaar - (நமது) மணத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும் மழுங்கு ஓதம் மோதும், Mazhunghu Oodham Moathum - ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே) மணி நாக அணையார், Mani Naaga Anaiyaar - மாணிக்கத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவருமான பெருமான். மருங்கே வர அரியர் எலும், Marungae Vara Ariyar Elum - (ஒருவர்க்கும் ஸ்வப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும் எமக்கு, Emakku - நமக்கு அவரை, Avarai - அப்பெருமானை உன்னால், Unnaal - மனத்தினால் ஒருங்கே, Orungae - ஒரே தன்மையாக எப்பொழுதும் காணலாம், Eppozhudhum Kaanalaam - எப்போதும் கண்டு அநுபவிக்கட்டும். |
| 2640 | பெரிய திருவந்தாதி || 56 | வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே! ஒருவாறொருவன் புகவாறு,-உருமாறும் ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம், மாயவர்தாம் காட்டும் வழி. | ஒருவன், Oruvan - எந்த சேதானும் (- (அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக)) ஒரு ஆறு, Oru Aaru - எந்த உபாயாந்தரத்திலும் புகா ஆறு, Pugaa Aaru - பிரவேசிக்க வேண்டாதபடி உரு மாறும், Uru Maarum - தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற ஆயவர் தாம், Aayavar Thaam - ஸ்ரீகிருஷ்ணனானவனும் சேயவர் தாம், Seyavar Thaam - ஆஸுரப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும் அன்று உலகம் தாயவர் தாம், Andru Ulagam Thaayavar Thaam - முன்பொருநாள் உலகங்களைத் தாலியளந்தவனும் மாயவர் தாம், Maayavar Thaam - ஆச்சரியருமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான் காட்டும் வழி, Kaattum Vazhi - காட்டுகிற உபாயம் வரவு ஆறு ஒன்று, Varavu Aaru Ondru - இன்னவழியாக வந்ததென்று தெரியாது; வாழ்வு இனிது, Vazhvum Inidhu - பலன் போக்யமாயிரா நின்றது; ஆல் எல்லே, Aal Ellae - ஆச்சரியம் |
| 2641 | பெரிய திருவந்தாதி || 57 | வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே, தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும் தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள, வாழ்வடங்க மார்விடந்த மால். | நெஞ்சே, Nenje - நெஞ்சமே! போர், Poar - யுத்த பூமியிலே அவுணன் தன்னை, Avunan Thannai - இரணியாசுரனை தழீஇக் கொண்டு, Thazhiik Kondu - அழுந்தக் கட்டிக்கொண்டு, புலால் வெள்ளம், Pulaal Vellam - ரத்த ப்ரவாஹமானது தாழ்வு இடங்கள் பற்றி, Thazhvu Idangal Patri - பள்ள நிலங்கள் பக்கமாக எங்கும் சுழித்து உகன, Engum Suzithu Ukan - கண்டவிடமெங்கும் சுழித்துக் கொண்டு அலையெறிந்து கிளரும்படியாக வாழ்வு அடங்கா, Vazhvum Adangaa - (அவ்விணியனுடைய) வாழ்ச்சி முடியும்படி மார்வு இடந்தமால், Maarvu Idanthamaal - அவனது மார்பைப் பிளந்த பெருமான், வழி தங்கு வல்வினையை, Vazhi Thangu Valvinaiyai - இடைவழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற (பிரதிபந்தகமான) வலிய பாவங்களை மாற்றோனோ, Maatrono - (போக்கியருள மாட்டானோ? (போக்கியேவிடுவன்.) |
| 2642 | பெரிய திருவந்தாதி || 58 | மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால் பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று, மறப்பின்மை யான்வேண்டும் மாடு. | மாலே, Maale - திருமாலே! (- (உன் திருவடிகளில் கைங்கரியம் பண்ணவேணுமென்று அடியேன் ஆசைப்படவில்லை.)) உனது, Unathu - உன்னுடைய பால்போல் சீரில் பழுந்தொழிந்தேன், Paalpol Seeril Pazhunthozhindhen - பால்போலப் பரம போக்யாமன திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்; இனி, Ini - இனிமேல் பிறப்பு இன்மை பெற்று, Pirappu Inmai Petru - வீடுபெற்று அடி கீழ், Adi Keezh - (உனது) திருவடிவாரத்திலே குற்றவேல், Kuttraveel - கைங்கரியம் பண்ணுவது யான் வேண்டும் மாடு அன்று, Yaan Vendum Maadu Andru - அடியேன் அபேஷிக்கிற செல்வமன்று; படிசோதி, Padisothi - (உன்னுடைய) திவ்யமங்கள விக்ரஹ தேஜஸ்வை மாற்றேல், Maatreel - எனக்கு ஒரு காலும் மாற்றாமல் நிற்யாநுபவ விஷயமாக்க வேணும் ; மேலால், Melal - மேலுள்ள காலத்திலே மறப்பு இன்மை, Marappu Inmai - உன்னை மறவாதிருந்தால் போதுமென்பதே யான்வேண்டும் மாடு, Yaanvendum Maadu - அடியேன் ஆசைப்படும் செல்வம். |
| 2643 | பெரிய திருவந்தாதி || 59 | மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார் காடானும் ஆதானும் கைகொள்ளார்,- ஊடேபோய்ப் போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன் பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து. | பேர் ஓதம், Peer Otham - விசாலமான கடலிலே சிந்து திரை ஊடேபோய், Sindhu Thirai Oodepoy - சிதறிவிழுகின்ற அலைகளினுள்ளே சென்று கண்வளரும், Kanvalarum - திருக்கண் வளர்ந்தருளா நின்ற பேராளன், Peraalan - எம்பெருமானுடைய பேர், Peer - திருநாமங்களை ஓத, Otha - அநுஸந்திக்க வேணுமென்று சிந்திக்க, Sindhikka - நினைத்த மாத்திரத்திலே, வல்வினையார், Valvinaiyaar - கொடிய பாவங்கள் பேர்ந்து, Perndhu - நம்மைவிட்டுக் கிளம்பி காடானும் ஆதானும் கைக்கொள்ளார், Kaadaanum Aadaanum Kaikkollaar - காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது) மாடு வரப்பெறுவராம் என்றே?, Maadu Varapperuvaaram Endrae - இன்னமும் நம்மிடத்திலே வாழப்பெறலாமென்கிற எண்ணத்தினாலோ? |
| 2644 | பெரிய திருவந்தாதி || 60 | பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய் ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே,- பேர்ந்தெங்கும் தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு இல்லைகாண் மற்றோர் இறை. | என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே! பேர்ந்து ஒன்று நோக்காது, Perndhu Ondru Nookkathu - வேறொன்றையும் கணிசியாமல் ஈன் துழாய் மாயனையே பின்நிற்பாய், Een Thuzhai Maayanaiye Pinnirpai - போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானையே பற்றி நின்றும் நில்லு; நில்லாப்பாய், Nillaappai - அப்படி அவனைப் பற்றாதொழியினும் ஒழி; தொல்லை, Tollai - அநாதியாய் மா, Maa - பெரிதாய் வெம், Vem - கடினமான நரகில், Naragil - நரகத்திலே சேராமல், Seramal - போய்ப்புகாமல் காப்பதற்கு, Kaappatharku - நம்மை ரக்ஷிப்பதற்கு பேர்ந்து மற்று ஓர் இறை, Perndhu Matru Oru Irai - வேறொரு ஸ்வாமி எங்கும் இல்லை காண், Engum Illai Kaan - ஓரிடத்திலுமில்லைகிடாய். |
| 2645 | பெரிய திருவந்தாதி || 61 | இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள், மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின் தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின் மீதிலகித் தாங்கிடக்கும் மீன். | தாழ் விசும்பின் மீது, Thaal Visumbin Meedhu - வெளியான ஆகாசத்திலே இலசி கிடக்கும் மீன், Ilasi Kidakkum Meen - விளங்காநின்ற நக்ஷத்திரங்களானவை இறை முறையான், Irai Muraiyaan - ஸ்வாமியான முறைமையையுடைய எம்பெருமான் மண் அளந்த அந்நாள், Man Alandha Annal - உலகளந்த அக்காலத்திலே வான் நாடர், Vaan Naadar - வானுலகத்திலுள்ளாரெல்லாரும் கூடி, Koodi - கும்பல்கூடி சே அடி மேல், Sae Adi Mel - (அப்பெருமானது) செவ்விய திருவடிகளின் மேல் மறை முறையால், Marai Muraiyaal - வேதங்களிற் சொல்லிய விதிப்படி தாது இலகு பூ, Thaadu Ilaku Poo - தாதுநயாலே விளங்காநின்றுள்ள புஷ்பங்களை முறை முறையின், Murai Muraiyin - முறை முறையாக தெளித்தால் ஒவ்வாதே, Thelithaal Ovaadhe - தெளிந்தாற்போன்றுள்ளனவன்றோ? |
| 2646 | பெரிய திருவந்தாதி || 62 | மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய் வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர் மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான்,நங்கள் பிணிக்காம் பெருமருந்து பின். | மீள் என்னும் நம்பின், Meel Ennum Nambin - நக்ஷத்திங்களாகிற நம்புகளையுடையதும் வெறி என்னும் வெள்ளி லேய், Veri Ennum Velli Ley - சந்தினாகிற வெள்ளிக்குழையையுடையதும் வான் என்னம், Vaan Ennam - ஆகாசமென்கிற பெயருடையதும் கேடு இலா, Kedu Ila - ஒருநாளும் அழிவில்லாததுமான வான் குடைக்கு, Vaan Kudhaikku - பெரிய குடைக்கு ஓர் மணி காம்பு போல் நிமிர்ந்து, Or Mani Kaambu Pol Nimirthu - ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போல வளர்ந்து மண் அளந்தான் தான், Man Alandhaan Thaan - உலகளந்தவனான பெருமாள் பின், Pin - மேலுள்ள காலமெல்லாம் நங்கன் பிணிக்கு, Nangan Pinikku - நம்முடைய (ஸம்ஸாரமாகிற) வியாதிக்கு பெரு மருந்து ஆம், Peru Marundhu Aam - சிறந்த ஔஷதமாவன் |
| 2647 | பெரிய திருவந்தாதி || 63 | பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய், வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும், பருச்செவியு மீர்ந்த பரன். | பின் துரத்தும் காற்று இழந்த சூல்கொண்டல், Pin Thuraththum Kaatru Izhanda Soolkondal - பின்பற்றித்தள்ளுகிற காற்றையிழந்து கடலிலே போய்ச் சேர்ந்த காளமேகமானது (- (எப்படி யிருக்கின்றதென்றால்)) திரு செய்ய நேமியான், Thiru Seyya Nemiyan - அழகிய சிவந்த சக்கரத்தையுடையவனும், தீ அரக்கி, Thee Arakki - கொடிய ராக்ஷஹியான சூர்ப்பணகையினது மூக்கும், Mookkum - மூக்கையும் பரு செலியும், Paru Seliyum - பருத்தகாதுகளையும் அன்று, Anru - ஸ்ரீராமாவதாரத்தில் ஈர்த்த, Eerththa - அறுத்தொழித்தவனுமான பரன், Paran - ஸ்ரீராமபிரான் பேர்ந்தும் போய், Pernthum Poi - (அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து, Van Thiraik Kan Vandhu Anaindha Vaimaiththu - பெரிய திருப்பாற்கடலிலே வந்து சேர்ந்தபடியை ஒத்திருக்கின்றது. |
| 2648 | பெரிய திருவந்தாதி || 64 | பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில், உரனா லொருமூன்று போதும்,-மரமேழன் றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர் கைதான் தொழாவே கலந்து. | அன்று, Anru - முற்காலத்தில் (- (அப்படிப்பட்ட விவேகிகளை)) மரம் ஏழ் எய்தானை, Maram Ezhu Eydhaanai - (ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தஸால வ்ருக்ஷங்களைத் துளைத்த இராமபிரானென்ன, புள்ளின் வாய் சீண்டானை, Pullin Vaai Seendhaanai - பகாஸுரனது வாயைக் கிழித்தெறிந்த கண்ணபிரானென்ன இவர்களை நோக்கி அவன் பரன் ஆம் ஆதல், Avan Paran Aam Aadhala - ‘அந்த இராமபிரானும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மனுஷ்யரல்லர்;) ஸாக்ஷாத் பரமபுருஷரேயாவர்’ என்கிற விஷயத்தை உõனால், Unnaal - தங்களுடைய மனத்தினாலே பாவிப்பர் ஆகில், Paavippar Aagil - அநுஸந்திப்பர்களேயானால் அமரர் கை, Amarar Kai - தேவர்களின் கைகளானவை கலந்து, Kalandhu - ஒன்றுசேர்ந்து ஒரு மூன்று போதும், Oru Moondru Podhum - எப்போதும் தொழாவே, Thozhaave - ஸேவிக்க மாட்டாவோ. |
| 2649 | பெரிய திருவந்தாதி || 65 | கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல் தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை, சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு. | நெஞ்சே, Nenje - வாராய்மனமே! கலந்து, Kalandhu - நம்மோடு கூடவேயிருந்து நஸியும், Nasiyum - ஹிம்ஸிக்கின்ற கடு துயரை, Kadu Thuyarai - கடுமையான துக்கங்களை மலங்க அடித்து மடிப்பான், Malanga Adithu Madippaan - முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில், விலக்கல்போல், Vilakkalpol - மலைபோன்றவனும் தொல் மாலை, Thol Maalai - அநாதிசாலமாக நம்மேல் வ்யாமோஹமுடையவனும் கேசவனை, Keesavanai - சிறந்த திருக்குழல் கற்றையை யுடையவனும் நாரணனை, Naaranai - ஸ்ரீமர்நாராயணனும் மாதவனை, Maadhavanai - திருமகள் கேழ்வனுமான பெருமான் விஷயத்திலே சொல் மாலை, Sol Maalai - பாசுரங்களாகிற மாலைகளை எப்பொழுதும், Eppozhudhum - ஸர்வகாலமும் குட்டு, Kuttu - ஸமர்ப்பி. |
| 2650 | பெரிய திருவந்தாதி || 66 | சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை, மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே! அறிகண்டாய் சொன்னேன் அது. | நெஞ்சை, Nenjai - ஓ மனமே! சூடு ஆய நேமியான், Soodu Aaya Nemiyan - (ஆயுதமாயிருக்கும் மாத்திரமல்லாமல்) அலங்காரமாயுமிருக்கிற திருவாழியையுடையவனும் மாட்டே, Maattai - அவன் பக்கத்திலிருந்து கொண்டே துயர் இழைத்த, Thuyar Izhaittha - துன்பப்படுத்தின மாயவனை, Maayavanai - ஆச்சர்யனும் ஈட்ட, Eetta - திரண்ட வெறிகொண்ட, Verikonda - பரிமளம் மிக்க தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த தொல் அரக்கன் இன்உயிரை, Thol Arakkan Inuyirai - வெகு காலமாகத் தீமை செய்து கொண்டிருந்த இராவணனுடைய இனிய உயிரை. வேதியனை, Vedhiyai - வைதிகனுமான எம்பெருமானை அறிகண்டாய், Arikandai - அநுஸந்தித்திரு; அது சொன்னேன், Adhu Sonnaen - ஒருவர்க்கும் சொல்லவொண்ணாத அப்படிப்பட்ட இவ்விஷயத்தை உனக்குச் சொன்னேன். |
| 2651 | பெரிய திருவந்தாதி || 67 | அநுவோநன் றென்றங் கமருலகோ வேண்டில்* அதுவோர் பொருளில்லை யன்றே? *- அதுவொழிந்து மண்ணின்றாள் வேனெனிலுங் கூடும் மடநெஞ்சே! * கண்ணன்தாள் வாழ்த்துவதே கல். | மடநெஞ்சே, Madanenjee - அறிவுகெட்ட மனமே! அதுவோ நன்று என்று, Adhuvo Nandru Endru - (இப்பூபதியிலிருப்பைவிட) அந்தப் பரமபதாநுபவம் சிறந்ததென்று கொண்டு அங்கு அவர் உலகு வேண்டில், Angu Avar Ulaku Vendl - அந்தப் பரம பதாநுபவத்தை விரும்புகிற பக்ஷத்தில் மண் நின்று ஆள்வேன் எனினும், Man Nindru Aalvaen Eninum - இந்த மண்ணுலகத்தில் நிலை நின்று ஐச்வரியத்தை ஆள வேணுமென்று விரும்பினாயாகிலும் கூடும், Koodum - அதையும் அவன் எளிதில் அருளக்கூடும்; அது ஓர் பொருள் இல்லை அன்றே, Adhu Oor Porul Illai Andrae - அதனைக் கொடுப்பது (எம்பெருமானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே; அது ஒழிந்து, Adhu Ozhindhu - அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு கண்ணன், Kannan - ஆசவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய தாள், Thaal - திருவடிகளை வாழ்த்துவதே, Vaazhthuvathe - மங்களாசாஸநம் பண்ணுவதையே கல், Kal - அப்பஸிக்கக்கடவாய். |
| 2652 | பெரிய திருவந்தாதி || 68 | கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல்லென் றழிந் தனகொல் ஏபாவம்,-வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேன துள்ளத் தகம். | வெல்ல நெடியான், Vella Nediyan - மிகவுயர்ந்தவனும் நிறம் கரியான், Niram Kariyan - நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான் உன் புகுந்து, Un Pugundhu - உள்ளே பிரவேசித்து அடியேனது உள்ளத் தகம் நீங்கான், Adiyenathu Ullath Thagam Neengan - அடியேனது உள்ளத்தைவிட்டு நீங்குகின்றனில்லை; (ஆகையாலே) கல்லும், Kallum - திருவேங்கடமலையும் கனை கடலும், Kanai Kadalum - கோஷிக்கின்ற திருப்பாற்கடலும் வைகுந்தம், Vaikundham - வைகுண்டமென்கிற வான் நாடும், Vaan Naadum - வானுலகமும் புல்லென்று ஒழிந்தன கொல், Pullenru Ozhindhana Kol - அல்பமாய் விட்டன போலும்; எபாவம், Epavam - ஐயோ பாவம்! |
| 2653 | பெரிய திருவந்தாதி || 69 | அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார், முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால் சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை, ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து? | வல்வினையர் ஆவார், Valvinaiyar Aavaar - கடுமையான பாவங்களானவை (- (தங்களுடைய குடியிருப்பை யிழந்தமையாலே)) அகம் சிவந்த கண்ணினர் ஆய், Aham Sivantha Kanninar Aay - (கோவத்தினால் உள்ளே சிவந்த கண்களையுடையனவாய் முக்கி, Mugki - வருந்தி முகம் சிதைவராம் அன்றே, Mugam Sithaivaraam Andrae - முகம் வாடியிருக்கின்றனவல்லவோ? மிகும், Mikum - எல்லாரிலும் மேற்பட்டவனான திருமால், Thirumaal - திருமாலினுடைய சீர் கடலை, Seer Kadalai - கல்யாண குணங்களாகிற கடலை உள் பொதிந்த, Ull Pothintha - உள்ளே அடக்கிக் கொண்ட சிந்தனையேன் தன்னை, Sindhanaiyen Thannai - சிந்தனையை யுடையேனான என்னை செவ்வே, Sevvae - செவ்வையாக அடர்ந்து, Adarnthu - நெருக்கி ஆர்க்கு அடல் ஆம், Aarkku Adal Aam - யாரால் உபத்ரவிக்க முடியும்? (ஒருவராலும் என்னைத் திரஸ்கரிக்க முடியாது.) |
| 2654 | பெரிய திருவந்தாதி || 70 | அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை, சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும் மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே யாதாகில் யாதே இனி? | அடர்பொன் முடியானை, Adarpon Mudiyaanai - அடர்ந்த பொன்மயமான திருவபிஷேகத்தையுடையவனும் ஆயிரம் பேரானை, Aayiram Peraanai - ஸஹஸ்ரநாமங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும் சுடர்கொள் சுடர் ஆர்யானை, Sudarkol Sudar Aaryanai - (சந்திர ஸூர்யன் முதலியன) சுடர்களையெல்லாம் வென்று விளங்குகின்ற திருவாழியையுடையவனுமான எம்பெருமானை. இடர் கடியும் மாதா பிது ஆக, Idar Kadiyum Maatha Pithu Aaga - துக்கங்களைப் போக்கவல்லதாயும் தந்தையுமாக எனது உள்ளே வைத்தேன், Enathu Ullae Vaiththen - என்னுடைய ஹ்ருதயத்திலே இருத்தினேன்; இனி, Ini - இனிமேல் யாது ஆகில் யாதே, Yaadhu Aagil Yaadhe - (எனக்கு) என்ன நேர்ந்தாலென்ன? |
| 2655 | பெரிய திருவந்தாதி || 71 | இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே, தனிநின்ற சார்விலா மூர்த்தி,- பனிநீர் அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு முகத்தான்நின் உந்தி முதல். | தனி நின்ற, Thani Nindra - தானொருவனுமே காரணமாய் நின்றவனும் (- (என்னால் சொல்லப்போகாதென்கை)) சார்வு இலா, Saarvu Ilaa - வேறொருவரைத் தனக்கு ஆதாரமாக உடைத்தாகாதவனுமான மூர்த்தி, Moorthy - எம்பெருமானே! அகத்து பனி நீர் உலவு செம்சடையான், Agathu Pani Neer Uhlavu Semchadayan - உள்ளே குளிர்ந்த சங்கை நீர் தங்குகின்ற சிவந்த ஜடையையுடையனான சிவன். ஆகத்தான், Aagaththaan - உன் திருமேனியை அச்ரயித்து வாழ்பவன்; நான்கு முகத்தான், Naanthu Mugaththaan - நான்முகக் கடவுள் நின் உந்தி முதல், Nin Undhi Mudhal - உனது திருநாபிக் கமலத்தை மூலகாரணமாகவுடையவன்; இனி, Ini - இப்படியான பின்பு நின் பெருமை, Nin Perumai - உனது மேன்மையை யான் நின்று உரைப்பது என்னே, Yaan Nindru Uraippathu Ennae - தான் முயன்று சொல்வது எங்ஙனே? |
| 2656 | பெரிய திருவந்தாதி || 72 | முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் மென்பர் – முதல்வா, நிகரிலகு காருருவா! நின்னகத்த தன்றே, புகரிலகு தாமரையின் பூ. | முதல்வா, Muthalvaa - ஸகலகாரண பூதனான பெருமானே! மூன்று திரு உருவம் முதல் ஆம் என்பர், Moondru Thiru Uruvam Mudhal Aam Enbar - பிரமன் விஷ்ணு சிவன் என்கிற மூன்று திவ்ய மூர்த்திகள் தலைவராவர்’ என்று சிலர் சொல்லுவார்கள்; மூன்றுக்கும் ஒன்றே முதல் ஆகும் என்பர், Moondrukkum Ondrae Mudhal Aagum Enbar - ‘மேற்சொன்ன மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கும்’ என்று மற்றுஞ் சிலர் சொல்லுவார்கள். நிகர் இலகு கார் உருவா, Nikar Ilaku Kaar Uruvaa - மேகமொன்று சொல்லலாம்படி அதனோடொத்து விளங்காநின்ற திருமேனியை யுடையவனே! புகர் இலகு தாமரையின் பூ, Pugar Ilaku Thaamaraik Koo - தேஜஸ்ஸுமிக்கு விளங்குகின்ற தாமரைப் பூவானது நின் அகத்தது அன்றே, Nin Agaththathu Andrae - உன்னிடத்திலுள்ளதன்றோ? (திருநாபிக்கமலமே உனது பரத்வத்தை வெளியிடவல்லது என்றவாறு.) |
| 2657 | பெரிய திருவந்தாதி || 73 | பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை எல்லாம் பிரானுருவே என்று. | பூவையும், Poovaiyum - பூவைப்பூவையும் காயாவும், Kaayavum - காயாம் பூவையும் நீலமும், Neelamum - கரு நெய்தல் பூவையும் பூக்கின்ற, Pookkinra - புஷ்பிக்கின்ற பிரான், Piraan - எம்பெருமானுடைய உருவே என்று, Uruve Endru - திருவுருவமே என்ற கொண்டு பாவியேன், Paaviyen - அடியேனுடைய காவி மலர், Kaavi Malar - செங்கழுநீர்ப் பூவையும் என்றும் காண் தோறும், Endrum Kaan Thorum - பார்க்கிற போதெல்லாம் அவ் அவை எல்லாம், Avv Avai Ellam - அந்தந்த மலர்களெல்லாம் மெல் ஆவி, Mel Aavi - மிருதுவான உயிரும் மெய், Mei - சரீரமும் மிகவே பூரிக்கும், Mikave Poorkkum - மிகவும் பருத்து வளர்கின்றது |
| 2658 | பெரிய திருவந்தாதி || 74 | என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால், ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே! புடைதான் பெரிதே புவி. | ஒரு நாள் ஒழியாமை, Oru Naal Ozhiyamai - ஒருநாளும் தப்பாமல் என்றும், Endrum - எந்நாளும் யான் இரந்தால், Yaan Irandhaal - அடியேன் பிரார்த்தித்தால், குன்று குடை ஆக ஆ காத்த கோவலனார், Kundru Kudai Aaga Aa Kaatha Kovalanaar - (முன்பு) கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திப் பசுக்களை ரக்ஷித்த கோபாலகிருஷ்ண பகவான் ஒன்றும் இரங்கார், Ondrum Irangaar - சிறிதும் தயவு செய்கிறாரில்லை; உரு காட்டார், Uru Kaattaar - தன் திருமேனியைக் காட்டுகிறாரில்லை; நெஞ்சே, Nenje - ஓ மனமே! புவி, Bhuvi - நாமிருக்கும் இடம் பெரிதே புடை தான், Peridhe Pudai Thaan - (அவருடைய அருள் வெள்ளம் ஏறிப்பாய முடியாத) மிகப் பெரிய மேட்டு நிலமோ? |
| 2659 | பெரிய திருவந்தாதி || 75 | புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென் செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,- அவிவின்றி யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார், ஊன்பருகு நேமியாய்! உள்ளு. | ஊன் பருகு நேமியாய், Oon Parugu Nemiyai - (அஸுர சரீரத்திலுள்ள) மாம்ஸங்களைக் கவர்கின்ற திருவாழி யாழ்வானைக் கையிலேந்தியுள்ள பெருமானே!, புவியும், Puviyum - இவ்வுலகமும் இரு விசும்பும், Iru Visumbum - விசாலமான மேலுலகமும் என் உள்ளாய், En Ullai - என் பக்கல் இரா நின்றாய்: யான் பெரியன், Yaan Periyan - நானே பெரியவன்; நின் அகத்த, Nin Akath - உன்னிடத்தேயுள்ளன; நீ, Nee - உபய விபூதியையும் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற நீ என் செவியின் வழி புகுந்து, En Seviyin Vazhi Pugundhu - என் காது வழியே புகுந்து அவிவு இன்றி, Avivu Inri - ஒருநாளும் விட்டு நீங்காமல் நீ வெரியை என்பதனை யார் அறிவார், Nee Veriyai Enbadhai Yaar Arivaar - நீ பெரியனென்று அறிவாருண்டோ? உள்ளு, Ullu - இதை நீயே ஆலோசித்துப் பார். |
| 2660 | பெரிய திருவந்தாதி || 76 | உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம், விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள உலகளவு யானும் உளனாவன் என்கொல்? உலகளந்த மூர்த்தி! உரை. | உலகு அளந்த மூர்த்தி, Ulaku Alandha Moorthi - த்ரிவிக்ரம பகவானே, உன்னை உள்ளிலும், Unnai Ullilum - உன்னை(நெஞ்சில்) அநுஸந்தித்த மாத்திரத்திலும் உள்ளம், Ullam - எனது நெஞ்சானது துடிக்கும், Thudikkum - (ஸந்தோஷத்தினால்) பூரிக்கின்றது வினை படலம் விள்ள, Vinai Padalam Vill - பாவங்களின் கூட்டங்கள் என்னை விட்டு ஒழிந்து போம்படி விழித்து, Vizhithu - உன்னாலே நான் கடாக்ஷிக்கப் பெற்று உன்னை மெய்வற்றால், Unnai Meivatraal - (பரமபதத்திலே வந்து) உன்னை உள்ளபடியே அடைந்து விட்டேனாகில் உள்ள உலகு அளவும், Ulla Ulaku Alavum - நீ வியாபித்திருக்கிற உலகமெங்கும் யானும் உளன் ஆவன், Yaanum Ulan Aavan - நானும் வியாபித்தவனாவேன்; என் கொலோ, En Kolon - நான் சொல்லுகிற விது ஸம்பாவிதநதானோ? உரை, Urai - நீயே சொல்லு. |
| 2661 | பெரிய திருவந்தாதி || 77 | உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே, இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம், நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர் சொல்நன்றி யாகும் துணை. | இரைக்கும் கடல், Iraikkum Kadhal - கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே கிடந்த, Kidandha - பள்ளிக்கொண்டிரா நின்ற எந்தாய், Endhai - ஸ்வாமீ! உரைக்கில், Uraikkil - ஆராய்ந்து சொல்லில், ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே, Oru Sutraththaar Utraar Endru Aarae - (நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ? எனது உயிர்க்கு, Enathu Uyirkkum - என் ஆத்மாவுக்கு ஓர் சொல், Oru Sol - ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்கிற சரமச்லோகமாகிற ஒரு சொல்லாலே நன்றி ஆகும் துணை, Nandri Aakum Thunai - உதவிசெய்யும் துணையும் உரைப்பு எல்லாம், Uraippu Ellam - மற்றும் சொல்லப்படுகிற எல்லாவகையான துணையும் நின் அன்றி மற்று இலேன் கண்டாய், Nin Andri Matru Ileen Kandaai - உன்னைத் தவிர வேறொருவரையும் உடையே னல்லேனுகாண். |
| 2662 | பெரிய திருவந்தாதி || 78 | துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத் திணைநாளு மின்புடைத்தா மேலும், – கணைநாணில் ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே, ஓவாத வூணாக உண். | துணை, Thunai - ஸ்நேஹிதர்களும் (- (ஆகிய இவை யெல்லாம்) (நீ அவற்றில் ஆசை கொள்ளாமல்)) நாள், Naal - ஆயுஸ்ஸும் பெரு கிளையும், Peru Kilaiyum - பிள்ளைகள் பேரன்கனென்கிற பெரிய ஸந்தானமும் தொல் குணமும், Thol Gunamum - பரம்பரையாக வருகிற நற்குலமும் சுற்றத்து இணை, Sutraththil Inai - பந்துக்களோடே சேர்ந்திருப்பதும் நாளும், Naalum - நாள்தோறும் இன்பு உடைத்து ஆம் எனும், Inbu Udaiththu Aam Ennum - (துக்கத்தை யுண்டு பண்ணாமல்) ஸந்தோஷத்தையுண்டு பண்ணுவனவென்றே வைத்துக்கொண்õடலும், நல்நெஞ்சே, Nalnenje - நல்மனமே! கணை நாணில் ஒவா தொழில்சார்ங்கன், Kanai Naanil Ovaa Thozhilsaarngan - அம்புகள் நாளில் நின்றும் ஒருகாலும் மாறாதபடி வீரத்தொழில் செய்துகொண்டேயிருக்கிற வில்லையுடையனான இராமபிரானுடைய தொல் சீரை, Tol Seerai - இயற்கையான நற்குணங்களையே ஓவாத ஊண் ஆக உண், Ovaadha Oon Aaga Un - நித்யபோக்யமாக அநுபவிக்கக் கடவாய். |
| 2663 | பெரிய திருவந்தாதி || 79 | உள் நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையை யஞ்சுமே, விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில் ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப் பேராயற் காளாம் பிறப்பு. | மண் நாட்டில், Man Naattin - இந்த மண்ணுலகத்திலே ஆர் ஆகி, Aar Aagi - எப்பிறவியிலே பிறந்தவராயினும் என் இழிலிற்று ஆனாலும், En Izhilichirru Aanallum - எப்படிப்பட்ட இழி தொழில்களையுடையவர்களாயினும் ஆழி அம் கைபேர் ஆயற்கு ஆன் ஆம் பிறப்பு, Aazhi Am Kaiper Aayarku Aan Aam Pirappu - திருவாழியை அழகிய கையிலேயுடைய ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அடிமைப்பட்டவர்களாகப் பிறக்கும் பிறவியானது. உன் நாடு தேச அன்றே, Un Naadu Desa Anrre - பரமபதத்திள்ள தேஜஸ்ஸையுடையதன்றோ? ஊழ் வினையை அஞ்சுமே, Oozh Vinaikay Anjumee - அநாதியான பாவங்களைக் குறித்து அஞ்ச வேணுமோ? விண் நாட்டை, Vin Naattai - ஸ்வர்க்க லோகத்தை ஒன்று ஆக, Onru Aaga - ஒரு பொருளாக மெச்சுமே, Mechchume - விரும்பக்கூடுமோ? |
| 2664 | பெரிய திருவந்தாதி || 80 | பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும் இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம் ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான் பாதமே யேத்தாப் பகல். | பிறப்பு, Pirappu - பிறவியையும் இறப்பு, Irappu - மரணத்தையும் மூப்பு, Mooppu - கிழத்தனத்தையும் பிணி, Pini - வியாதிகளையும் துறந்து, Thurandhu - ஒழிந்து பின்னும், Pinnum - அவ்வளவோடு மல்லாமல் இறக்கவும், Irakkavum - மிகவும் இன்பு உடைத்து ஆம் ஏலும், Inbu Udaithu Aam Aelum - ஆநந்தமுடையதான ஸநவல்யமோக்ஷம் உண்டாவதானாலும் மண் அளந்தான் பாதமே ஏத்தா பகல், Man Alandhaan Paathame Aetthaa Pakal - உலகளந்த பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தப்பெறாத காலங்களிலுண்டான மறப்பு எல்லாம், Marappu Ellam - மறப்புகள் எல்லாம் ஏதமே என்று அல்லால் எண்ணுவனே, Edhame Endru Allal Ennavane - துன்பமென்றே எண்ணுவனேயொழிய வேறுவகையாக எண்ணுவனோ? |
| 2665 | பெரிய திருவந்தாதி || 81 | பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,–தகவாத் தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என்றோரார், செழும்பரவை மேயார் தெரிந்து. | செழு பரவை மேயார், Sezhu Paravai Meyaar - அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான், இவர் தகவாதொழும்பர், Ivar Thagavathozhumbar - “இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்; சீர்க்கும் துணை இலர், Seerkum Thunai Ilar - சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்” என்று தெரிந்து ஓரார், Endru Therinthu Ooraar - என்பதை ஊன்றி ஆராயாதவனாய் பகல் இரா என்பதுவும் பாவியாது இருபொழுதும், Pagal Ira Enbadhum Paaviyadhu Irupozhudhum - பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும் இகல் செய்து, Ikal Seidhu - வலிகட்டாயப்படுத்தி எம்மை ஆள்வர், Emmai Aalvar - அடியேனை அநுபவியா நின்றான். |
| 2666 | பெரிய திருவந்தாதி || 82 | தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன், வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில் அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை அம்மானை யேத்தா தயர்ந்து. | தீ வினையேன், Thee Vinaiyen - மஹாபாபியான நான் தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால், Therintha Unarvu Ondru Inmaiyaal - விவேகவுணர்ச்சி சிறிதுமில்லாமையினாலே அந்நான்று, Annandru - முன்பொருகாலத்தில் கரந்த உருவிய அமானை பின் தொடர்ந்து, Karandha Uruviya Amanaipin Thodarndhu - நிஜமான வுருவத்தை மறைத்துக்கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற ஆழி அம் கை அம்மானை, Aazhi Am Kai Ammanai - அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையிலணிந்திருந்த இராமபிரானை ஏத்தாது, Eththadhu - தோத்திரம் செய்யாமல் அயர்த்து, Ayarththu - அறிவுகெட்டு கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன், Keel Naalgal Ellam Vaanaa Irundhozhindhen - கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன். |
| 2667 | பெரிய திருவந்தாதி || 83 | அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன் உயப்போம் நெறியிதுவே கண்டாய், – செயற்பால அல்லவே செய்கிறுதி நெஞ்சமே! அஞ்சினேன் மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து. | நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே! செயற்பால அல்லவே, Seyarpala Allave - செய்யத்தகாதவற்றையே செய்கிறுதி, Seygiruthi - செய்ய முல்வாயென்று அஞ்சினேன், Anjinhen - (உன்னைப் பற்றிப்) பயப்படுகின்றேன்; மல்லர் நான் வல்வினளை வாழ்த்து, Malllar Naan Valvinaiyai Vazhthu - மல்லர்களின் ஆயுளை முடித்த கண்ணபிரானை மங்கவா சாஸநம் பண்ணிக்கொண்டிரு உயபோம் நெறி இதுவே கண்டாய், Uyapom Nerii Idhuvee Kandaai - உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்; அயர்ப்பாய், Ayirppai - (அப்பெருமானை) மறந்து கெட்டாலும் கெடு; அயர்ப்பாய், Ayirppai - மறவாமல் நினைந்து வாழ்ந்தாலும் வாழ்; சொன்னேன், Sonnain - (உனக்கு நான் சொல்லவேண்டிய ஹிதத்தைச்) சொல்லி வைத்தேன். |
| 2668 | பெரிய திருவந்தாதி || 84 | வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத் தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி, எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே, தங்கத்தா னாமேலும் தங்கு. | அவன் அடியை வாழ்த்தி, Avan Adiyai Vaazhththi - “அப்பெருமானுடைய திருவடிகளை மங்களா சாஸநம்பண்ணி பூ புனைந்து, Poo Punaindhu - (அத்திருவடிகளிலே) புஷபங்களைச் சாத்தி நின் தலையை தாழ்த்து, Nin Thalaiyai Thaazhththu - உன் தலையை வணங்கு; இரு கை கூப்பு, Iru Kai Kooppu - இரண்டு கையையுங்கொண்டு அஞ்ஜலிபண்ணு” என்றால், Endraal - என்று சொன்னால் உப்பாத, Uppadha - அப்படி செய்யாத பாழ்த்த விதி, Paalththa Vidhi - பாழும் விதியையுடைய என் நெஞ்சமே, En Nenjamai - என்னுடைய மனமே! அவனை, Avanai - அந்த ஸர்வேச்வானை எங்கு உற்றாய் என்று ஏத்தாது, Engu Utrraai Endru Aeththadhu - ‘எங்கேயிருக்கிறாய்’ என்று சொல்லியழைத்துத் துதியாமல் தங்க ஆம் எனில், Thanga Aam Enil - தரித்திருக்கக் கூடுமாகில் தங்கு, Thangu - தரித்திரு. |
| 2669 | பெரிய திருவந்தாதி || 85 | தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து, எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத் தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய கண்ணன்பால் நன்னிறங்கொள் கார். | பொங்கு ஓதம், Pongu Oodham - கிளர்ந்த அலைகளையுடைத்தாய் தண் அம், Than Am - குளிர்ந்து அழகிய பால்வேலைவாய், Paalvelaivai - திருப்பாற்கடலிலே நல் நிறம் கொள் கார், Nal Niram Kol Kaar - நல்ல திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டிருக்கிற மேகங்கள் தங்கா முயற்சிய ஆய், Thangaa Muyarchiya Aay - மாறாத முயற்சியையுடையனவாய்க் கொண்டு தாழ் விசும்பின் மீது பாய்ந்து, Thaal Visumbin Meedhu Paayndhu - விசாலமான ஆகாசத்தின் மேலே ஸஞ்சரித்து கண்வளரும், Kanvalarum - திருக்கண் வளர்ந்தருளுகிற என்னுடைய கண்ணன் பால், Ennudaiya Kannan Paal - எமது கண்ணபிரானிடத்திலுள்ள எங்கே புக்கு, Engae Pukku - எந்த தேசத்திலேபோய் எத்தவம் செய்திட்டன கொல், Eththavam Seidittana Kol - எவ்வகையான தபஸ்ஸைச் செய்தனவோ? (அறியேன்.) |
| 2670 | பெரிய திருவந்தாதி || 86 | கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான், பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை, என்நினைந்து போக்குவரிப் போது. | கார் கலந்த மேனியான், Kaar Kalanda Meniyaan - மேகத்தோடொத்த திருமேனியை யுடையவனும் கை கலந்த ஆழியான், Kai Kalanda Azhiyaan - கையோடு சேர்ந்த திருவாழியை யுடையவனும். பார் கலந்த வல் வயிற்றான், Paar Kalanda Val Vayitran - (பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சோப் பெற்ற வலிய திருவயிற்றையுடையவனும் பாம்பு அணையான், Paambu Anaiyaan - திருவன்நதாழ்வானைப் படுக்கையாகவுடையவனுமான பெருமானுடைய சீர் கலந்து, Seer Kalandhu - திருக்குணங்கள் நிரம்பிய சொல், Sol - ஸ்ரீஸூக்திகளை நினைந்து, Ninaindhu - அநுணுந்தித்து சூழ்வினையின் ஆழ் அவரை போக்கார் எம், Sozhvinainin Aazh Avarai Pokkaar Em - கொடிய பாவங்களினாலுண்டாகும் மிக்க துன்பங்களைப் போக்கிக்கொள்ளார்களாகில் (ஒழியட்டும்) என் நினைந்து இப்போது போகுவர், En Ninaindhu Ippodhu Poguvaar - வேறு எதை அநுஸந்தித்து இந்தப் போதைப் போக்குவார்கள். |
| 2671 | பெரிய திருவந்தாதி || 87 | இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும் எப்போது மீதேசொல் என்னெஞ்சே–எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான் மெய்கழலே ஏத்த முயல். | என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே! நம்மேல் வினை கடிவான், Nammael Vinai Kadivaan - நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக எப்போதும் கை கழலா நேமியான், Eppodhum Kai Kazhalaa Nemiyaan - ஒருபோதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய மொய்கழலே, Moykazhale - அழகிய திருவடிகளையே ஏந்த, Aentha - அதிக்க இப்போதும், Ippodhum - இக்காலத்திலும் இன்னம் இனி சிறிது நின்றாலும், Innam Ini Siridhu Nindraalum - மேலுள்ள காலத்திலும் எப்போதும், Eppodhum - ஆக எந்தக் காலத்திலும் ஈதே சொல், Eedhe Sol - இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும். |