| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2651 | பெரிய திருவந்தாதி || 67 | அநுவோநன் றென்றங் கமருலகோ வேண்டில்* அதுவோர் பொருளில்லை யன்றே? *- அதுவொழிந்து மண்ணின்றாள் வேனெனிலுங் கூடும் மடநெஞ்சே! * கண்ணன்தாள் வாழ்த்துவதே கல். | மடநெஞ்சே, Madanenjee - அறிவுகெட்ட மனமே! அதுவோ நன்று என்று, Adhuvo Nandru Endru - (இப்பூபதியிலிருப்பைவிட) அந்தப் பரமபதாநுபவம் சிறந்ததென்று கொண்டு அங்கு அவர் உலகு வேண்டில், Angu Avar Ulaku Vendl - அந்தப் பரம பதாநுபவத்தை விரும்புகிற பக்ஷத்தில் மண் நின்று ஆள்வேன் எனினும், Man Nindru Aalvaen Eninum - இந்த மண்ணுலகத்தில் நிலை நின்று ஐச்வரியத்தை ஆள வேணுமென்று விரும்பினாயாகிலும் கூடும், Koodum - அதையும் அவன் எளிதில் அருளக்கூடும்; அது ஓர் பொருள் இல்லை அன்றே, Adhu Oor Porul Illai Andrae - அதனைக் கொடுப்பது (எம்பெருமானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே; அது ஒழிந்து, Adhu Ozhindhu - அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு கண்ணன், Kannan - ஆசவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய தாள், Thaal - திருவடிகளை வாழ்த்துவதே, Vaazhthuvathe - மங்களாசாஸநம் பண்ணுவதையே கல், Kal - அப்பஸிக்கக்கடவாய். |