Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2651 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2651பெரிய திருவந்தாதி || 67
அநுவோநன் றென்றங் கமருலகோ வேண்டில்*
அதுவோர் பொருளில்லை யன்றே? *- அதுவொழிந்து
மண்ணின்றாள் வேனெனிலுங் கூடும் மடநெஞ்சே! *
கண்ணன்தாள் வாழ்த்துவதே கல்.
மடநெஞ்சே, Madanenjee - அறிவுகெட்ட மனமே!
அதுவோ நன்று என்று, Adhuvo Nandru Endru - (இப்பூபதியிலிருப்பைவிட) அந்தப் பரமபதாநுபவம் சிறந்ததென்று கொண்டு
அங்கு அவர் உலகு வேண்டில், Angu Avar Ulaku Vendl - அந்தப் பரம பதாநுபவத்தை விரும்புகிற பக்ஷத்தில்
மண் நின்று ஆள்வேன் எனினும், Man Nindru Aalvaen Eninum - இந்த மண்ணுலகத்தில் நிலை நின்று ஐச்வரியத்தை ஆள வேணுமென்று விரும்பினாயாகிலும்
கூடும், Koodum - அதையும் அவன் எளிதில் அருளக்கூடும்;
அது ஓர் பொருள் இல்லை அன்றே, Adhu Oor Porul Illai Andrae - அதனைக் கொடுப்பது (எம்பெருமானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே;
அது ஒழிந்து, Adhu Ozhindhu - அந்தப் பரமபதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு
கண்ணன், Kannan - ஆசவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்லவனான எம்பெருமானுடைய
தாள், Thaal - திருவடிகளை
வாழ்த்துவதே, Vaazhthuvathe - மங்களாசாஸநம் பண்ணுவதையே
கல், Kal - அப்பஸிக்கக்கடவாய்.