| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2666 | பெரிய திருவந்தாதி || 82 | தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன், வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில் அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை அம்மானை யேத்தா தயர்ந்து. | தீ வினையேன், Thee Vinaiyen - மஹாபாபியான நான் தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால், Therintha Unarvu Ondru Inmaiyaal - விவேகவுணர்ச்சி சிறிதுமில்லாமையினாலே அந்நான்று, Annandru - முன்பொருகாலத்தில் கரந்த உருவிய அமானை பின் தொடர்ந்து, Karandha Uruviya Amanaipin Thodarndhu - நிஜமான வுருவத்தை மறைத்துக்கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற ஆழி அம் கை அம்மானை, Aazhi Am Kai Ammanai - அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையிலணிந்திருந்த இராமபிரானை ஏத்தாது, Eththadhu - தோத்திரம் செய்யாமல் அயர்த்து, Ayarththu - அறிவுகெட்டு கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன், Keel Naalgal Ellam Vaanaa Irundhozhindhen - கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன். |