Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2666 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2666பெரிய திருவந்தாதி || 82
தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன்,
வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில்
அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை யேத்தா தயர்ந்து.
தீ வினையேன், Thee Vinaiyen - மஹாபாபியான நான்
தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால், Therintha Unarvu Ondru Inmaiyaal - விவேகவுணர்ச்சி சிறிதுமில்லாமையினாலே
அந்நான்று, Annandru - முன்பொருகாலத்தில்
கரந்த உருவிய அமானை பின் தொடர்ந்து, Karandha Uruviya Amanaipin Thodarndhu - நிஜமான வுருவத்தை மறைத்துக்கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற
ஆழி அம் கை அம்மானை, Aazhi Am Kai Ammanai - அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையிலணிந்திருந்த இராமபிரானை
ஏத்தாது, Eththadhu - தோத்திரம் செய்யாமல்
அயர்த்து, Ayarththu - அறிவுகெட்டு
கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன், Keel Naalgal Ellam Vaanaa Irundhozhindhen - கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன்.