திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2592 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2592பெரிய திருவந்தாதி || 8
அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம் பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம் கண்காண்பரிய நுண்புடையீர் நும்மை நுமக்கு.
பதவுரை Show / Hide
பருகலாம் பண்பு உடையீர், Parugalaam Panbu Udaiyeer - வாய்மடுத்துப் பானம் பண்ணுதற்கு உரிய திருக்குணங்களையுடையவரே!
பார் அளந்தீர், Paar Alandheer - (த்ரிவிந்தரமாவதாரத்தால்) பூமியெல்லாமனந்தவரே!
பாவியேம் கண் காண்பு அரிய நுண்பு உடையீர், Paaviyeem Kan Kaanbu Ariya Nunbu Udaiyeer - பாவிகளான எங்களுடைய கண்களாலே காண முடியாத வைவக்ஷண்யத்தை யுடையவரே!
நும்மை, Nummai - உம்மை
அருகும், Arugum - கிட்டுவதையும்
சுவடும், Suvadum - சிட்டுவதற்கான உபாயத்தையும்
தெரிவு உணரோம், Therivu Unarom - (நாங்கள்) பகுத்தறிந்தோமில்லை; (அப்படியிருக்கச் செய்தேயும்)
நுமக்கே, Nummaikkee - உம் விஷயத்திலேயே
அன்புமிக பெருமை, Anbumiga Perumai - (எமக்கு) ஆசையானது மிகவும் பெருகா நின்றது;
இது என், Idhu En - இதற்கு என்ன காரணம்?
பேசீர், Pesir - நீர்தாம் சொல்லவேணும்.