Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2604 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2604பெரிய திருவந்தாதி || 20
காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,
நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி
உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,
திருவாகம் தீண்டிற்றுச் சென்று.
அறிவு கைக் கொண்ட நல் நெஞ்சம், Arivu Kaik Konda Nal Nenjam - அறிவுடைய நல்ல நெஞ்சே
மாணி உரு ஆகிக்கொண்டு, Maani Uru Aagikkondu - வாமநரூபியாய்
உல்கம் நீர் ஏற்ற சீரான், Ulgam Neer Aetra Seeraan - (மாவலியிடத்திற் சென்று) உலகங்களை நீரேற்றப் பெற்ற சீர்மை பொருந்திய திருமால்.
சென்று, Sendru - தானே எங்கும் பரவி
திரு ஆகம, Thiru Aagama - தனது திருமேனியினாலே
தீண்டிற்று, Theendirru - உலகங்களையெல்லாம் தீண்டினானென்பதை
காணப்புகில், Kaanappugil - ஆராய்ந்தோமாகில்
நாம் பேசில், Naam Pesil - நாம் பேசும் வார்த்தைகளுக்கு
நாணப்படும் அன்றே, Nanappatum Anre - வெட்கப்பட வேண்டுமன்றோ