Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2645 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2645பெரிய திருவந்தாதி || 61
இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,
மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்
மீதிலகித் தாங்கிடக்கும் மீன்.
தாழ் விசும்பின் மீது, Thaal Visumbin Meedhu - வெளியான ஆகாசத்திலே
இலசி கிடக்கும் மீன், Ilasi Kidakkum Meen - விளங்காநின்ற நக்ஷத்திரங்களானவை
இறை முறையான், Irai Muraiyaan - ஸ்வாமியான முறைமையையுடைய எம்பெருமான்
மண் அளந்த அந்நாள், Man Alandha Annal - உலகளந்த அக்காலத்திலே
வான் நாடர், Vaan Naadar - வானுலகத்திலுள்ளாரெல்லாரும்
கூடி, Koodi - கும்பல்கூடி
சே அடி மேல், Sae Adi Mel - (அப்பெருமானது) செவ்விய திருவடிகளின் மேல்
மறை முறையால், Marai Muraiyaal - வேதங்களிற் சொல்லிய விதிப்படி
தாது இலகு பூ, Thaadu Ilaku Poo - தாதுநயாலே விளங்காநின்றுள்ள புஷ்பங்களை
முறை முறையின், Murai Muraiyin - முறை முறையாக
தெளித்தால் ஒவ்வாதே, Thelithaal Ovaadhe - தெளிந்தாற்போன்றுள்ளனவன்றோ?