| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2659 | பெரிய திருவந்தாதி || 75 | புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென் செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,- அவிவின்றி யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார், ஊன்பருகு நேமியாய்! உள்ளு. | ஊன் பருகு நேமியாய், Oon Parugu Nemiyai - (அஸுர சரீரத்திலுள்ள) மாம்ஸங்களைக் கவர்கின்ற திருவாழி யாழ்வானைக் கையிலேந்தியுள்ள பெருமானே!, புவியும், Puviyum - இவ்வுலகமும் இரு விசும்பும், Iru Visumbum - விசாலமான மேலுலகமும் என் உள்ளாய், En Ullai - என் பக்கல் இரா நின்றாய்: யான் பெரியன், Yaan Periyan - நானே பெரியவன்; நின் அகத்த, Nin Akath - உன்னிடத்தேயுள்ளன; நீ, Nee - உபய விபூதியையும் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற நீ என் செவியின் வழி புகுந்து, En Seviyin Vazhi Pugundhu - என் காது வழியே புகுந்து அவிவு இன்றி, Avivu Inri - ஒருநாளும் விட்டு நீங்காமல் நீ வெரியை என்பதனை யார் அறிவார், Nee Veriyai Enbadhai Yaar Arivaar - நீ பெரியனென்று அறிவாருண்டோ? உள்ளு, Ullu - இதை நீயே ஆலோசித்துப் பார். |