Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2659 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2659பெரிய திருவந்தாதி || 75
புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்
செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,- அவிவின்றி
யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,
ஊன்பருகு நேமியாய்! உள்ளு.
ஊன் பருகு நேமியாய், Oon Parugu Nemiyai - (அஸுர சரீரத்திலுள்ள) மாம்ஸங்களைக் கவர்கின்ற திருவாழி யாழ்வானைக் கையிலேந்தியுள்ள பெருமானே!,
புவியும், Puviyum - இவ்வுலகமும்
இரு விசும்பும், Iru Visumbum - விசாலமான மேலுலகமும்
என் உள்ளாய், En Ullai - என் பக்கல் இரா நின்றாய்:
யான் பெரியன், Yaan Periyan - நானே பெரியவன்;
நின் அகத்த, Nin Akath - உன்னிடத்தேயுள்ளன;
நீ, Nee - உபய விபூதியையும் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கின்ற நீ
என் செவியின் வழி புகுந்து, En Seviyin Vazhi Pugundhu - என் காது வழியே புகுந்து
அவிவு இன்றி, Avivu Inri - ஒருநாளும் விட்டு நீங்காமல்
நீ வெரியை என்பதனை யார் அறிவார், Nee Veriyai Enbadhai Yaar Arivaar - நீ பெரியனென்று அறிவாருண்டோ?
உள்ளு, Ullu - இதை நீயே ஆலோசித்துப் பார்.