திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2652 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2652பெரிய திருவந்தாதி || 68
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும், புல்லென் றழிந் தனகொல் ஏபாவம்,-வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேன துள்ளத் தகம்.
பதவுரை Show / Hide
வெல்ல நெடியான், Vella Nediyan - மிகவுயர்ந்தவனும்
நிறம் கரியான், Niram Kariyan - நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான்
உன் புகுந்து, Un Pugundhu - உள்ளே பிரவேசித்து
அடியேனது உள்ளத் தகம் நீங்கான், Adiyenathu Ullath Thagam Neengan - அடியேனது உள்ளத்தைவிட்டு நீங்குகின்றனில்லை; (ஆகையாலே)
கல்லும், Kallum - திருவேங்கடமலையும்
கனை கடலும், Kanai Kadalum - கோஷிக்கின்ற திருப்பாற்கடலும்
வைகுந்தம், Vaikundham - வைகுண்டமென்கிற
வான் நாடும், Vaan Naadum - வானுலகமும்
புல்லென்று ஒழிந்தன கொல், Pullenru Ozhindhana Kol - அல்பமாய் விட்டன போலும்;
எபாவம், Epavam - ஐயோ பாவம்!