திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2643 | பெரிய திருவந்தாதி || 59 | மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்
காடானும் ஆதானும் கைகொள்ளார்,- ஊடேபோய்ப்
போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து. | பதவுரை Show / Hideபேர் ஓதம், Peer Otham - விசாலமான கடலிலே சிந்து திரை ஊடேபோய், Sindhu Thirai Oodepoy - சிதறிவிழுகின்ற அலைகளினுள்ளே சென்று கண்வளரும், Kanvalarum - திருக்கண் வளர்ந்தருளா நின்ற பேராளன், Peraalan - எம்பெருமானுடைய பேர், Peer - திருநாமங்களை ஓத, Otha - அநுஸந்திக்க வேணுமென்று சிந்திக்க, Sindhikka - நினைத்த மாத்திரத்திலே, வல்வினையார், Valvinaiyaar - கொடிய பாவங்கள் பேர்ந்து, Perndhu - நம்மைவிட்டுக் கிளம்பி காடானும் ஆதானும் கைக்கொள்ளார், Kaadaanum Aadaanum Kaikkollaar - காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது) மாடு வரப்பெறுவராம் என்றே?, Maadu Varapperuvaaram Endrae - இன்னமும் நம்மிடத்திலே வாழப்பெறலாமென்கிற எண்ணத்தினாலோ? |