திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2643 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2643பெரிய திருவந்தாதி || 59
மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார் காடானும் ஆதானும் கைகொள்ளார்,- ஊடேபோய்ப் போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன் பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.
பதவுரை Show / Hide
பேர் ஓதம், Peer Otham - விசாலமான கடலிலே
சிந்து திரை ஊடேபோய், Sindhu Thirai Oodepoy - சிதறிவிழுகின்ற அலைகளினுள்ளே சென்று
கண்வளரும், Kanvalarum - திருக்கண் வளர்ந்தருளா நின்ற
பேராளன், Peraalan - எம்பெருமானுடைய
பேர், Peer - திருநாமங்களை
ஓத, Otha - அநுஸந்திக்க வேணுமென்று
சிந்திக்க, Sindhikka - நினைத்த மாத்திரத்திலே,
வல்வினையார், Valvinaiyaar - கொடிய பாவங்கள்
பேர்ந்து, Perndhu - நம்மைவிட்டுக் கிளம்பி
காடானும் ஆதானும் கைக்கொள்ளார், Kaadaanum Aadaanum Kaikkollaar - காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது)
மாடு வரப்பெறுவராம் என்றே?, Maadu Varapperuvaaram Endrae - இன்னமும் நம்மிடத்திலே வாழப்பெறலாமென்கிற எண்ணத்தினாலோ?