Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2643 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2643பெரிய திருவந்தாதி || 59
மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்
காடானும் ஆதானும் கைகொள்ளார்,- ஊடேபோய்ப்
போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.
பேர் ஓதம், Peer Otham - விசாலமான கடலிலே
சிந்து திரை ஊடேபோய், Sindhu Thirai Oodepoy - சிதறிவிழுகின்ற அலைகளினுள்ளே சென்று
கண்வளரும், Kanvalarum - திருக்கண் வளர்ந்தருளா நின்ற
பேராளன், Peraalan - எம்பெருமானுடைய
பேர், Peer - திருநாமங்களை
ஓத, Otha - அநுஸந்திக்க வேணுமென்று
சிந்திக்க, Sindhikka - நினைத்த மாத்திரத்திலே,
வல்வினையார், Valvinaiyaar - கொடிய பாவங்கள்
பேர்ந்து, Perndhu - நம்மைவிட்டுக் கிளம்பி
காடானும் ஆதானும் கைக்கொள்ளார், Kaadaanum Aadaanum Kaikkollaar - காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது)
மாடு வரப்பெறுவராம் என்றே?, Maadu Varapperuvaaram Endrae - இன்னமும் நம்மிடத்திலே வாழப்பெறலாமென்கிற எண்ணத்தினாலோ?