| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2643 | பெரிய திருவந்தாதி || 59 | மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார் காடானும் ஆதானும் கைகொள்ளார்,- ஊடேபோய்ப் போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன் பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து. | பேர் ஓதம், Peer Otham - விசாலமான கடலிலே சிந்து திரை ஊடேபோய், Sindhu Thirai Oodepoy - சிதறிவிழுகின்ற அலைகளினுள்ளே சென்று கண்வளரும், Kanvalarum - திருக்கண் வளர்ந்தருளா நின்ற பேராளன், Peraalan - எம்பெருமானுடைய பேர், Peer - திருநாமங்களை ஓத, Otha - அநுஸந்திக்க வேணுமென்று சிந்திக்க, Sindhikka - நினைத்த மாத்திரத்திலே, வல்வினையார், Valvinaiyaar - கொடிய பாவங்கள் பேர்ந்து, Perndhu - நம்மைவிட்டுக் கிளம்பி காடானும் ஆதானும் கைக்கொள்ளார், Kaadaanum Aadaanum Kaikkollaar - காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது) மாடு வரப்பெறுவராம் என்றே?, Maadu Varapperuvaaram Endrae - இன்னமும் நம்மிடத்திலே வாழப்பெறலாமென்கிற எண்ணத்தினாலோ? |