| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2635 | பெரிய திருவந்தாதி || 51 | மனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை, சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே, வண்டுழாம் சீராக்கு மாண்பு. | மனம் ஆளும், Manam Aalum - மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி ஆளுமவையான ஓர் ஐயர், Oor Aiyar - ஒப்பற்ற பஞ்சேந்திரியங்கனென்கிற வன் குறும்பர் தம்மை, Van Kurumpar Thammai - பிரபலர்களான துஷ்டர்களை சினம் மாள்வித்து, Sinam Maalviththu - கோவமடங்கச் செய்து ஓர் இடத்தே சேர்த்து, Oru Idaththae Serththu - (பகவத் விஷயமாகிற) ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி, புனம்மேல் தண் துழாயான் அடியை, Punammeel Than Thuzhaayaan Adiyai - தன்னிலத்திலே பொருந்திய குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமானது திருவடிகளை தாம் காணும் அஃது அன்றே, Thaam Kaanum Aghthu Anr Ae - ஸேவித்துக் கொண்டிருப்பதன்றோ வண் துழாம் சீரார்க்கு மாண்பு, Van Thuzhaam Seeraarkku Maanbu - அழகிய விசாலமான நற்குணங்களை யுடையவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு. |