Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2624 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2624பெரிய திருவந்தாதி || 40
வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,
போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால
பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை
மாய்த்தானை வாழ்தே வலி.
வா நெஞ்சே, Va Nenje - வாராய் மனமே!
இது ஒப்ப வாய்ப்பு மற்று இல்லை, Idhu Oppa Vaippu Matru Illai - இப்போது நமக்கு வாய்திருக்கிற மாதிரி மற்று எப்போதும் வாய்க்கமாட்டாது காண;
வெம் நரகில், Vem Narakil - (நைச்சியம் பேசிப் பின் வாங்குவதாகிற) கொடிய நரகத்திலே
பூவியேல், Pooviyel - கொண்டு தள்ளி விடாதே;
தீ பால, Thee Paal - தீயதான தன்மையையுடையலான
பேய் தாய், Pei Thaai - தாய் வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய
உயிர், Uyir - பிராணனை
பால், Paal - அவளது முலைப்பாலோடே
நலாய், Nalai - கலந்து
உண்டு, Undu - அமுது செய்து
அவன் உயிரை மாய்த்தானை, Avan Uyirai Maayththaanai - அப்பூதனையினது உயிரை முடித்த பெருமானை
வாழ்த்தே, Vaazhththe - வாழ்த்துதலே
வலி, Vali - நமக்கு மிடுக்காம்.