Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2621 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2621பெரிய திருவந்தாதி || 37
ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே?
நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய்
மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்
அதுகரமே அன்பால் அமை.
நல் நெஞ்சே, Nal Nenje - நல்ல மனமே! (- (ஆகையால் நீ செய்யத்தக்கது என்னவென்றால்))
ஆம் ஆறு அறிவு உடையார் ஆவது, Aam Aaru Arivu Udaiyaar Aavathu - யுக்தமான அறிவை உடையவராக ஆவது
அரிது அன்றே, Aridhu Andrae - (உலகில் யார்க்கும்) அருமையன்றோ;
அது, Adhu - அப்படிப்பட்ட அறிவை
நாமே உடையோம், Naam E Udaiyom - (பகவத் கிருபையால்) பெற்றிருக்கின்றோம்;
பூ மேய் மதுகரம் மே தண் துழாய், Poo Mey Mathukaram Me Than Thuzhai - பூக்களிலே மேய்கின்ற வண்டுகள் படிந்துள்ள குளிர்ந்த திருத்துழாயையுடையனாய்
மாலாரை, Maalaarai - (ஆச்ரிதர் திறத்தில்) வ்யாமோஹமுடையான பெருமாளை
வாழ்த்து ஆம் அது, Vaazhthu Aam Adhu - வாழ்த்துவதாகிற அக்காரியமொன்றிலேயே
அன்பால், Anbaal - பக்தியுடன்
கரமே, Karame - திண்ணமாக
அமை, Amai - ஊன்றியிரு.