| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2621 | பெரிய திருவந்தாதி || 37 | ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே? நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய் மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம் அதுகரமே அன்பால் அமை. | நல் நெஞ்சே, Nal Nenje - நல்ல மனமே! (- (ஆகையால் நீ செய்யத்தக்கது என்னவென்றால்)) ஆம் ஆறு அறிவு உடையார் ஆவது, Aam Aaru Arivu Udaiyaar Aavathu - யுக்தமான அறிவை உடையவராக ஆவது அரிது அன்றே, Aridhu Andrae - (உலகில் யார்க்கும்) அருமையன்றோ; அது, Adhu - அப்படிப்பட்ட அறிவை நாமே உடையோம், Naam E Udaiyom - (பகவத் கிருபையால்) பெற்றிருக்கின்றோம்; பூ மேய் மதுகரம் மே தண் துழாய், Poo Mey Mathukaram Me Than Thuzhai - பூக்களிலே மேய்கின்ற வண்டுகள் படிந்துள்ள குளிர்ந்த திருத்துழாயையுடையனாய் மாலாரை, Maalaarai - (ஆச்ரிதர் திறத்தில்) வ்யாமோஹமுடையான பெருமாளை வாழ்த்து ஆம் அது, Vaazhthu Aam Adhu - வாழ்த்துவதாகிற அக்காரியமொன்றிலேயே அன்பால், Anbaal - பக்தியுடன் கரமே, Karame - திண்ணமாக அமை, Amai - ஊன்றியிரு. |