Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2630 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2630பெரிய திருவந்தாதி || 46
நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும்
தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
நீகதியா நெஞ்சே! நினை.
தேங்கு ஓதம் நீர் உருவன், Thengu Odam Neer Uruvan - ஓடாமல் தேங்குகின்ற கடல் போன்ற திருநிறத்தையுடையவனும்.
செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவனுமான
மால், Maal - ஸர்வேச்வரன்
நீங்காத, Neengadha - ஒருநாளும் விட்டுப்பிரியக்கூடாத
மா கதி ஆம், Maa Kathi Aam - சிறந்த உபேயமாயிரா நின்றான்; (அவ்வளவு மல்லாமல்,)
வெம்நரகில், Vemnarakil - கொடியஸம்ஸாரத்திலே
சேராமல், Seramal - பொருந்தாமல்
காப்பதற்கு, Kaappatharku - நம்மை ரக்ஷிப்பதற்கு
கதி ஆம், Kathi Aam - உபாயமாகவும் இராநின்றான்;
நெஞ்சேரி நினை, Nenjeri Ninai - நெஞ்சே!  (இதை) நீ அநுஸந்திக்கக்கடவை;
நாள் நாளும், Naal Naalum - நாள்தோறும் (உடனுக்கு) நான்
நான் கூறும் கூற்று ஆவது இத்தனையே, Naan Koorum Kootru Aavathu Ithanaiye - சொல்லும் சொல்லாவது இங்ஙனமே காண்.