| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2630 | பெரிய திருவந்தாதி || 46 | நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும் தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு, நீகதியா நெஞ்சே! நினை. | தேங்கு ஓதம் நீர் உருவன், Thengu Odam Neer Uruvan - ஓடாமல் தேங்குகின்ற கடல் போன்ற திருநிறத்தையுடையவனும். செம் கண், Sem Kan - செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவனுமான மால், Maal - ஸர்வேச்வரன் நீங்காத, Neengadha - ஒருநாளும் விட்டுப்பிரியக்கூடாத மா கதி ஆம், Maa Kathi Aam - சிறந்த உபேயமாயிரா நின்றான்; (அவ்வளவு மல்லாமல்,) வெம்நரகில், Vemnarakil - கொடியஸம்ஸாரத்திலே சேராமல், Seramal - பொருந்தாமல் காப்பதற்கு, Kaappatharku - நம்மை ரக்ஷிப்பதற்கு கதி ஆம், Kathi Aam - உபாயமாகவும் இராநின்றான்; நெஞ்சேரி நினை, Nenjeri Ninai - நெஞ்சே! (இதை) நீ அநுஸந்திக்கக்கடவை; நாள் நாளும், Naal Naalum - நாள்தோறும் (உடனுக்கு) நான் நான் கூறும் கூற்று ஆவது இத்தனையே, Naan Koorum Kootru Aavathu Ithanaiye - சொல்லும் சொல்லாவது இங்ஙனமே காண். |