| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2650 | பெரிய திருவந்தாதி || 66 | சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை, மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே! அறிகண்டாய் சொன்னேன் அது. | நெஞ்சை, Nenjai - ஓ மனமே! சூடு ஆய நேமியான், Soodu Aaya Nemiyan - (ஆயுதமாயிருக்கும் மாத்திரமல்லாமல்) அலங்காரமாயுமிருக்கிற திருவாழியையுடையவனும் மாட்டே, Maattai - அவன் பக்கத்திலிருந்து கொண்டே துயர் இழைத்த, Thuyar Izhaittha - துன்பப்படுத்தின மாயவனை, Maayavanai - ஆச்சர்யனும் ஈட்ட, Eetta - திரண்ட வெறிகொண்ட, Verikonda - பரிமளம் மிக்க தண் துழாய், Than Thuzhai - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த தொல் அரக்கன் இன்உயிரை, Thol Arakkan Inuyirai - வெகு காலமாகத் தீமை செய்து கொண்டிருந்த இராவணனுடைய இனிய உயிரை. வேதியனை, Vedhiyai - வைதிகனுமான எம்பெருமானை அறிகண்டாய், Arikandai - அநுஸந்தித்திரு; அது சொன்னேன், Adhu Sonnaen - ஒருவர்க்கும் சொல்லவொண்ணாத அப்படிப்பட்ட இவ்விஷயத்தை உனக்குச் சொன்னேன். |