| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2591 | பெரிய திருவந்தாதி || 7 | யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார் தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த அம்மா!நின் பாதத் தருகு. | பூ மேய, Poo Meyya - தாமரைப்பூவில் பொருந்தியிருக்கிற செம் மாதை, Sem Maathai - *ஹிரண்ய வர்ணையான பிராட்டியை நின் மார்வில் சேர்வித்து, Nin Maarvil Serivithu - உனது திருமார்விலே சேர்த்துக் கொண்டானாயும் பார் இடந்த, Paar Idantha - (பிரளயத்திலழுந்திக் கிடந்த) பூமியைக் குத்தியெடுத்தவனாயுமிருக்கிற அம்மா, Amma - ஸ்வாமீ! நின் பாதத்து அருகு, Nin Paadaththu Arugu - தேவரீருடைய திருவடிகளின் சமீபத்திலே என் நெஞ்சினார் தாமே, En Nenjinnaar Thaame - என்னுடைய நெஞ்சதானே அணுக்கர் ஆய் சார்ந்தொழிந்தார், Anukkara Aayi Sarnthozhindhaar - அந்தரங்கமாகச் சென்று சேர்ந்துவிட்டது; அரு வினையோம், Aru Vinaiyom - போக்க முடியாத பாவத்தைப் பண்ணியுள்ள யாமே, Yaame - நாங்கள் மாத்திரம் சேயோம்., Seyyom - தூரத்திலிருக்கிறோம். |