Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2669 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2669பெரிய திருவந்தாதி || 85
தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,
எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத்
தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய
கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்.
பொங்கு ஓதம், Pongu Oodham - கிளர்ந்த அலைகளையுடைத்தாய்
தண் அம், Than Am - குளிர்ந்து அழகிய
பால்வேலைவாய், Paalvelaivai - திருப்பாற்கடலிலே
நல் நிறம் கொள் கார், Nal Niram Kol Kaar - நல்ல திருமேனி நிறத்தைக் கொள்ளை கொண்டிருக்கிற மேகங்கள்
தங்கா முயற்சிய ஆய், Thangaa Muyarchiya Aay - மாறாத முயற்சியையுடையனவாய்க் கொண்டு
தாழ் விசும்பின் மீது பாய்ந்து, Thaal Visumbin Meedhu Paayndhu - விசாலமான ஆகாசத்தின் மேலே ஸஞ்சரித்து
கண்வளரும், Kanvalarum - திருக்கண் வளர்ந்தருளுகிற
என்னுடைய கண்ணன் பால், Ennudaiya Kannan Paal - எமது கண்ணபிரானிடத்திலுள்ள
எங்கே புக்கு, Engae Pukku - எந்த தேசத்திலேபோய்
எத்தவம் செய்திட்டன கொல், Eththavam Seidittana Kol - எவ்வகையான தபஸ்ஸைச் செய்தனவோ? (அறியேன்.)