| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2601 | பெரிய திருவந்தாதி || 17 | சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும் வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய, தாள்வரைவில் லேந்தினார் தாம். | எங்கும் சூழ்ந்து, Engum Soozhndhu - நாற்புறங்களிலும் சுற்றிக்கொண்டு அரக்கன், Arakkan - இராவணனுடைய வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடிய, Vaal Varaigal Pol Van Thalaigal Thaam Idhiya - ஒளி பொருந்திய, மலைகள் போல் வலிதான தலைகளானவை இற்று விழும்படி தாள்வரைவில் ஏந்தினார் தாம், Thaalvaraivil Aendhinar Thaam - காலுரத்தை யுடைத்தாய் மலை போன்றதான வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான் சூழ்ந்து, Soozhndhu - (இந்த லீலா விபூதியிலே வந்து) வளைத்துக் கொண்டு அடியார் வேண்டின் அக்கால், Adiyaar Veenin Akkal - ‘ஓ ஜனங்களே! நீங்கள் எனக்கு அடிமைப்பட வேணும்’ என விரும்பினால் தோன்றாது விட்டாலும், Thondraathu Vittaalum - ஒரு அடியவனும் அகப்படாதபடி உபேக்ஷிக்கப் பெற்றாலும் வாழ்ந்திடுவர், Vaazhnthiduvar - திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்) உகந்தேயிருப்பர்; பின்னும், Pinnum - எக்காலத்திலும் தம் வாய் திறவார், Tham Vaai Thiravaar - (பிராட்டிமாரிடத்திலும் இந்த மனக் குறையை) வாய் திறந்து சொல்லிக்கொள்ளமாட்டார். |