| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2597 | பெரிய திருவந்தாதி || 13 | வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட, இழக்கவும் காண்டும் இறைவ.- இழபுண்டே, எம்மாட் கொண்டாகிலும் யான்வேண்ட, என்கண்கள் தம்மால்காட் டுன்மேனிச் சாய். | வழக்கொடு மாறுகொள் அன்று, Vazhakkodu Maarugol Andru - (இப்போது அடியேன் விஜ்ஞாபிக்கப் போகிற ஒரு விஷயம்) நியாத்தோடு மாறுபட்டதன்று; (- (அஃது என்னவெனில்)) அடியார் வேண்ட, Adiyaar Venda - (மேன்மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்களாகில் இழக்கவும் காண்டும், Izhakkavum Kaandum - (மேன்மக்கள் நஷ்டப்பட்டாகிலும் காரியம் செய்வதை உலகில்) காண்கிறோம்; இறைவ, Iraiva - ஸ்வாமீ! இழப்பு உண்டே, Izhappu Unde - (என்வேண்டுகோளை நிறைவேற்றுதற்காக) கஷ்டப்படவேண்டியது ஏதேனுமுண்டோ? (ஒன்றுமில்லை) யான் வேண்ட, Yaan Venda - என்னுடைய வேண்டுகோளுக்காக எம் ஆள் கொண்டு ஆகிலும், Em Aal Kondu Aagilum - என்னை அடிமைப்படுத்திக் கொண்டாவது என் கண்கள் தம்மால், En Kangal Thammaal - எனது கண்களுக்கு உன்மேனி சாய், Unmeeni Saai - உனது திருமேனியின் ஒளியை காட்டு, Kaattu - காட்டியருள வேணும் |