Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2597 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2597பெரிய திருவந்தாதி || 13
வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,
இழக்கவும் காண்டும் இறைவ.- இழபுண்டே,
எம்மாட் கொண்டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்
தம்மால்காட் டுன்மேனிச் சாய்.
வழக்கொடு மாறுகொள் அன்று, Vazhakkodu Maarugol Andru - (இப்போது அடியேன் விஜ்ஞாபிக்கப் போகிற ஒரு விஷயம்) நியாத்தோடு மாறுபட்டதன்று; (- (அஃது என்னவெனில்))
அடியார் வேண்ட, Adiyaar Venda - (மேன்மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்களாகில்
இழக்கவும் காண்டும், Izhakkavum Kaandum - (மேன்மக்கள் நஷ்டப்பட்டாகிலும் காரியம் செய்வதை உலகில்) காண்கிறோம்;
இறைவ, Iraiva - ஸ்வாமீ!
இழப்பு உண்டே, Izhappu Unde - (என்வேண்டுகோளை நிறைவேற்றுதற்காக) கஷ்டப்படவேண்டியது ஏதேனுமுண்டோ? (ஒன்றுமில்லை)
யான் வேண்ட, Yaan Venda - என்னுடைய வேண்டுகோளுக்காக
எம் ஆள் கொண்டு ஆகிலும், Em Aal Kondu Aagilum - என்னை அடிமைப்படுத்திக் கொண்டாவது
என் கண்கள் தம்மால், En Kangal Thammaal - எனது கண்களுக்கு
உன்மேனி சாய், Unmeeni Saai - உனது திருமேனியின் ஒளியை
காட்டு, Kaattu - காட்டியருள வேணும்