Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2603 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2603பெரிய திருவந்தாதி || 19
சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே,
எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண்
மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக,
காத்தானைக் காண்டும்நீ காண்.
சூது அறியா நெஞ்சமே, Soodhu Ariyaa Nenjamai - செய்ய வேண்டியது இன்னதென்றறியாமல் தளும்புகிற மனமே! (- (மெய்யே காண விரும்பினால்))
சொல்லில் குறை இல்லை, Sollil Kurai Illai - பகவத் விஷயத்தைப் பேசினால் பேச்சில் குறையில்லை; (அல்லது) நமக்கொரு குறையில்லை;
தொல்லை கண், Thollai Kan - அநாதியான இப்பூமியில்
மா தானைக்கு எல்லாம், Maa Thanaikku Ellam - (துரியோதநாதிகளுடைய) பெரிய சேனைகளுக்கெல்லாம்.
ஓர் ஐவரையே மாறு ஆக, Oor Aivaraie Maaru Aaga - பஞ்சபாண்டவர்களே எதிரிகளாம் படி
எல்லி பகல் என்னாது எப்போதும் காத்தானை, Elli Pagal Ennaadhu Eppodhum Kaathaanai - இரவுபகலென்னாமல் எக்காலத்திலும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை
காண்டும், Kaandum - காண்போம்!
நீ காண், Nee Kaan - நீ காணலாம்.