Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2607 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2607பெரிய திருவந்தாதி || 23
இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன்,
இளைக்க நமன்தமர்கள் பற்றி – இளைப்பெய்த,
நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,
தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான்.
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
நமன் தமர்கள், Naman Thamarhal - யமபடர்கள்
இளைக்க பற்றி, Ilaiyka Patri - பிடிக்கிற பிடியிலே நாம் துடிக்கும்படி நம்மைப் பிடித்து
இளைப்பு எய்த, Ilaiyppu Eitha - அதற்கு மேலும் அதிகமாகத் துடிக்கும்படி
நாய்தந்து மோதாமல், Naithandu Moothamal - நாய்களை ஏவி நலியாமற்படி
நங்குவான் நல்காப்பான், Nanguvaan Nalkaappaan - (எம்பெருமான் நமக்கு) அருள் செய்தாலும் சரி, அருள் செய்யாவிட்டாலும் சரி;
தான், Thaan - அந்த எம்பெருமான்தான்
எவ்வுயிர்க்கும், Evvuirkkum - எல்லாப்பிராணிகளுக்கும்
தாய் தந்தை, Thaai Thandai - தாயும் தமப்பனுமாவன்;
சொன்னேன், Sonnain - (இவ்வுண்மையை உனக்குச்) சொல்லிவிட்டேன்;
இளைப்பாய் இளைப்பாய், Ilaiyppai Ilaiyppai - இனி நீ  அநர்த்தப்பட்டாலும் படு; சுகப்பட்டாலும் படு.