Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2657 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2657பெரிய திருவந்தாதி || 73
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,
காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.
பூவையும், Poovaiyum - பூவைப்பூவையும்
காயாவும், Kaayavum - காயாம் பூவையும்
நீலமும், Neelamum - கரு நெய்தல் பூவையும்
பூக்கின்ற, Pookkinra - புஷ்பிக்கின்ற
பிரான், Piraan - எம்பெருமானுடைய
உருவே என்று, Uruve Endru - திருவுருவமே என்ற கொண்டு
பாவியேன், Paaviyen - அடியேனுடைய
காவி மலர், Kaavi Malar - செங்கழுநீர்ப் பூவையும்
என்றும் காண் தோறும், Endrum Kaan Thorum - பார்க்கிற போதெல்லாம்
அவ் அவை எல்லாம், Avv Avai Ellam - அந்தந்த மலர்களெல்லாம்
மெல் ஆவி, Mel Aavi - மிருதுவான உயிரும்
மெய், Mei - சரீரமும்
மிகவே பூரிக்கும், Mikave Poorkkum - மிகவும் பருத்து வளர்கின்றது