| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2586 | பெரிய திருவந்தாதி || 2 | புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம் மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம் எங்கள்மால் கண்டாய் இவை. | எம் கண், Em Kan - எங்களிடத்தில் (- (ஆக இப்படிப்பட்ட உண்மையை நாங்கள் நன்கு அறிந்திருந்தும் உன்னைப் புகழாமலாவது மதியாமலாவது இருக்கப் போகிறதில்லை; புகழ்வதும், மதிப்பதும் செய்யத்தான் போகிறோம்.)) மால், Maal - வ்யாமோஹகத்தையுடைய செம் கண் மால், Sem Kan Maal - புண்டரீகாக்ஷனான பெருமானே, புகழ்வோம், Pugazhvom - (ஒருவராலும் புகழ்ந்து முடிக்கவொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில் பழிப்போம், Pazhippom - (அயோக்யர் புகழ்வது புகழ்ச்சியன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய்விடுவோம்; புகழோம், Pugazhom - (இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு) புகழாதிருந்தோமாகில் பழியோம், Pazhiyom - உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம்; மதிப்போம், Mathippom - உன்னைச் சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோமாகிலும் இகழ்வோம், Ikazhvom - உன்னை அகௌரவப்படுத்தினவர்களாக ஆய்விடுவோம்; மதியோம், Madhiyom - அப்படி நெஞ்சால் நினையாதிருந்தோமாகில் இகழோம், Ikazhom - அகௌரவப்படுத்தாதவர்களாக ஆவோம்; நீ சீறல், Nee Seeral - நீ கோபங்கொள்ளலாகாது; இவை, Ivai - புகழ நினைப்பதும் (பிறகு) புகழலாகாதென்று பின் வாங்குவதுமாகிற இவை தீ வினையோம் எங்கள் மால் கண்டாய், Thee Vinaiyom Engal Maal Kandaai - மஹாபாவிகளான எங்களுடைய ப்ரமமேயாம். |