Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2619 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2619பெரிய திருவந்தாதி || 35
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,
ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை
வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான்,
அன்புடைய னன்றே யவன்?
அன்று, Anru - முற்காலத்தில்
அம் கை வன் புடையால், Am Kai Van Pudaiyaal - அழகிய திருக்கைகளாலே ஓங்கி அறைந்ததனால்
பொன் பெயரோன் வாய் தகர்ந்து, Pon Peyroon Vaai Thakarndhu - இரணியாசுரனுடைய (ப்ரஹ்லாதனை அதட்டின) வாயைப் புடைத்து
நின்றும், Nindrum - (என்னெஞ்சிலே) நின்று கொண்டிருந்தும்
இருந்தும், Irundhum - வீற்றிருந்தும்
கிடந்தும், Kidandhum - சயனித்திருந்தும்
திரிதந்தும், Thiridandhum - எழுந்துஉயாலியும்
ஒன்றும், Ondrum - கொஞ்சமும்
மார்பு இடந்தான் அவன், Maarbu Idandhaan Avan - (அவ்விரணியனுடைய) மார்பைக் கிழித்தெறிந்த பெருமான்.
அன்பு உடையான் அன்றே, Anbu Udaiyaan Andrae - (ஆச்ரிதர்திறத்தில்) மிக் அன்புடையவனன்றோ; (ஆனது பற்றியே)
ஓவாற்றான், Ovaattraan - திருப்தியடைகிறானில்லை;
என் நெஞ்சு அகலான், En Nenju Akalaan - என்னுடைய நெஞ்சைவிட்டு நீங்குகிறானில்லை.