| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2619 | பெரிய திருவந்தாதி || 35 | நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும், ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான், அன்புடைய னன்றே யவன்? | அன்று, Anru - முற்காலத்தில் அம் கை வன் புடையால், Am Kai Van Pudaiyaal - அழகிய திருக்கைகளாலே ஓங்கி அறைந்ததனால் பொன் பெயரோன் வாய் தகர்ந்து, Pon Peyroon Vaai Thakarndhu - இரணியாசுரனுடைய (ப்ரஹ்லாதனை அதட்டின) வாயைப் புடைத்து நின்றும், Nindrum - (என்னெஞ்சிலே) நின்று கொண்டிருந்தும் இருந்தும், Irundhum - வீற்றிருந்தும் கிடந்தும், Kidandhum - சயனித்திருந்தும் திரிதந்தும், Thiridandhum - எழுந்துஉயாலியும் ஒன்றும், Ondrum - கொஞ்சமும் மார்பு இடந்தான் அவன், Maarbu Idandhaan Avan - (அவ்விரணியனுடைய) மார்பைக் கிழித்தெறிந்த பெருமான். அன்பு உடையான் அன்றே, Anbu Udaiyaan Andrae - (ஆச்ரிதர்திறத்தில்) மிக் அன்புடையவனன்றோ; (ஆனது பற்றியே) ஓவாற்றான், Ovaattraan - திருப்தியடைகிறானில்லை; என் நெஞ்சு அகலான், En Nenju Akalaan - என்னுடைய நெஞ்சைவிட்டு நீங்குகிறானில்லை. |