Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2631 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2631பெரிய திருவந்தாதி || 47
நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே,
நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச
எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும்
எவ்வளவு முண்டோ எமக்கு.
மாலே, Maale - ஸர்வேச்வரனே! (- (இப்பாவிகள் அற்ப பலன்களை விரும்பி தேவதாந்தரங்களின் பக்கல் ஓடுமவர்களே யொழிய அவற்றுக்காகவும் உன்னருகு வரமாட்டார்கள்; இப்படியான பின்பு.) (உபாயமும் உபேயமும் நீயேயென்கிற உறுதி எமக்கு நிலை பெற்றதன்றோ.))
மானிடவர், Maanidavar - “இவ்வுலகத்தவர்கள்
நினைத்து இறைஞ்சி, Ninaithu Irainji - நம்மை ஒரு பொருளாக நினைத்து வணங்கி
ஒன்று, Ondru - ஏதாவதொரு அற்ப பலனையாவது
இரப்பர், Irappar - நம்மிடத்தில் வேண்டிக் கொள்வர்கள்
என்றேயும், Endraiyum - என்று கூட
நீ நினைத்திட வேண்டா, Nee Ninaithida Venda - நீ நினைக்க வேண்டா;
நேரே நினைத்து இறைஞ்ச, Nere Ninaithu Irajinja - (இவர்கள்) உன்னையே உபாயமாகவும் உபேயமாகவும் நினைத்துத் தொழுவதற்கு
எவ் அளவர், Ev Alavar - என்ன அறிவுள்ளவர்கள்?
என் இடத்தோர், En Idathor - அப்படிப்பட்ட அறிவு உண்டாகக்கூடிய இடத்தில் தானுள்ளவர்களோ? (இருள் தருமாஞானத்திலுள்ளவர்களன்றோ.)
எமக்கு, Emakku - உன்னுடைய நிர்ஹேதுந கடாஷத்திற்குப் பாத்திராமன அடியோங்களுக்கோவென்றால்
அது தானும், Adhu Thanum - கீழ்சொன்ன மானிடவர்களுக்குமான துர்ப்புத்தி
எவ்வளவும், Evvalavum - சிறிதேனும்,
உண்டோ, Undo - உண்டாகக் கூடியதோ?