திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2618 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2618பெரிய திருவந்தாதி || 34
பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச் சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும், நீதியாய்! நிற்சார்ந்து நின்று.
பதவுரை Show / Hide
நீலாழி சோதியாய், Neelaazhi Sothiyaai - நீலக்கடல் போன்ற நிறத்தையுடையவனே!
ஆதியாய், Aadhiyaai - முழுமுதற் கடவுளே!
எம்பால் தொல் வினை கடியும் நீதியாய், Empaal Thol Vinai Kadiyum Neethiyaai - எம்மிடத்திலே யுள்ள பழைய பாவங்களைத் தொலைக்குமியல்வுடையவனே!
யாம், Yaam - அடியோம்
நின், Nin - உன்னை
சார்ந்து நின்று, Saarndhu Nindru - அணுகி,
நீ பால் ஆழி கிடக்கும் பண்பை, Nee Paal Aazhi Kidakkum Panbai - நீ திருப்பாற் கடலில் சயனிக்கு மழகை
கேட்டேயும், Kaetteyum - காதாற்கேட்ட மாத்திரத்திலும்
கால் ஆழும், Kaal Aazhum - கால்கள் தடுமாறுகின்றன;
நெஞ்சு அழியும், Nenju Azhiyum - நெஞ்சு சிதிலமாகா நின்றது;
கண் சுழலும், Kan Suzhalum - கண்கள் சுழலவிடா நின்றன.