| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2618 | பெரிய திருவந்தாதி || 34 | பாலாழி நீகிடக்கும் பண்பை,யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச் சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம் பால்கடியும், நீதியாய்! நிற்சார்ந்து நின்று. | நீலாழி சோதியாய், Neelaazhi Sothiyaai - நீலக்கடல் போன்ற நிறத்தையுடையவனே! ஆதியாய், Aadhiyaai - முழுமுதற் கடவுளே! எம்பால் தொல் வினை கடியும் நீதியாய், Empaal Thol Vinai Kadiyum Neethiyaai - எம்மிடத்திலே யுள்ள பழைய பாவங்களைத் தொலைக்குமியல்வுடையவனே! யாம், Yaam - அடியோம் நின், Nin - உன்னை சார்ந்து நின்று, Saarndhu Nindru - அணுகி, நீ பால் ஆழி கிடக்கும் பண்பை, Nee Paal Aazhi Kidakkum Panbai - நீ திருப்பாற் கடலில் சயனிக்கு மழகை கேட்டேயும், Kaetteyum - காதாற்கேட்ட மாத்திரத்திலும் கால் ஆழும், Kaal Aazhum - கால்கள் தடுமாறுகின்றன; நெஞ்சு அழியும், Nenju Azhiyum - நெஞ்சு சிதிலமாகா நின்றது; கண் சுழலும், Kan Suzhalum - கண்கள் சுழலவிடா நின்றன. |