திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2633 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2633பெரிய திருவந்தாதி || 49
கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான் வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள் காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார் பேருருவென் றெம்மைப் பிரிந்து.
பதவுரை Show / Hide
கொண்டால் தான், Kondal Thaan - மேகங்களையும்
மால் வரை தான், Maal Varai Thaan - பெரிய மலைகளையும்
மா கடல்தான், Maa Kadalthaan - கருங்கடலையும்
மற்று கார் உருவம்தான், Mattru Kaar Uruvamthaan - மற்றுமுள்ள (குவளை, குயில், மயில் முதலிய) கறுத்து உருவங்களையும்
கண்ட நாள், Kanda Naal - பார்க்குங் காலத்தில்
காண்தோறும், Kaandhorum - பார்க்கும்போதெல்லாம்
கூர் இருள் தான், Koora Irul Thaan - செறிந்த இருளையும்
வண்டு அறா பூவைதான், Vandu Araa Poovaithaan - (தேனில் நசையாலே) வண்டுகள் விட்டு நீங்காத பூவைப் பூவையும்
நெஞ்சு, Nenju - என் மனமானது
கண்ணனார் பேர் உரு என்று, Kannanaar Peer Uru Enru - இவை கண்ணபிரானுடைய அழகிய திருமேனி என்றெண்ணி
எம்மை பிரிந்து, Emmai Pirinthu - என்னைவிட்டு நீங்கி
ஓடும், Oodum - அங்கே ஓடும்.