| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2633 | பெரிய திருவந்தாதி || 49 | கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான் வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள் காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார் பேருருவென் றெம்மைப் பிரிந்து. | கொண்டால் தான், Kondal Thaan - மேகங்களையும் மால் வரை தான், Maal Varai Thaan - பெரிய மலைகளையும் மா கடல்தான், Maa Kadalthaan - கருங்கடலையும் மற்று கார் உருவம்தான், Mattru Kaar Uruvamthaan - மற்றுமுள்ள (குவளை, குயில், மயில் முதலிய) கறுத்து உருவங்களையும் கண்ட நாள், Kanda Naal - பார்க்குங் காலத்தில் காண்தோறும், Kaandhorum - பார்க்கும்போதெல்லாம் கூர் இருள் தான், Koora Irul Thaan - செறிந்த இருளையும் வண்டு அறா பூவைதான், Vandu Araa Poovaithaan - (தேனில் நசையாலே) வண்டுகள் விட்டு நீங்காத பூவைப் பூவையும் நெஞ்சு, Nenju - என் மனமானது கண்ணனார் பேர் உரு என்று, Kannanaar Peer Uru Enru - இவை கண்ணபிரானுடைய அழகிய திருமேனி என்றெண்ணி எம்மை பிரிந்து, Emmai Pirinthu - என்னைவிட்டு நீங்கி ஓடும், Oodum - அங்கே ஓடும். |