Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2598 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2598பெரிய திருவந்தாதி || 14
சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே,
பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த்
தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம்
பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து.
நெஞ்சே, Nenje - ஓ மனமே! (- (அப்பெருமானைக் கொன்றுவிட நினைத்து) (இப்படிக் கேட்பது எதுக்காக? என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள்;))
பேயார், Peyaar - பூதனையானவள்,
சாயால் கரியானை, Saayal Kariyanai - நிறத்தால் கரியனான கண்ணபிரானை
உன் அறியார் ஆய், Un Ariyaar Aay - உள்ளே புகுந்து அநுபவிக்க அறியாதவளாய்
பேயர் ஆய், Peyar Aay - அறிவுகெட்டவளாய்
முலை கொடுத்தார், Mulai Koduththaar - (விஷம் தடவின) முலையை (உண்ணக்) கொடுத்தாள்;
நீ ஆர், Nee Aar - அவளுக்கு நீ உறவு முறையில் என்ன ஆகவேண்டும்?
தேம்பு ஊண் சுவைத்து, Theembu Oon Suvaiththu - ஆத்மா கெட்டுப்போம்படியான சப்தாதி  விஷய போகங்களை நீ அநுபவித்து
ஊன் அறிந்து அறிந்தும், Oon Arindhu Arindhum - (அதனால்) ஊனமடைந்திருக்கிறாயென்பதை நன்றாக நீ அறிந்திருந்தும்
போய், Poy - நம்முடைய தாழ்வுக்குத் தகாததான சிறந்த பகவத் விஷயத்தை அநுபவிப்பதாகப்) போய்
தீ வினை ஆம்பாம்பார் வாய் கை நீட்டல் பார்த்தி, Thee Vinai Aampam Paar Vaai Kain Neettal Paarthi - அநர்த்தத்தை விளைக்கவல்ல பாம்பின் வாயிலே கை வீட்டுவாரைப் போலலே பகவதநுபவம் பண்ணி மூடியப் பார்க்கிறாயே.