Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2612 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2612பெரிய திருவந்தாதி || 28
அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,
இன்றேநாம் காணா திருப்பது வும்,-என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்
உட்கண்ணால் காணு முணர்ந்து.
என்றேனும், Endraenum - எக்காலத்திலும்
கண் கண்ணால், Kan Kannal - வெளிக்கண்ணாலே
நாணாக, Naanaga - காணக்கூடாத
அவ்வுருவை, Avvuruvai - அப்படிப்பட்ட விலக்ஷணமான திருவுருவத்தை
நெஞ்சு என்னும் உன் கண் உணர்ந்து  காணுமேல், Nenju Ennum Un Kan Unarndhu Kaanumeel - நெஞ்சாகிற அகக்கண் விகஹித்து ஸாக்ஷாத்கரிக்குமாகில்,
அன்றே, Andrae - அப்போதே,
ஆழியான கார் உருவம், Azhiyana Kaar Uruvam - திருவாழியை நிரூபகமாகவுடையனான எம்பெருமானுடைய கரிய திருமேனியை
நம் கண் காணும், Nam Kan Kaanum - நமது புறக்கண்ணும் காணப்பெறும்;
நாம் காணாதிருப்பதுவும் இன்றே, Naam Kaanadhiruppadhum Indrae - நாம் அவ்வுருவத்தைக் காணாமல் வருந்திக் கிடப்பது அகக்கண் மலராத இப்போது மாத்திரமே.