Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2616 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2616பெரிய திருவந்தாதி || 32
தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,
தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று
தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,
யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது?
தமக்கு அடிமை வேண்டுவார், Thamakku Adimai Vendum Vaar - தாம் அடிமையாயிருப்பதற்கு ஆசைப்படுமவரான
தாமோதரனார் தமக்கு, Thamodharanaar Thamakku - தாம்பாலாப்புண்ட பெருமானுக்கு
அடிமை செய் என்றால், Adimai Sei Endraal - (நெஞ்சே! நீ) அடிமை செய் என்று சொன்னால்
நெஞ்சினார், Nenjinaar - எனது நெஞ்சானது
செய்யாது, Seiyyaadhu - அப்படியே அடிமை செய்யாமல்
எமக்கென்று, Emakkendru - என் வார்த்தை கேளாத ஸ்வாகத் திரியம் பாராட்டி
தாம் செய்யும தீ வினைக்கே, Thaam Seiyyum Thee Vinnaikkee - (வெகுகாலமாகத்) தான் செய்து வருகிற தப்புக் காரியத்திலேயே
தாழ்வுறுவர், Thaazhvuruvaar - ஊன்றியிருக்கின்றது;
இங்கு, Inku - இப்படிப்பட்ட நிலைமையில்
யாம் செய்வது யாது, Yaam Seivathu Yaadhu - நான் செய்யத்தக்கது என்னோ?