| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2616 | பெரிய திருவந்தாதி || 32 | தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார், தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார், யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது? | தமக்கு அடிமை வேண்டுவார், Thamakku Adimai Vendum Vaar - தாம் அடிமையாயிருப்பதற்கு ஆசைப்படுமவரான தாமோதரனார் தமக்கு, Thamodharanaar Thamakku - தாம்பாலாப்புண்ட பெருமானுக்கு அடிமை செய் என்றால், Adimai Sei Endraal - (நெஞ்சே! நீ) அடிமை செய் என்று சொன்னால் நெஞ்சினார், Nenjinaar - எனது நெஞ்சானது செய்யாது, Seiyyaadhu - அப்படியே அடிமை செய்யாமல் எமக்கென்று, Emakkendru - என் வார்த்தை கேளாத ஸ்வாகத் திரியம் பாராட்டி தாம் செய்யும தீ வினைக்கே, Thaam Seiyyum Thee Vinnaikkee - (வெகுகாலமாகத்) தான் செய்து வருகிற தப்புக் காரியத்திலேயே தாழ்வுறுவர், Thaazhvuruvaar - ஊன்றியிருக்கின்றது; இங்கு, Inku - இப்படிப்பட்ட நிலைமையில் யாம் செய்வது யாது, Yaam Seivathu Yaadhu - நான் செய்யத்தக்கது என்னோ? |