திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2671 | பெரிய திருவந்தாதி || 87 | இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்
எப்போது மீதேசொல் என்னெஞ்சே–எப்போதும்
கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்
மெய்கழலே ஏத்த முயல். | பதவுரை Show / Hideஎன் நெஞ்சே, En Nenchae - எனது மனமே! நம்மேல் வினை கடிவான், Nammael Vinai Kadivaan - நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக எப்போதும் கை கழலா நேமியான், Eppodhum Kai Kazhalaa Nemiyaan - ஒருபோதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய மொய்கழலே, Moykazhale - அழகிய திருவடிகளையே ஏந்த, Aentha - அதிக்க இப்போதும், Ippodhum - இக்காலத்திலும் இன்னம் இனி சிறிது நின்றாலும், Innam Ini Siridhu Nindraalum - மேலுள்ள காலத்திலும் எப்போதும், Eppodhum - ஆக எந்தக் காலத்திலும் ஈதே சொல், Eedhe Sol - இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும். |