திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2671 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2671பெரிய திருவந்தாதி || 87
இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும் எப்போது மீதேசொல் என்னெஞ்சே–எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான் மெய்கழலே ஏத்த முயல்.
பதவுரை Show / Hide
என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே!
நம்மேல் வினை கடிவான், Nammael Vinai Kadivaan - நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக
எப்போதும் கை கழலா நேமியான், Eppodhum Kai Kazhalaa Nemiyaan - ஒருபோதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய
மொய்கழலே, Moykazhale - அழகிய திருவடிகளையே
ஏந்த, Aentha - அதிக்க
இப்போதும், Ippodhum - இக்காலத்திலும்
இன்னம் இனி சிறிது நின்றாலும், Innam Ini Siridhu Nindraalum - மேலுள்ள காலத்திலும்
எப்போதும், Eppodhum - ஆக எந்தக் காலத்திலும்
ஈதே சொல், Eedhe Sol - இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும்.