Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2615 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2615பெரிய திருவந்தாதி || 31
அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,
நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக்
குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு.
நல்வினையை தீர்ப்பான், Nalvinaiyai Theerppaan - வலிய பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக (- (வல்வினையைத் தீர்ப்பதற்கு அறிந்த உபாயம் இதுவே.))
அழகும் அறிவோம் ஆய், Azhagum Arivom Aay - அழகிய உபாயத்தை அறிந்தோமாக,
குடங்கள், Kudangal - குடங்களை
தலை மீது எடுத்துக்கொண்டு, Thalai Meedhu Eduththukondu - தலையின் மேலே எடுத்து வைத்துக்கொண்டு
சுழல ஆடி, Suzhala Aadi - ஆகாசத்திலே சுழன்று வரும்படி கூத்தாடி
அன்று, Anru - முற்காலத்திலே (அக்குடக்கூத்தாடினவிடாய் தீர்வதற்காக)
அத் தட கடலை மேயார் தமக்கு, Ath Thada Kadalai Meyaar Thamakku - (முதலில் விட்டு வந்த) அப்பெரிய திருப்பாற்கடலிலேயே போய்ச் சேர்ந்த பெருமானுக்கு
நிழலும் அடி தாறும் ஆனோம், Nizhalum Adi Thaarum Aanom - பாது நிழலாகவும் பாதரேகையாகவும் உடன்பட்டோமானோம்.