| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2615 | பெரிய திருவந்தாதி || 31 | அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான், நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக் குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத் தடங்கடலை மேயார் தமக்கு. | நல்வினையை தீர்ப்பான், Nalvinaiyai Theerppaan - வலிய பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக (- (வல்வினையைத் தீர்ப்பதற்கு அறிந்த உபாயம் இதுவே.)) அழகும் அறிவோம் ஆய், Azhagum Arivom Aay - அழகிய உபாயத்தை அறிந்தோமாக, குடங்கள், Kudangal - குடங்களை தலை மீது எடுத்துக்கொண்டு, Thalai Meedhu Eduththukondu - தலையின் மேலே எடுத்து வைத்துக்கொண்டு சுழல ஆடி, Suzhala Aadi - ஆகாசத்திலே சுழன்று வரும்படி கூத்தாடி அன்று, Anru - முற்காலத்திலே (அக்குடக்கூத்தாடினவிடாய் தீர்வதற்காக) அத் தட கடலை மேயார் தமக்கு, Ath Thada Kadalai Meyaar Thamakku - (முதலில் விட்டு வந்த) அப்பெரிய திருப்பாற்கடலிலேயே போய்ச் சேர்ந்த பெருமானுக்கு நிழலும் அடி தாறும் ஆனோம், Nizhalum Adi Thaarum Aanom - பாது நிழலாகவும் பாதரேகையாகவும் உடன்பட்டோமானோம். |