| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2593 | பெரிய திருவந்தாதி || 9 | நுமக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென்?, மாலார் தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால் – எமக்கினி யாதானு மாகிடுகாண் நெஞ்சே! அவர்த்திறத்தே யாதானும் சிந்தித் திரு. | நெஞ்சே, Nenje - ஓ மனமே! (மாலார்) அவர் தாம், Malar Avan Thaam - எம்பெருமானாகிற அப்பெரியவர் தாம் சார்வு அரியர் ஆனால், Saarvu Ariyar Anaal - நமக்குக்கிட்ட முடியாதவராயிருக்கும்போது நொந்து உரைத்து என், Nondhu Uraithu En - வாய் நோவச் சொல்வதில் என்ன பயன்? இனி, Ini - இன்று முதலாக எமக்கு ஆதானும் ஆகிடு காண், Emakku Aadhanum Aagidu Kaan - நமக்கு எது வேணுமானாலும் நேரட்டும்; மாலார் தமக்கு, Malar Thamakku - அவ்வெம்பெருமானை நோக்கி நுமக்கு அடியோம் என்று என்று, Numakku Adiyom Endru Endru - “நாங்கள் உமக்கு அடிமைப்பட்டவர்கள்” என்று பல தடவை அவர் திறத்தே, Avar Thiraththae - அப்பெருமான் விஷயமாகவே யாதானும் சிந்தித்து இரு, Yaadhanum Sindhiththu Iru - எதையாவது சிந்தித்துக்கொண்டு கிடப்பாயாக. |