Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2637 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2637பெரிய திருவந்தாதி || 53
ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது,
உன்னடியார்க் கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில்
வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு
வைகுந்த மென்றருளும் வான்.
செம்கண் மால், Semkan Mal - (அடியார்கள் மீது வாத்ஸ்ல்யத்தாலே) சிவந்த திருக்கண்களையுடைய திருமாலே; (- (எத்தனை நன்மை செய்தும் த்ருப்தி பெறாமல்))
யான் உரைப்பது, Yaan Uraippathu - அடியேன் விண்ணப்பஞ் செய்வது
ஒன்று உண்டு, Onru Undu - ஒரு விஷயமுண்டு;
அவர்க்கு, Avarkku - இப்படி பார்க்கின்ற நீ அடியவர்களுக்கு
வைகுந்தம் என்று அருளுமி வான், Vaikundham Endru Arulum Vaan - ஸ்ரீவைகுண்டமென்று சிறப்பித்துச் சொல்லி உதவுகின்ற பரம பதமானது.
நீ, Nee - நீயோ வென்றால்
உன் அடியார்க்கு, Un Adiyarkku - உனது அடியார்களுக்கு
என் செயவன் என்றே இருத்தி, En Seyavan Endrae Iruththi - இன்னமும் என்ன நன்மை செய்வோமென்றே பாரித்திரா நின்றாய்;
நின் புகழில் வைகுந்தம் சிந்தையிலும் இனிதோ, Nin Pugazhila Vaikundham Sindhaiyilum Inidho - உனது திருக்குணங்களிலேயே ஊன்றியிருக்கப்பெற்ற தமது சிந்தையிற் காட்டிலும் சிறந்ததோ?