Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2662 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2662பெரிய திருவந்தாதி || 78
துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும்,
சுற்றத் திணைநாளு மின்புடைத்தா மேலும், – கணைநாணில்
ஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,
ஓவாத வூணாக உண்.
துணை, Thunai - ஸ்நேஹிதர்களும் (- (ஆகிய இவை யெல்லாம்) (நீ அவற்றில் ஆசை கொள்ளாமல்))
நாள், Naal - ஆயுஸ்ஸும்
பெரு கிளையும், Peru Kilaiyum - பிள்ளைகள் பேரன்கனென்கிற பெரிய ஸந்தானமும்
தொல் குணமும், Thol Gunamum - பரம்பரையாக வருகிற நற்குலமும்
சுற்றத்து இணை, Sutraththil Inai - பந்துக்களோடே சேர்ந்திருப்பதும்
நாளும், Naalum - நாள்தோறும்
இன்பு உடைத்து ஆம் எனும், Inbu Udaiththu Aam Ennum - (துக்கத்தை யுண்டு பண்ணாமல்)  ஸந்தோஷத்தையுண்டு பண்ணுவனவென்றே வைத்துக்கொண்õடலும்,
நல்நெஞ்சே, Nalnenje - நல்மனமே!
கணை நாணில் ஒவா தொழில்சார்ங்கன், Kanai Naanil Ovaa Thozhilsaarngan - அம்புகள் நாளில் நின்றும் ஒருகாலும் மாறாதபடி வீரத்தொழில் செய்துகொண்டேயிருக்கிற வில்லையுடையனான இராமபிரானுடைய
தொல் சீரை, Tol Seerai - இயற்கையான நற்குணங்களையே
ஓவாத ஊண் ஆக உண், Ovaadha Oon Aaga Un - நித்யபோக்யமாக அநுபவிக்கக் கடவாய்.