| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2663 | பெரிய திருவந்தாதி || 79 | உள் நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையை யஞ்சுமே, விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில் ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப் பேராயற் காளாம் பிறப்பு. | மண் நாட்டில், Man Naattin - இந்த மண்ணுலகத்திலே ஆர் ஆகி, Aar Aagi - எப்பிறவியிலே பிறந்தவராயினும் என் இழிலிற்று ஆனாலும், En Izhilichirru Aanallum - எப்படிப்பட்ட இழி தொழில்களையுடையவர்களாயினும் ஆழி அம் கைபேர் ஆயற்கு ஆன் ஆம் பிறப்பு, Aazhi Am Kaiper Aayarku Aan Aam Pirappu - திருவாழியை அழகிய கையிலேயுடைய ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அடிமைப்பட்டவர்களாகப் பிறக்கும் பிறவியானது. உன் நாடு தேச அன்றே, Un Naadu Desa Anrre - பரமபதத்திள்ள தேஜஸ்ஸையுடையதன்றோ? ஊழ் வினையை அஞ்சுமே, Oozh Vinaikay Anjumee - அநாதியான பாவங்களைக் குறித்து அஞ்ச வேணுமோ? விண் நாட்டை, Vin Naattai - ஸ்வர்க்க லோகத்தை ஒன்று ஆக, Onru Aaga - ஒரு பொருளாக மெச்சுமே, Mechchume - விரும்பக்கூடுமோ? |