Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2663 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2663பெரிய திருவந்தாதி || 79
உள் நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையை யஞ்சுமே,
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்
பேராயற் காளாம் பிறப்பு.
மண் நாட்டில், Man Naattin - இந்த மண்ணுலகத்திலே
ஆர் ஆகி, Aar Aagi - எப்பிறவியிலே பிறந்தவராயினும்
என் இழிலிற்று ஆனாலும், En Izhilichirru Aanallum - எப்படிப்பட்ட இழி தொழில்களையுடையவர்களாயினும்
ஆழி அம் கைபேர் ஆயற்கு ஆன் ஆம் பிறப்பு, Aazhi Am Kaiper Aayarku Aan Aam Pirappu - திருவாழியை அழகிய கையிலேயுடைய ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அடிமைப்பட்டவர்களாகப் பிறக்கும் பிறவியானது.
உன் நாடு தேச அன்றே, Un Naadu Desa Anrre - பரமபதத்திள்ள தேஜஸ்ஸையுடையதன்றோ?
ஊழ் வினையை அஞ்சுமே, Oozh Vinaikay Anjumee - அநாதியான பாவங்களைக் குறித்து அஞ்ச வேணுமோ?
விண் நாட்டை, Vin Naattai - ஸ்வர்க்க லோகத்தை
ஒன்று ஆக, Onru Aaga - ஒரு பொருளாக
மெச்சுமே, Mechchume - விரும்பக்கூடுமோ?