Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2625 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2625பெரிய திருவந்தாதி || 41
வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கி,-வலியநின்
பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,
பன்னாளும் நிற்குமிப் பார்.
வலியம் என நினைந்து, Valiyam Ena Ninaindhu - நாமே பலசாலிகள்’ என்று நினைத்துக் கொண்டு (- (நீ கைகோகக் காரியம் செய்ததைக் கண்ணால் கண்டு வைத்தும்))
வலிய முடி, Valiya Mudi - வலிதான தலைகள்
இடிய, Idiya - சிதறியொழியும்படி
வாங்கி, Vaangi - போக்கடித்து
நின், Nin - உன்னுடைய
வலிய பொன் ஆழி கையால், Valiya Pon Aazhi Kaiyaal - வலிதாயும் அழகிய திருவாழியையுடையதாயுமுள்ள திருக்கையாலே
புடைத்திடுதி, Pudaitthiduthi - (அந்த மல்லர்களை) அடித்துவிட்டாய்;
வந்து எதிர்த்த மல்லர், Vandhu Edhirththa Mallar - எதிரிட்டு வந்த மல்லர்களுடைய
இப்பார், Ippaar - இவ்வுலகமானது
கீளாதே, Keelaadhe - வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்
பல் நாளும் நிற்கும், Pal Naalum Nirkkum - சிரஞ்ஜீவியாயிருக்கின்றதே! (என்ன கல் நெஞ்சோ!)