| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2625 | பெரிய திருவந்தாதி || 41 | வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர் வலிய முடியிடிய வாங்கி,-வலியநின் பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே, பன்னாளும் நிற்குமிப் பார். | வலியம் என நினைந்து, Valiyam Ena Ninaindhu - நாமே பலசாலிகள்’ என்று நினைத்துக் கொண்டு (- (நீ கைகோகக் காரியம் செய்ததைக் கண்ணால் கண்டு வைத்தும்)) வலிய முடி, Valiya Mudi - வலிதான தலைகள் இடிய, Idiya - சிதறியொழியும்படி வாங்கி, Vaangi - போக்கடித்து நின், Nin - உன்னுடைய வலிய பொன் ஆழி கையால், Valiya Pon Aazhi Kaiyaal - வலிதாயும் அழகிய திருவாழியையுடையதாயுமுள்ள திருக்கையாலே புடைத்திடுதி, Pudaitthiduthi - (அந்த மல்லர்களை) அடித்துவிட்டாய்; வந்து எதிர்த்த மல்லர், Vandhu Edhirththa Mallar - எதிரிட்டு வந்த மல்லர்களுடைய இப்பார், Ippaar - இவ்வுலகமானது கீளாதே, Keelaadhe - வயிறு வெடித்து மாய்ந்து போகாமல் பல் நாளும் நிற்கும், Pal Naalum Nirkkum - சிரஞ்ஜீவியாயிருக்கின்றதே! (என்ன கல் நெஞ்சோ!) |