Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2632 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2632பெரிய திருவந்தாதி || 48
எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,
அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப்பொலிந்த
மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,
கொன்றானை யேமனத்துக் கொண்டு.
அமை பொலிந்த மென் தோளி காரணம் ஆ, Amai Polintha Men Tholi Kaaranam Aa - மூங்கில்போல் பருத்து விளங்குகின்ற மெல்லிய தோள்களையுடையவளான நப்பின்னைப் பிராட்டிக்காக
வெம்கோடு ஏழ் ஏறு, Vemkodu Ezha Eru - கொடிய கொம்புகளையுடைய ஏழு நாளைகளை
உடனே, Udaney - ஒரு நொடிப்பொழுதில்
சொன்றானையே, Sonranaie - முடிந்த எம்பெருமானையே
மனத்துகொண்டு, Manathukondu - சிந்தையில் தியானித்துக் கொண்டு
யாம், Yaam - அடியோம்
விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை, Vin Naatukku Uchasamudhu Aam Veettai - மேலுலகங்களுக்கெல்லாம் மேற்பட்டதான பரமபதத்தை
எமக்கு அமைத்திருந்தோம், Emakku Amaithirundhom - எமக்கு (ப்ராப்யபூமியாகப்) பாரித்துக் கொண்டிருக்கின்றோம்.
அஃது அன்றே ஆம் ஆற, Aghthu Andrae Aam Aaru - அப்படி யிருப்பதுன்றோ (முழுக்ஷுத்வத்திற்கு) ஏற்றிருப்பது.