| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2632 | பெரிய திருவந்தாதி || 48 | எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை, அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப்பொலிந்த மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே, கொன்றானை யேமனத்துக் கொண்டு. | அமை பொலிந்த மென் தோளி காரணம் ஆ, Amai Polintha Men Tholi Kaaranam Aa - மூங்கில்போல் பருத்து விளங்குகின்ற மெல்லிய தோள்களையுடையவளான நப்பின்னைப் பிராட்டிக்காக வெம்கோடு ஏழ் ஏறு, Vemkodu Ezha Eru - கொடிய கொம்புகளையுடைய ஏழு நாளைகளை உடனே, Udaney - ஒரு நொடிப்பொழுதில் சொன்றானையே, Sonranaie - முடிந்த எம்பெருமானையே மனத்துகொண்டு, Manathukondu - சிந்தையில் தியானித்துக் கொண்டு யாம், Yaam - அடியோம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை, Vin Naatukku Uchasamudhu Aam Veettai - மேலுலகங்களுக்கெல்லாம் மேற்பட்டதான பரமபதத்தை எமக்கு அமைத்திருந்தோம், Emakku Amaithirundhom - எமக்கு (ப்ராப்யபூமியாகப்) பாரித்துக் கொண்டிருக்கின்றோம். அஃது அன்றே ஆம் ஆற, Aghthu Andrae Aam Aaru - அப்படி யிருப்பதுன்றோ (முழுக்ஷுத்வத்திற்கு) ஏற்றிருப்பது. |