Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2595 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2595பெரிய திருவந்தாதி || 11
நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,
வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத
பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,
நீரும்நீ யாய்நின்ற நீ.
ஆழாத பாரும் நீ, Aazhaadha Paarum Nee - (நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு;
நீரும் நீ, Neerum Nee - ஜலதத்வமும்*;
தீயும் நீ, Theeyum Nee - தேஜஸ்தத்வமும் நீ;
காலும் நீ, Kaalum Nee - வாயுதத்வமும் நீ;
வானும் நீ, Vaanum Nee - ஆகாசமும் நீ;
ஆய் நின்ற நீ, Aay Nindra Nee - இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாகவுடைய நீ,
நாழால் அமர் முயன்ற, Naazhaal Amar Muyantra - அஹங்காரத்தினால் யுத்தம் செய்வதில் கைவைத்த
வல் அரக்கன், Val Arakkan - கொடிய இராவணனுடைய
இன் உயிரை, In Uyirai - இனிமையான பிராணனை
வாழா வகை, Vaazha Vagai - வாழ்ந்திருக்க ஒட்டாமல்
வலிதல், Valithal - கவர்ந்து கொண்டது
நின்வலியே, Ninvaliye - உனக்கு ஒரு சூரத்தனமோ? அல்ல.