| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2656 | பெரிய திருவந்தாதி || 72 | முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் மென்பர் – முதல்வா, நிகரிலகு காருருவா! நின்னகத்த தன்றே, புகரிலகு தாமரையின் பூ. | முதல்வா, Muthalvaa - ஸகலகாரண பூதனான பெருமானே! மூன்று திரு உருவம் முதல் ஆம் என்பர், Moondru Thiru Uruvam Mudhal Aam Enbar - பிரமன் விஷ்ணு சிவன் என்கிற மூன்று திவ்ய மூர்த்திகள் தலைவராவர்’ என்று சிலர் சொல்லுவார்கள்; மூன்றுக்கும் ஒன்றே முதல் ஆகும் என்பர், Moondrukkum Ondrae Mudhal Aagum Enbar - ‘மேற்சொன்ன மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கும்’ என்று மற்றுஞ் சிலர் சொல்லுவார்கள். நிகர் இலகு கார் உருவா, Nikar Ilaku Kaar Uruvaa - மேகமொன்று சொல்லலாம்படி அதனோடொத்து விளங்காநின்ற திருமேனியை யுடையவனே! புகர் இலகு தாமரையின் பூ, Pugar Ilaku Thaamaraik Koo - தேஜஸ்ஸுமிக்கு விளங்குகின்ற தாமரைப் பூவானது நின் அகத்தது அன்றே, Nin Agaththathu Andrae - உன்னிடத்திலுள்ளதன்றோ? (திருநாபிக்கமலமே உனது பரத்வத்தை வெளியிடவல்லது என்றவாறு.) |