Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2638 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2638பெரிய திருவந்தாதி || 54
வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ?
கானோ? ஒருங் கிற்றும் கண்டிலமால்,- ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்துயரை யாவா! மருங்கு.
ஆன் ஈன்ற கண்டு, Aan Eendra Kandu - பசுவினால் பெறப்பட்ட வத்ஸாஸுரனை (- (இன்னவிடத்தில் மறைந்து போயினவென்று தெரியவில்லை;))
உயர எறிந்து, Uyara Erindhu - (விளாமரத்தின்) மேலே வீசியெறிந்து
காய் உதிர்த்தார், Kaai Uthirthaar - (அவ்விளாமரத்தின்) காய்களை உதிர்த்த கண்ணபிரானுடைய
தாள், Thaal - திருவடிகளை
பணிந்தோம், Panindhom - ஆச்ரயித்தோம் (அதன் பிறகு)
வன் துயரை, Van Thuyarai - வலிய (நமது) பாவங்களை
மருங்கு கண்டிலம், Marungu Kandilam - ஸமீபத்தில் காணோம்;
ஒருங்கிற்று, Orungitru - (அப்பாவங்கள்) மறைந்து போனவிடம்
வானோ, Vaano - ஆகாசமோ?
மறி கடலோ, Mari Kadaloo - மடிந்து மடிந்து அலையெறிகி கடலோ?
மாருரமோ, Maruramo - காற்றோ?
தீயகமோ, Thiyakamo - நெருப்போ?
கானோ, Kaano - காடோ?
ஆ ஆ ஆல், Aa Aa Aal - ஐயோ பாவம்.