Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2642 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2642பெரிய திருவந்தாதி || 58
மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது
பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால்
பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,
மறப்பின்மை யான்வேண்டும் மாடு.
மாலே, Maale - திருமாலே! (- (உன் திருவடிகளில் கைங்கரியம் பண்ணவேணுமென்று அடியேன் ஆசைப்படவில்லை.))
உனது, Unathu - உன்னுடைய
பால்போல் சீரில் பழுந்தொழிந்தேன், Paalpol Seeril Pazhunthozhindhen - பால்போலப் பரம போக்யாமன திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்;
இனி, Ini - இனிமேல்
பிறப்பு இன்மை பெற்று, Pirappu Inmai Petru - வீடுபெற்று
அடி கீழ், Adi Keezh - (உனது) திருவடிவாரத்திலே
குற்றவேல், Kuttraveel - கைங்கரியம் பண்ணுவது
யான் வேண்டும் மாடு அன்று, Yaan Vendum Maadu Andru - அடியேன் அபேஷிக்கிற செல்வமன்று;
படிசோதி, Padisothi - (உன்னுடைய) திவ்யமங்கள விக்ரஹ தேஜஸ்வை
மாற்றேல், Maatreel - எனக்கு ஒரு காலும் மாற்றாமல் நிற்யாநுபவ விஷயமாக்க வேணும் ;
மேலால், Melal - மேலுள்ள காலத்திலே
மறப்பு இன்மை, Marappu Inmai - உன்னை மறவாதிருந்தால் போதுமென்பதே
யான்வேண்டும் மாடு, Yaanvendum Maadu - அடியேன் ஆசைப்படும் செல்வம்.