| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2642 | பெரிய திருவந்தாதி || 58 | மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால் பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று, மறப்பின்மை யான்வேண்டும் மாடு. | மாலே, Maale - திருமாலே! (- (உன் திருவடிகளில் கைங்கரியம் பண்ணவேணுமென்று அடியேன் ஆசைப்படவில்லை.)) உனது, Unathu - உன்னுடைய பால்போல் சீரில் பழுந்தொழிந்தேன், Paalpol Seeril Pazhunthozhindhen - பால்போலப் பரம போக்யாமன திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து விட்டேன்; இனி, Ini - இனிமேல் பிறப்பு இன்மை பெற்று, Pirappu Inmai Petru - வீடுபெற்று அடி கீழ், Adi Keezh - (உனது) திருவடிவாரத்திலே குற்றவேல், Kuttraveel - கைங்கரியம் பண்ணுவது யான் வேண்டும் மாடு அன்று, Yaan Vendum Maadu Andru - அடியேன் அபேஷிக்கிற செல்வமன்று; படிசோதி, Padisothi - (உன்னுடைய) திவ்யமங்கள விக்ரஹ தேஜஸ்வை மாற்றேல், Maatreel - எனக்கு ஒரு காலும் மாற்றாமல் நிற்யாநுபவ விஷயமாக்க வேணும் ; மேலால், Melal - மேலுள்ள காலத்திலே மறப்பு இன்மை, Marappu Inmai - உன்னை மறவாதிருந்தால் போதுமென்பதே யான்வேண்டும் மாடு, Yaanvendum Maadu - அடியேன் ஆசைப்படும் செல்வம். |