| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2654 | பெரிய திருவந்தாதி || 70 | அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை, சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும் மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே யாதாகில் யாதே இனி? | அடர்பொன் முடியானை, Adarpon Mudiyaanai - அடர்ந்த பொன்மயமான திருவபிஷேகத்தையுடையவனும் ஆயிரம் பேரானை, Aayiram Peraanai - ஸஹஸ்ரநாமங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும் சுடர்கொள் சுடர் ஆர்யானை, Sudarkol Sudar Aaryanai - (சந்திர ஸூர்யன் முதலியன) சுடர்களையெல்லாம் வென்று விளங்குகின்ற திருவாழியையுடையவனுமான எம்பெருமானை. இடர் கடியும் மாதா பிது ஆக, Idar Kadiyum Maatha Pithu Aaga - துக்கங்களைப் போக்கவல்லதாயும் தந்தையுமாக எனது உள்ளே வைத்தேன், Enathu Ullae Vaiththen - என்னுடைய ஹ்ருதயத்திலே இருத்தினேன்; இனி, Ini - இனிமேல் யாது ஆகில் யாதே, Yaadhu Aagil Yaadhe - (எனக்கு) என்ன நேர்ந்தாலென்ன? |