| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2665 | பெரிய திருவந்தாதி || 81 | பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,–தகவாத் தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என்றோரார், செழும்பரவை மேயார் தெரிந்து. | செழு பரவை மேயார், Sezhu Paravai Meyaar - அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான், இவர் தகவாதொழும்பர், Ivar Thagavathozhumbar - “இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்; சீர்க்கும் துணை இலர், Seerkum Thunai Ilar - சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்” என்று தெரிந்து ஓரார், Endru Therinthu Ooraar - என்பதை ஊன்றி ஆராயாதவனாய் பகல் இரா என்பதுவும் பாவியாது இருபொழுதும், Pagal Ira Enbadhum Paaviyadhu Irupozhudhum - பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும் இகல் செய்து, Ikal Seidhu - வலிகட்டாயப்படுத்தி எம்மை ஆள்வர், Emmai Aalvar - அடியேனை அநுபவியா நின்றான். |