| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2640 | பெரிய திருவந்தாதி || 56 | வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே! ஒருவாறொருவன் புகவாறு,-உருமாறும் ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம், மாயவர்தாம் காட்டும் வழி. | ஒருவன், Oruvan - எந்த சேதானும் (- (அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக)) ஒரு ஆறு, Oru Aaru - எந்த உபாயாந்தரத்திலும் புகா ஆறு, Pugaa Aaru - பிரவேசிக்க வேண்டாதபடி உரு மாறும், Uru Maarum - தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற ஆயவர் தாம், Aayavar Thaam - ஸ்ரீகிருஷ்ணனானவனும் சேயவர் தாம், Seyavar Thaam - ஆஸுரப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும் அன்று உலகம் தாயவர் தாம், Andru Ulagam Thaayavar Thaam - முன்பொருநாள் உலகங்களைத் தாலியளந்தவனும் மாயவர் தாம், Maayavar Thaam - ஆச்சரியருமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான் காட்டும் வழி, Kaattum Vazhi - காட்டுகிற உபாயம் வரவு ஆறு ஒன்று, Varavu Aaru Ondru - இன்னவழியாக வந்ததென்று தெரியாது; வாழ்வு இனிது, Vazhvum Inidhu - பலன் போக்யமாயிரா நின்றது; ஆல் எல்லே, Aal Ellae - ஆச்சரியம் |