Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2640 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2640பெரிய திருவந்தாதி || 56
வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே!
ஒருவாறொருவன் புகவாறு,-உருமாறும்
ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,
மாயவர்தாம் காட்டும் வழி.
ஒருவன், Oruvan - எந்த சேதானும் (- (அவர்களுடைய காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டு நடத்துவதற்காக))
ஒரு ஆறு, Oru Aaru - எந்த உபாயாந்தரத்திலும்
புகா ஆறு, Pugaa Aaru - பிரவேசிக்க வேண்டாதபடி
உரு மாறும், Uru Maarum - தனது ஸ்வரூப ஸ்வபாவங்களை மாற்றிக் கொள்ளுகிற
ஆயவர் தாம், Aayavar Thaam - ஸ்ரீகிருஷ்ணனானவனும்
சேயவர் தாம், Seyavar Thaam - ஆஸுரப்ரக்ருதிகளுக்கு) எட்ட முடியாதவனும்
அன்று உலகம் தாயவர் தாம், Andru Ulagam Thaayavar Thaam - முன்பொருநாள் உலகங்களைத் தாலியளந்தவனும்
மாயவர் தாம், Maayavar Thaam - ஆச்சரியருமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
காட்டும் வழி, Kaattum Vazhi - காட்டுகிற உபாயம்
வரவு ஆறு ஒன்று, Varavu Aaru Ondru - இன்னவழியாக வந்ததென்று தெரியாது;
வாழ்வு இனிது, Vazhvum Inidhu - பலன் போக்யமாயிரா நின்றது;
ஆல் எல்லே, Aal Ellae - ஆச்சரியம்