Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2589 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2589பெரிய திருவந்தாதி || 5
பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையா ராவாரும் நீபேசில்,- எற்றேயோ!
மாய! மா மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா! காட்டும் நெறி.
மாய, Maaya - மாயவனே!
அம்மா, Amma - ஸ்வாமியே!
பேசில், Pesil - உன்னால் நான் பெய்ய உபகாரங்களைப் பேசப் புகுந்தால்
பெற்ற தாய் நீயே, Petra Thaai Neeye - பெற்றதாய் போலே ப்ரியமானதையே செய்பவனும் நீயே;
பிறப்பித்த தந்தை நீ, Pirappiththa Thandhai Nee - உண்டாக்கின பிதாவைப் போல ஹிதமானதையே செய்பவனும் நீயே;
மற்றையர் ஆவாரும் நீ, Mattraiyar Aavaarum Nee - மற்றும் ஆசாரியரும் நீயே;
மா மாயவளை மாய, Maa Maayavalai Maaya - மஹத்தான வஞ்சனையையுடைனான பூதனையை முடிப்பதற்காக
முலை, Mulai - (அவளது விஷந்தடவின) முலையை
வாய் வைத்த நீ, Vaai Vaiththa Nee - அமுது செய்த நீ
காட்டும் நெறி, Kaattum Nerii - எனக்குக் காட்டின வழிகள்
எற்றே ஓ, Ettre O - என்ன ஆசாரியமானவை ( என்று உருகுகிறார்.)