Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2661 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2661பெரிய திருவந்தாதி || 77
உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,
இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்,
நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்
சொல்நன்றி யாகும் துணை.
இரைக்கும் கடல், Iraikkum Kadhal - கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே
கிடந்த, Kidandha - பள்ளிக்கொண்டிரா நின்ற
எந்தாய், Endhai - ஸ்வாமீ!
உரைக்கில், Uraikkil - ஆராய்ந்து சொல்லில்,
ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே, Oru Sutraththaar Utraar Endru Aarae - (நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ?
எனது உயிர்க்கு, Enathu Uyirkkum - என் ஆத்மாவுக்கு
ஓர் சொல், Oru Sol - ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்கிற சரமச்லோகமாகிற ஒரு சொல்லாலே
நன்றி ஆகும் துணை, Nandri Aakum Thunai - உதவிசெய்யும் துணையும்
உரைப்பு எல்லாம், Uraippu Ellam - மற்றும் சொல்லப்படுகிற எல்லாவகையான துணையும்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய், Nin Andri Matru Ileen Kandaai - உன்னைத் தவிர வேறொருவரையும் உடையே னல்லேனுகாண்.