Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2623 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2623பெரிய திருவந்தாதி || 39
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே! பேசாய்,
தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால்
போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே
வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு.
நெஞ்சமே, Nenjamai - ஓ மனமே!
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை, Thazhaikkum Thuzhai Maarvan Thannai - தழைத்தோங்குகின்ற திருத்துழாய் மாலையைத் திருமார்விலே யுடையனான எம்பெருமானைக் குறித்து
அழைத்து, Azhaitthu - கூப்பிட்டு
ஒருகால், Orukaal - அவனுக்குத் திருவுள்ளமானவொரு காலத்திலே
போய், Poy - பரமபதத்திலே சென்று
பொலிய, Poliya - நன்றாக
உபகாரம், Upakaaram - கைங்கரியங்கள் செய்கையாகிற உபகாரத்தை
கொள்ளாது, Kollaadhu - கொள்ள முயலாமல்
அவன் புகழே, Avan Pugazhe - அப்பெருமானது திருக்குணங்களையே
வாய் உபகாரம் கொண்ட, Vaai Upakaaram Konda - வாயாலே சொல்லிக்கொண்டருக்கையாகிற
வாய்ப்பு, Vaippu - இந்த நேர்பாடு
பிழைக்க முயன்றோமோ, Pizhaikka Muyanrom - தப்பு செய்ததாமோ?
பேசாய், Pesai - நீ சொல்வாய்.