Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2602 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2602பெரிய திருவந்தாதி || 18
தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக,
பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப்
பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு.
தாம்பால் ஆப்புண்டாலும், Thaampaala Aappundhaalum - (அசோதையினால்) தாம்பு கொண்டு கட்டியடிக்கப் பெற்றாலும்
அத்தழும்புதான் இளக, Aththalumbudhaan Ilaga - அந்தத் தாம்பினால் கட்டினத்தாலுண்டான காய்ப்பு அற்பதம் என்னும்படி
பாம்பால், Paampaala - காளியனாகிய பாம்பினால்
ஆப்புண்டு, Aappundu - கட்டப்பட்டு
பாடு உற்றாலும், Paadu Utralaam - கஷ்டங்களையடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்)
சோம்பாது, Soombaadhu - (ஜகத்ஸ்ருஷ்டியில்) சோம்பல்படாமல்
இ பல் உருவை எல்லாம், I Pal Uruvai Ellam - இவ்வுலகில் காணப்படுகிற பலபல பிராணிகளையெல்லாம்.
படர்வித்த, Padarvitha - விஸ்தாரமாக வுண்டாக்கின
வித்தா, Viththa - ஆதிமூலமே!
உன் தொல் உருவை ஆர் அறிவார், Un Thol Uruvai Aar Arivaar - உன்னுடைய திவ்ய ஸ்வரூபத்தை அறிவாருண்டோ?
சொல்லு, Solla - நீயே சொல்லு.