Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2653 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2653பெரிய திருவந்தாதி || 69
அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,
முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால்
சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,
ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து?
வல்வினையர் ஆவார், Valvinaiyar Aavaar - கடுமையான பாவங்களானவை (- (தங்களுடைய குடியிருப்பை யிழந்தமையாலே))
அகம் சிவந்த கண்ணினர் ஆய், Aham Sivantha Kanninar Aay - (கோவத்தினால் உள்ளே சிவந்த கண்களையுடையனவாய்
முக்கி, Mugki - வருந்தி
முகம் சிதைவராம் அன்றே, Mugam Sithaivaraam Andrae - முகம் வாடியிருக்கின்றனவல்லவோ?
மிகும், Mikum - எல்லாரிலும் மேற்பட்டவனான
திருமால், Thirumaal - திருமாலினுடைய
சீர் கடலை, Seer Kadalai - கல்யாண குணங்களாகிற கடலை
உள் பொதிந்த, Ull Pothintha - உள்ளே அடக்கிக் கொண்ட
சிந்தனையேன் தன்னை, Sindhanaiyen Thannai - சிந்தனையை யுடையேனான என்னை
செவ்வே, Sevvae - செவ்வையாக
அடர்ந்து, Adarnthu - நெருக்கி
ஆர்க்கு அடல் ஆம், Aarkku Adal Aam - யாரால் உபத்ரவிக்க முடியும்? (ஒருவராலும் என்னைத் திரஸ்கரிக்க முடியாது.)