Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2596 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2596பெரிய திருவந்தாதி || 12
நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்?
போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும்
காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.
நெஞ்சே, Nenje - ஓ மனமே! (- (என்னை வருத்தத்திற்கு ஆளாக்கப் பார்த்தது நீயேயன்றோ.) (உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்வித்துக் கொள்ளுகிறீர்’ என்ற நெஞ்சு பதில் சொல்ல) (உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்’ என்று நெஞ்சு பதில் சொல்ல) (இப்போது முடிவாகச்சொல்கிறேன் கேள்;)- (கண்டாய்  –  முன்னிலையசை))
ஆழ் துயரில், Aazh Thuyaril - அநாதமான துக்க ஸாகரத்தில்
வீழ்விப்பான், Veelvippaan - என்னைக் கொண்டு போய்த் தள்ளுவதாக
நின்று உழன்றாய் நீ அன்றே, Nindru Uzhandraai Nee Andrae - இடைவிடாதே நின்று யத்னம் பண்ணினது நீயன்றோ;
போய் ஒன்று சொல்லி என், Poi Ondru Solli En - மேன்மேலும் நீயொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ, Po - அது கிடக்கட்டும்.
உபதேசம்தரினும், Upadesamtharinum - (எம்பெருமானுக்கு நம்பக்கல் உள்ளூற வாத்ஸல்ய முண்டு’ என்று உனக்கு நான்) உபதேசித்தாலும்
நீ காழ்ந்து என்றும் கைக்கொள்ளாய், Nee Kaazhndhu Endrum Kaikkollai - நீ என்மேற் கோபங்கொண்டு என்றைக்கும் (அவ்வுபதேசத்தைக்) குறிக்கொள்கிறாயில்லை;
போய் ஒன்று சொல்லி என், Poi Ondru Solli En - மேன்மேலும் நீ யொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்?
போ, Po - அது கிடக்கட்டும்.
கண்ணன் தான், Kannan Thaan - எம்பெருமானது திருவடிகளை
வாழ்த்துவதே, Vaazhthuvathe - வாழ்த்துவதுதான்
வழக்கு, Vazhakku - நியாயம்