| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2596 | பெரிய திருவந்தாதி || 12 | நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்? போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும் காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு. | நெஞ்சே, Nenje - ஓ மனமே! (- (என்னை வருத்தத்திற்கு ஆளாக்கப் பார்த்தது நீயேயன்றோ.) (உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்வித்துக் கொள்ளுகிறீர்’ என்ற நெஞ்சு பதில் சொல்ல) (உம்மை ஆழ்துயரில் வீழ்வித்தது நானன்று; நீரே நும்மை வீழ்த்துக் கொள்ளுகிறீர்’ என்று நெஞ்சு பதில் சொல்ல) (இப்போது முடிவாகச்சொல்கிறேன் கேள்;)- (கண்டாய் – முன்னிலையசை)) ஆழ் துயரில், Aazh Thuyaril - அநாதமான துக்க ஸாகரத்தில் வீழ்விப்பான், Veelvippaan - என்னைக் கொண்டு போய்த் தள்ளுவதாக நின்று உழன்றாய் நீ அன்றே, Nindru Uzhandraai Nee Andrae - இடைவிடாதே நின்று யத்னம் பண்ணினது நீயன்றோ; போய் ஒன்று சொல்லி என், Poi Ondru Solli En - மேன்மேலும் நீயொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்? போ, Po - அது கிடக்கட்டும். உபதேசம்தரினும், Upadesamtharinum - (எம்பெருமானுக்கு நம்பக்கல் உள்ளூற வாத்ஸல்ய முண்டு’ என்று உனக்கு நான்) உபதேசித்தாலும் நீ காழ்ந்து என்றும் கைக்கொள்ளாய், Nee Kaazhndhu Endrum Kaikkollai - நீ என்மேற் கோபங்கொண்டு என்றைக்கும் (அவ்வுபதேசத்தைக்) குறிக்கொள்கிறாயில்லை; போய் ஒன்று சொல்லி என், Poi Ondru Solli En - மேன்மேலும் நீ யொன்று நானொன்றாக வாதப்ரதிவாதங்கள் சொல்லுவதில் என்ன பயன்? போ, Po - அது கிடக்கட்டும். கண்ணன் தான், Kannan Thaan - எம்பெருமானது திருவடிகளை வாழ்த்துவதே, Vaazhthuvathe - வாழ்த்துவதுதான் வழக்கு, Vazhakku - நியாயம் |